அயோத்தியில் உள்ள ராமர் கோவில் பூமி பூஜை அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று 40 கிலோ வெள்ளி செங்கலை நாட்டுகிறார்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/ops-2.jpg)
இதற்காக பிரதமர் மோடிக்கு தமிழ்நாடு துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவருடைய பதிவில் அவர் குறிப்பிட்டது: இந்துக்களின் நெடுநாளைய கனவு நிறைவேறும் வண்ணம் வரலாற்றுச் சிறப்பு மிக்க “அயோத்தியில் இராமர் கோவில்” கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, அடிக்கல் நாட்டவுள்ள மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.