இந்திய விமான படையின் தலைமை தளபதி பதாரியா மிக் 21 பைசன் விமானத்தை ஒட்டி பறந்து சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/badaria.jpg)
தளபதி ஆர்கேஎஸ் பதாரியா, இந்திய விமானப் படையின் மேற்குப் பிரிவு முன்களப் பகுதியை ஆய்வு நடத்தினர். இதன் பின் விமானப் படை வீரர்களுடன் கலந்துரையாடல் நடத்தினர். அந்த சமயத்தில் மிக் 21 பைசன் விமானத்தில் பறந்து சென்று ஆய்வு செய்தார்.
லடாக் எல்லை சீனா உடன் மோதல் நிலவும் நிலையில், விமானப் படையின் செயல்பாட்டை தெரிவிக்கும் வகையில் பதாரியாவின் செயல் இருக்கிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.