இன்று விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகைக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/modi-7-1-1024x576.jpg)
மத்திய அரசின் வழிகாட்டுதல் படி மாநிலங்களில் கொரோனா காரணத்தினால் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது, ஊர்வலம் ஆகிய விஷயங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் மக்கள் வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர்.
![](https://netrikkan.com/wp-content/uploads/2020/08/vinayagar-charthuthi-1-1024x970.jpg)
பிரதமர் மோடி அவரின் ட்விட்டர் பக்கத்தில் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவரின் பதிவில்; கணேஷ் சதுர்த்தியின் புனித பண்டிகைக்கு வாழ்த்துக்கள். பகவான் ஸ்ரீ கணேஷின் ஆசீர்வாதம் எப்போதும் நம்மீது இருக்கட்டும். எல்லா இடங்களிலும் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கட்டும் என பதிவிட்டுள்ளார்.