
கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தருவது என்ற பேச்சுக்கு இடமில்லை என கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் பெய்யவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அங்கு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. இதுகுறித்து கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் “கர்நாடக மாநிலத்திலேயே தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் கிருஷ்ணசாகர் அணையிலிருந்து […]
Continue reading …
மஞ்சும்மள் பாய்ஸ் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் ரிலீசானது. கேரளா மட்டுமின்றி தமிழகத்திலும் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்துள்ளது. இதுவரை 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இப்படத்தைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் சர்ச்சையான விமர்சனத்தை தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டிருந்தார். அதில் “மஞ்சும்மெல் பாய்ஸ் எனக்கு எரிச்சல் ஊட்டும் படமாக இருந்தது என்றும் அதில் காட்டுவது புனைவு அல்ல, தென்னகத்தில் சுற்றுலா வரும் கேரளத்து பொறுக்கிகளிடம் அதே மனநிலை தான் உள்ளது. குடி குடி குடி […]
Continue reading …
சபாநாயகர் அப்பாவு பொன்முடிக்கு மீண்டும் எம்.எல்.ஏ பதவி வழங்கப்படுவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். பொன்முடி மற்றும் அவரது மனைவி வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து உடனடியாக பொன்முடி தனது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ., பதவிகளை இழந்தார். இவ்வழக்கு தொடர்பாக பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு […]
Continue reading …
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் 1930ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி மகாத்மா காந்தி அடிகள் தலைமையில் நடைபெற்ற தண்டி யாத்திரை போராட்டத்தை நினைவுபடுத்தும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அப்பதிவில் அவர், “வன்முறை இல்லாமல் மக்கள் போராட்டங்களின் வழியாக நம்முடைய உரிமைகளை மீட்டு விட முடியுமெனும் நம்பிக்கையை தண்டி யாத்திரை மூலமாக தன்னுடைய சகாக்களுக்கும், இந்தியாவிற்கும் நிரூபணம் செய்தார் காந்தி. 1930 மார்ச் 12-ம் தேதி சத்தியாகிரகத்துக்குப் […]
Continue reading …
அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில், இசையமைப்பாளரும், நடிகருமான ஜீ.வி.பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் ‘ரெபல்’. இப்படம் வரும் மார்ச் 22ம் தேதி திரைக்கு வருகிறது. இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில், ஸ்டுடியோ கிரீன் நிர்வாக இயக்குநர் தனஞ்செயன், இயக்குநர் நிகேஷ், நாயகி மமிதா பைஜு, அம்மா கிரியேஷன்ஸ் ஜி.சிவா, இயக்குநர் […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டாது என்று அறிவித்துள்ளார். நேற்று முதல் நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் அமுலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழ்நாட்டில் நடைமுறைபடுத்த மாட்டாது. சிஏஏ சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இனம் மதம் ஆகியவற்றால் […]
Continue reading …
ராஜஸ்தான் ஜெய்சால்மரில் இந்திய விமானப்படையின் LCA தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகிறது. இந்திய விமானப்படையின் LCA தேஜஸ் போர் விமானம் ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சால்மரில் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தில் பயணித்த 2 விமானிகளும் பாராசூட் மூலம் உயிர் தப்பினர். இந்த விமானம் முற்றிலும் உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் முதன்முறையாக விபத்தில் சிக்கியுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.01.2024 முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மக்கள் நலன் கருதி தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தும் பல முன்னோடித்திட்டங்களை நாடே வியந்து பார்க்கும் வகையில் நடைமுறைபடுத்துவதில் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது. கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையே அரசு […]
Continue reading …
காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஆறு முதல் எட்டு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்று பிடிவாதமாக இருந்தது. திடீரென பத்து தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது திமுகவின் மேலிட வட்டாரத்திற்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரமுகர்கள் சிலர் 10 தொகுதிகள் தராவிட்டால் புது ரூட் போட்டு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மேல் இடத்தில் சொன்னதாகவும் அதற்கு மேலிடமும் பச்சைக்கொடி காட்டி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்து கொண்ட திமுக, அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் […]
Continue reading …
தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்டனர். அவர்களை 22 பேரை மார்ச் 22ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை நீதிமன்றம் உத்திரவிட்டதை தொடர்ந்து, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் மீனவர்கள் அடைக்கப்பட்டனர். இலங்கை கடற்படையினர் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்ததாக கூறி கைது செய்வதோடு படகுகளையும் பறிமுதல் செய்து வருகின்றன. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கை சிறையில் இருக்கும் மீனவர்களை விடுவிக்க […]
Continue reading …