
மார்ச் 18ம் தேதி வரை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் காவலை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு […]
Continue reading …
பொன்முடி குற்றவாளி என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த நகல் வெளியானதையடுத்து, மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் சொத்துக்குவிப்பு வழக்கில் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதற்கிடையே பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார். நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இம்மனுவை கடந்த இரு தினங்களுக்கு முன் […]
Continue reading …
மார்ச் 20ம் தேதி வரை 2024ம் ஆண்டிற்கான இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இவ்வறிவிப்பில், “ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பப் பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரியுள்ளனர். அதனடிப்படையில் மேற்காணும் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி மார்ச் 20 என நீட்டிக்கப்படுகிறது. மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ளவும் கோரிக்கை […]
Continue reading …
பிரதமர் மோடி உலகளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். இன்று பிரதமர் மோடி குஜராத்தில் இரண்டு மற்றும் அசாமில் ஒன்று உட்பட சுமார் ரூ.1.25 லட்சம் கோடி மதிப்பில் 3 செமி கண்டெக்டர் ஆலைகளுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார். பின் பேசிய பிரதமர் மோடி, “உலகளவில் செல்போன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. இந்தியா ஏ.ஐ., தொழில் நுட்பத்தை விரிவுப்படுத்தி வருகிறது. 3 செமிகண்டெக்டர் ஆலைகள் மூலம் […]
Continue reading …
சமீபத்தில் முதல் முறையாக நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பின் சமீபத்தில் முதல் முறையாக அரசியல் குறித்த அறிக்கை வெளியிட்டார். அவரது அறிக்கையில் மத்திய அரசு அமல்படுத்திய சிஏஏ சட்டத்திற்கு எதிராக இருந்தது. விஜய்யின் இந்த அறிக்கைக்கு முக்கிய அரசியல் கட்சிகள் எந்தவித விமர்சனம் செய்யவில்லை.ஒரு சில அரசியல் தலைவர்கள் மட்டும் ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனம் செய்து வந்தனர். விஜய்யின் அரசியல் அறிக்கைக்கு நடிகை கஸ்தூரி, “அன்பிற்குரிய தளபதி விஜய் தன் அரசியல் ஆலோசகர்களை கவனமாக […]
Continue reading …
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா டாடா நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளது என்று தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு தேவையான பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் வெளியாகி செயல்படுத்தி வருகிறது. டாடா நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ் நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, “தமிழ் நாட்டில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பிலான வாகன தயாரிப்பு தொழிற்சாலையை அமைக்க டாடா நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு இடையே முதலமைச்சர் […]
Continue reading …
வரவிருக்கும் விரைவில் மக்களவை தேர்தலுக்காக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளும், திமுக, அதிமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, உள்ளிட்ட பல்வேறு மாநில கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பற்றி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பாஜக சமீபத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. அதன்படி முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில், 34 அமைச்சர்களுக்கு மீண்டும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. மக்களவை தேர்தல் 2024-க்காக 2ம் கட்ட வேட்பாளர் […]
Continue reading …
உச்சநீதிமன்றம் நாளை எஸ்பிஐ வங்கி தேர்தல் பத்திர விவரங்களை தாக்க செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது. ராகுல்காந்தி தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். உச்சநீதிமன்றம் இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலமாக நிதியளிப்பதை சமீபத்தில் தடை செய்தது. மேலும் இதுவரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியளித்தவர் விவரங்களை அளிக்கக் கோரி எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கால அவகாசம் கேட்டு எஸ்பிஐ கோரிக்கை விடுத்த நிலையில் நாளைக்குள் எஸ்பிஐ தேர்தல் பத்திர ஆவணங்களை தாக்கல் செய்ய […]
Continue reading …
இம்மாதம் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இத்திரைப்படத்தின் நாயகி மற்றும் தயாரிப்பாளர் குறித்த விவரங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. “பரியேறும் பெருமாள்,” “கர்ணன்” மற்றும் “மாமன்னன்” ஆகிய மூன்று திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் மாரி செல்வராஜ் தற்போது விக்ரம் நடிக்க இருக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க உள்ளது. படத்தின் நாயகனாக துருவ் விக்ரமும், படத்தின் நாயகியாக அனுபமா பரமேஸ்வரன் நடிக்க இருப்பதாகவும் […]
Continue reading …
50க்கும் மேற்பட்ட அருந்தியினர் சமுதாய மக்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இ.நடுப்பட்டி கிராமத்தில் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீடுகளுக்கு செல்லும் பொதுப்பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், 7 ஏக்கர் பஞ்சமி நிலத்தை மீட்டுத் தர கோரியும் மாவட்ட நிர்வாகத்திடமும், உசிலம்பட்டி வருவாய்த்துறையினரிடமும் பலமுறை மனு அளித்து முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்பட வில்லை என கூறப்படுகிறது. இன்று பொதுப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோரி தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் […]
Continue reading …