
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கான தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி பற்றிய விவரங்கள் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். வருகிற 25-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று பேச உள்ளதாக பா.ஜ.க. கட்சித் தரப்பில் கூறப்பட்டிருந்தது. இக்கூட்டத்துக்காக தமிழகம் முழுதும் இருந்து சுமார் 10 லட்சம் தொண்டர்களை திரட்டவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பிரதமர் […]
Continue reading …
மத்திய அமைச்சர் அமித்ஷா போல பேசி முன்னாள் எம்.எல்.ஏவிடம் மர்ம கும்பல் பேசி பண மோசடி செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை சேர்ந்த கிஷன்லால் உத்தர பிரதேசத்தில் கடந்த ஆட்சியில் எம்.எல்.ஏவாக இருந்தவர். சமீபத்தில் கிஷன்லாலுக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அதில் பேசியவர் தன்னை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எனவும், நாடாளுமன்ற தேர்தலில் கிஷன்லாலுக்கு எம்.பி சீட் தர தயாராக உள்ளதாகவும், அதற்கு அவர் சில லட்சங்கள் தர வேண்டும் […]
Continue reading …
வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழக பாஜகவின் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென அவருக்கு கவர்னர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும், கன்னியாகுமரி தொகுதிக்கு பெண் வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. பொன் ராதாகிருஷ்ணன் ஏற்கனவே கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று இணை அமைச்சரானார். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாஜக தேசிய தலைமை அவரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக […]
Continue reading …
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அதிமுகவை எப்படியாவது பாஜக கூட்டணிக்கு கொண்டுவர தீவிர முயற்சி செய்தார். அதிமுக பிடிவாதமாக பாஜகவுடன் கூட்டணியில்லை என உறுதிபட கூறிவிட்டது. அடுத்த கட்டமாக பாஜக கூட்டணியில் ஜிகே வாசனின் தமாக கட்சி இணைய இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப் போவதாகவும் அதையடுத்து மேலும் சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. முதல் கட்டமாக பாட்டாளி மக்கள் கட்சியை பாஜக கூட்டணிக்கு கொண்டுவரும் முயற்சியை ஜிகே வாசன் எடுப்பார் என்றும் அதன் […]
Continue reading …
சமூக ஆர்வலர்கள் வேங்கை வயல் விவகாரம் நடந்து 415 நாட்களாகியும் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாத நிலையில் தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளும் இவ்விவகாரத்தை கண்டுகொள்ளவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் உள்ள கிராமத்தில் உள்ள குடிநீர் தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவம் நடந்தது. இதையடுத்து 5 பிரிவுகளின் மேல் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. ஆனால், இன்று வரை குற்றவாளிகள் […]
Continue reading …
வனத்துறை கோவை அருகே உள்ள மருதமலை முருகன் கோவில் பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பக்தர்களை எச்சரித்துள்ளது. அறுபடை வீடுகளுக்கு நிகரான முருகனின் வழிபாட்டு ஸ்தலமாக கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவில் உள்ளது. ஏராளமான பக்தர்கள் தினம்தோறும் மருதமலை முருகனை தரிசிக்க வந்த செல்கின்றனர். கந்த சஷ்டி மற்றும் கார்த்திகையை முன்னிட்டு மருதமலை முருகன் கோவில் செல்வோர் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மருதமலை கோவில் பாதையில் சிறுத்தை ஒன்று நடமாடுவது அங்கிருந்த கேமராக்களில் பதிவாகியுள்ளது. […]
Continue reading …
நடிகர் தனுஷ் தனது 50வது திரைப்படத்தை தானே இயக்கி ஷூட்டிங்கை முடித்துள்ளார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்துள்ளார். தற்போது இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. படத்தை ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் […]
Continue reading …
பிரதமர் மோடி அபுதாபியில் 900 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை திறந்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டு அதிபரை சந்தித்து இரு தரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, துபாய் மன்னரும், ஐக்கிய அரபு அமீரக பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் உடன் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, துபாயில் நடைபெற்ற உலக அரசு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு […]
Continue reading …
இன்று நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10, 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி உள்ளது. இதற்காக பொதுத் தேர்வு எழுத மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இன்று முதல் சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு தொடக்கம் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இன்று நாடு முழுவதும் சுமார் 39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பொது தேர்வை எழுதுகின்றனர். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 10 மணிக்கு முன்பே தேர்வு மையங்களுக்கு வர வேண்டும் என சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது. மேலும் […]
Continue reading …
பிரியங்கா காந்தி கடந்த சில ஆண்டுகளாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசியல் செய்து கொண்டிருந்தார். தற்போது தேசிய அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் அவர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாகவும் அதுமட்டுமின்றி அவர் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. காங்கிரஸ் இந்தியா கூட்டணியில் தேசியளவில் பிரபலமாக இருக்கும் ஒரு முகத்தை கொண்டு வர வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது. அவ்வகையில் பிரியங்கா காந்தியை களமிறக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாமல் இருந்த […]
Continue reading …