
ஊடகங்களில் திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்தன. இதுகுறித்து காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஐந்து தொகுதிகள், புதுவையை சேர்த்து ஆறு தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்பதை திமுக பிடிவாதமாக இருப்பதால் காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த முறை கொடுத்த 10 தொகுதியாவது கொடுக்க வேண்டும் என்றும் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பாராளுமன்றத் […]
Continue reading …
இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. அமலாக்கத்துறை செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவருக்கு ஜாமீன் இன்னும் கிடைக்கவில்லை. சமீபத்தில் அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால் இந்த முறை கண்டிப்பாக அவருக்கு ஜாமீன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்றைய […]
Continue reading …
விஜய்யை வைத்து “துப்பாக்கி,” “கத்தி” மற்றும் “சர்கார்” ஆகிய ஹிட் திரைப்படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். அந்த வரிசையில் 4வது படமாக விஜய் 65 படத்தை அவர்தான் இயக்கவிருந்தார். ஆனால் அவர் ரஜினியை வைத்து இயக்கிய “தர்பார்” திரைப்படம் மிகப்பெரிய தோல்வியடைந்த நிலையிலும், சம்பளம் விஷயத்தில் ஏற்பட்ட முரண்பாடுகளாலும் முருகதாஸ் அந்த படத்திலிருந்து விலகினார். அதையடுத்து மீண்டும் ஹிட் படம் கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டுமென நினைத்த இப்போது அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தை உருவாக்கவுள்ளார். […]
Continue reading …
சிறுத்தை சிவா இயக்கத்தில் “கங்குவா” திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ளார். அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் “புறநானூறு” படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்கிறது. சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் “வாடிவாசல்” திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சூர்யாவோடு இயக்குனர் அமீர் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் இடம்பெறும் வைத்தி என்ற ஒரு துணைக் கதாபாத்திரத்தில் சூரியை நடிக்க […]
Continue reading …
விவசாயிகள் கடந்த இரண்டு நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகள் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிப்ரவரி 13ம் தேதி பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் மத்திய அரசுக்கு எதிராக டில்லியை நோக்கி செல்லும் பேரணி போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தை தடுக்க ஹரியானா மாநில அரசு மற்றும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை […]
Continue reading …
மத்திய அரசு தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இச்செயலை கண்டித்து வரும் 11.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் இராமேஸ்வரத்தில், கழக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் ஒருங்கிணைப்பில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக அறிவிப்பில், “கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 3076 தமிழ்நாடு மீனவர்கள் கைது செயப்பட்டுள்ளனர் 534 படகுகள் கடத்தப்பட்டுள்ளன. […]
Continue reading …
என்ஐஏ அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் சோதனை செய்தனர். நாம் தமிழர் கட்சியை நிர்வாகிகளின் வீட்டில் சோதனை செய்தனர். நாம் தமிழர் நிர்வாகிகள் சிலர் என்ஐஏ அதிகாரிகள் முன் ஆஜராகி விளக்கமளித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளன. தற்போது தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. நெல்லை, மதுரை, கோவை உள்ளிட்ட பல இடங்களில் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக கோவை கார் வெடிகுண்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என […]
Continue reading …
கடந்த சில நாட்களுக்கு முன் விஜய் அரசியல் கட்சி குறித்த அறிவிப்பு வெளியானது. தற்போது விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த தூத்துகுடி மாவட்ட நிர்வாகி திடீரென திமுகவில் இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் மக்கள் இயக்கம் என்பது தமிழக வெற்றி கழகமாக மாறி உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள நிர்வாகிகள் அப்படியே தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகளாக மாறுவார்கள் என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் தூத்துகுடி […]
Continue reading …
இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துகளை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று திருச்சி செல்லப் போதிய பேருந்துகள் இல்லாததால் பல மணி நேரமாக காத்திருப்பதாகவும், கிளாம்பாக்கம் வரும் பேருந்துகளில் இருக்கைகளில் முன்பதிவு செய்யப்பட்டு இருப்பதால் ஆத்திரமடைந்து பயணிகள் புகார் அளித்து, பேருந்துகளை சிறைப்பிடித்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, “நேற்றைய தினம் இரவு, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்குச் செல்வதற்காக, சென்னையின் பல பகுதிகளில் இருந்து […]
Continue reading …
பிரேமலதா விஜயகாந்த் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 14 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி கொடுக்கும் அணியுடன் கூட்டணி என அறிவித்த நிலையில் அவரது ஆஃபரை யாரும் ஏற்க முன்வரவில்லை. மூன்று தொகுதிகள் மட்டுமே தர முடியும் என்றும் ராஜ்யசபா தொகுதி குறித்து பின்னர் யோசித்துக் கொள்ளலாம் என்றும் பாஜக தரப்பிலிருந்து கூறப்பட்டது. ஆனால் அதிமுக தரப்பில் மூன்று தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி தரலாம் என்று கூறியதாக தெரிகிறது. இதற்கு பிரேமலதா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. […]
Continue reading …