
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அனைத்துக் கட்சிகளும் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சு வார்த்தையில் முனைப்புடன் உள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் இத்தேர்தலிலும் இருக்கும் நிலையில் கூட்டணியில் இணையும் கட்சிகள் குறித்த எவ்வித பிரச்சனையும் இல்லை. ஆனால் அதே நேரத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்குவதில் சில பிரச்சனைகள் இருப்பதாகவும் குறிப்பாக கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக இம்முறை 25 தொகுதிகளில் போட்டியிட திட்டமிடப்பட்டு இருப்பதால் கூட்டணி […]
Continue reading …
போலி சமூக வலைதள கணக்குகள் தனது மகள் பெயரில் பதிவு செய்து பண மோசடி செய்து வருவதாக மகேஷ்பாபுவின் மனைவி நர்மதா ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். நடிகர் மகேஷ் பாபுவுக்கு சித்தாரா என்ற மகள் உண்டு. இவர் மகேஷ் பாபு நடித்த ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். சமூக வலைதளத்திலும் இவர் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் ஒரு சிலர் சித்தாரா பெயரில் போலியான சமூக வலைதள கணக்குகளை தொடங்கி அதிலிருந்து சிலருக்கு லிங்குகள் அனுப்பி பணம் மோசடியில் […]
Continue reading …
பிரதமர் மோடிக்கு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், “மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து கூட்டு முயற்சி அடிப்படையில், 50:50 என்ற சமபங்கு வீதத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதற்கட்டப் பணிகள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 63,246 கோடி ரூபாய் செலவில், 119 கிலோமீட்டர் நீளமுள்ள மேலும் மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் […]
Continue reading …
திருப்பதி ஏழமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு சென்ற நடிகர் ஜெயம் ரவியிடம் செய்தியாளர்கள் விஜய்யின் அரசியல் கட்சி குறித்த கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல மறுத்துள்ளார். தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை நடிகர் விஜய் சமீபத்தில் தொடங்கினார். அவரது அரசியல் கட்சி குறித்து பல்வேறு திரையுலக பிரபலங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். குறிப்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். நடிகர் ஜெயம் ரவி நடித்துள்ள “சைரன்” திரைப்படம் அடுத்த வாரம் […]
Continue reading …
அமலாகத்துறை மும்பையின் முன்னாள் என்.பி.சி மண்டல இயக்குனர் சமீர் வான்கடே மீது புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போதைப் பொருள் வழக்கில் இருந்து காப்பாற்ற ஷாருக்கானின் குடும்பத்தினரிடம் லஞ்சம் கேட்டதாக சிபிஐ தொடர்ந்த வழக்கின்படி, புதிய வழக்குப் பதியப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். அதாவது, மும்பையில் இருந்து கோவாவுக்கு கார்டிலியா நிறுவனத்தின் சொகுசுக் கப்பல் சுற்றுலாவுக்கு புறப்பட்டது. இதில், என்சிபி அதிகாரிகளும் பயணம் செய்தனர். இந்த கப்பலின் கேளிக்கை விருந்தின்போது, […]
Continue reading …
சத்யசிவா “கழுகு” மற்றும் “கழுகு 2” உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இப்போது அவர் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் லிஜோ மோல் உள்ளிட்டவர்கள் நடிக்கும் “ஃப்ரீடம்“ படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீசாகியுள்ளது. இத்திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டரை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். “ஃப்ரீடம்” படத்தை பாண்டியன் பரசுராமன் தயாரிக்கிறார். படத்துக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைக்க, உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். சிநேகன், மோகன் ராஜா ஆகியோர் பாடல்களை எழுதுகின்றனர். வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. சசிகுமாரின் […]
Continue reading …
காங்கிரஸ் பிரமுகர் நாராயணசாமி புதுச்சேரியில் தமிழிசை வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டால் அவரை தோல்வியடைய தீவிர முயற்சி செய்வோம் என்று கூறியுள்ளார். தற்போது புதுச்சேரி கவர்னராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும் புதுவை தொகுதியை அவர் தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. புதுவை தொகுதியில் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றால் அவர் அமைச்சராகவும் வாய்ப்பு இருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதுவை தொகுதியில் தமிழிசை சௌந்தர்ராஜன் போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் […]
Continue reading …
கோவை விமான நிலையத்திற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை முடித்து விட்டு மும்பை செல்வதற்காக வந்தார். மும்பையில் நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமைச்சர் உதயநிதி கோவையிலிருந்து கிளம்பினார். கோவை விமான நிலையம் வந்த அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏராளமான தொண்டர்கள் குவிந்து இருந்தால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமான நிலையத்திற்குள் செல்லும் பொழுது அவரை மட்டும் உள்ளே அனுமதித்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், உடன் […]
Continue reading …
பேஸ்புக் லைவ் விவாவத்தில் பங்கு கொண்ட சிவசேனா கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ மகனும், முன்னாள் கவுன்சிலருமான அபிஷேக் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மும்பையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த வினோத் கோசல்கர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ ஆவார். இவரது மகன் அபிஷேக் அப்பகுதியில் முன்னாள் கவுன்சிலராக இருந்தவர். அபிஷேக் கவுன்சிலராக இருந்தபோதிலிருந்து சமூக ஆர்வலரான மோரிஸ் என்பவருடன் மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. […]
Continue reading …
நடிகர் விஜய் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் வெற்றி பெற உண்மையாக உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழக வெற்றி கழகம் எனும் புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார். டில்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயரை அவர் பதிவு செய்ததோடு, வருகின்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை, ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று நடிகர் விஜய் […]
Continue reading …