Home » Posts tagged with » Netrikkan (Page 128)

பாஜகவிலிருந்து பிரிய காரணம் கூறிய எடப்பாடியார்!

Comments Off on பாஜகவிலிருந்து பிரிய காரணம் கூறிய எடப்பாடியார்!

அதிமுக கட்சி பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக பிரிவதற்கான காரணம் குறித்து பேசியுள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்காக மாநில, தேசிய கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிக்காக தயாராகி வருகின்றன. ஆனால் இந்த பேச்சுக்கள் தொடங்கும் முன்னதாகவே முந்தைய நாடாளுமன்ற தேர்தல் முதலாக கூட்டணியிலிருந்து வந்த பாஜக மற்றும் அதிமுகவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணம் தமிழக பாஜகவின் தலைமையே எனவும் பேசிக் கொள்ளப்பட்டது. தற்போது பாஜக […]

Continue reading …

உதகையில் மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு! முதலமைச்சர் இரங்கல்!

Comments Off on உதகையில் மண்சரிவில் 7 பேர் உயிரிழப்பு! முதலமைச்சர் இரங்கல்!

இன்று உதகையில் உள்ள காந்தி நகரில் வீடு கட்டும் பணியின்போது ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 7 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இன்று உதகையில் உள்ள காந்தி நகரில் வீடு கட்டும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. புதிய வீட்டுக்கான கழிவறை அமைக்கும் பணியில் 6 பெண்கள் உட்பட 10 கட்டுமான பணியாளர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அருகில் கழிவுறைக்காக தோண்டப்பட்ட குழியின் அருகே மண் சரிவு ஏற்பட்டு பணியாளர்கள் மீது விழுந்தது. இதில் 10 பேரும் மண்ணில் […]

Continue reading …

டில்லியில் கர்நாடக காங்கிரஸ் போராட்டம்!

Comments Off on டில்லியில் கர்நாடக காங்கிரஸ் போராட்டம்!

டில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் மத்திய அரசின் வரிப் பகிர்வுக் கொள்கைகளை எதிர்த்து கர்நாடக காங்கிரஸ் கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. கடந்த ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் சமமான நிதி பகிர்வு இல்லை என்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு என முக்கிய அறிவிப்புகள் எதுவுமே இடம்பெறவில்லை எனவும் கர்நாடகா குற்றம் சாட்டியிருந்தது. இதை கண்டித்து டில்லியில் போராட்டம் நடத்தப் போவதாகவும் கர்நாடக அரசு அறிவித்து இருந்தது. டில்லி ஜந்தர் மந்தரியில் நடைபெற்ற […]

Continue reading …

மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம்!

Comments Off on மனிதநேய மக்கள் கட்சி தீர்மானம்!

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தில், “கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மயிலாடுதுறை தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்டது. 2019 நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் 2021ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு மனிதநேய மக்கள் கட்சி அரும்பாடுபட்டது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட பாபநாசம், […]

Continue reading …

செந்தில் பாலாஜி மனு பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பு!

Comments Off on செந்தில் பாலாஜி மனு பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பிப்ரவரி 15ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த 2023 ஜூன் 14-ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்தனர். இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் […]

Continue reading …

கூட்டணிக்கு நிபந்தனை விதித்த பிரேமலதா!

Comments Off on கூட்டணிக்கு நிபந்தனை விதித்த பிரேமலதா!

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 14 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி மாவட்டச் செயலாளருடன் பிரேமலதா ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம், “தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை யாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை. 14 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம். 2014 […]

Continue reading …

விஜய்யிடம் தொலைபேசியில் என்ன பேசினார் ரஜினி?

Comments Off on விஜய்யிடம் தொலைபேசியில் என்ன பேசினார் ரஜினி?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு கட்சி தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் கட்சிக்கு பல திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் […]

Continue reading …

உணவுக்காக அம்மாவை கொன்ற மகன்!

Comments Off on உணவுக்காக அம்மாவை கொன்ற மகன்!

அம்மா உணவு சமைத்து தராததால் அவரது மகனே அவரை கொலை செய்துள்ளார். கர்நாடகம் மாநிலம் பெங்களூர் கே.ஆர். புரம் பீமய்யா லே அவுட் பகுதியில் வசிக்கும் சந்திரப்பா மற்றும் இவரது மனைவி நேத்ரா(40) தம்பதிக்கு 17 வயதில் உள்ளார். இவர் கோலார் மாவட்டம் மும்பாகலில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகிறார். நேத்ரா ஆடம்பர பிரியை என்றும் அவருக்கு வேறொருவருடன் தொடர்பு இருந்ததால் வீட்டில் சரியாக சமைக்காமல், வெளியில் அடிக்கடி சுற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், […]

Continue reading …

புதிய தேர்தல் ஆணையர் யார்?

Comments Off on புதிய தேர்தல் ஆணையர் யார்?

பிரதமர் மோடி தலைமையிலான குழுவின் கூட்டம் இன்று புதிய தேர்தல் ஆணையர் யார்? என்பது குறித்து முடிவு செய்ய இன்று டில்லியில் கூடியது. இன்று பிரதமர் மோடி தலைமையிலான தேர்வுக்குழு புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய கூடுகிறது. பிரதமர் மோடி பரிந்துரைக்கும் மத்திய அமைச்சர், மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆகியோர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இயற்றப்பட்ட சட்டத்தின் படி முதல் […]

Continue reading …

மகள்களுக்கு தந்தை பாலியல் தொல்லை!

Comments Off on மகள்களுக்கு தந்தை பாலியல் தொல்லை!

தந்தை ஒருவர் தனது 11 வயது, 12 வயது மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கில் அவருக்கு 123 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் மஞ்சேரி பகுதியை சேர்ந்த ஒருவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இவர்களில் 11 வயது மற்றும் 12 வயது பெண் குழந்தைகளுக்கு தந்தையே பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் தந்தையின் பாலியல் தொல்லையை பொறுக்க முடியாத இரண்டு […]

Continue reading …