
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஸ் அழகிரி நேருவைப் பற்றி பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களவையில் நேற்று உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்திய மக்களின் திறமையை நேரு, இந்திராகாந்தி நம்பவில்லை, நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருந்தனர் என்று முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிற வகையில் கோயபல்ஸ் பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். குஜராத்தின் முதலமைச்சராக இருந்த போது ஆயிரக்கணக்கான அப்பாவி இஸ்லாமியர்கள் படுகொலை செய்யபட்ட போது, […]
Continue reading …
கேரள அரசு மாநில அரசின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவதை எதிர்க்கும் பட்சத்தில் தமிழக முதலமைச்சர் கேரள அரசுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் இதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “மாநில அரசுகளின் நிதி நிர்வாகத்தில் தன்னிச்சையான மற்றும் பாரபட்சமான கட்டுப்பாட்டைச் செயல்படுத்தி, மாநிலங்களின் குரல்வளையை நெரிக்க ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை எதிர்த்து, மாண்பமை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ள கேரள […]
Continue reading …
சமீபத்தில் புதிய நாடாளுமன்றாத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தது. இதற்கு, காங்கிரஸ், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் தெரிவித்தனர். தென் மாநிலங்கள் தொடர்ந்து பாஜக அரசால் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் விமர்சனம் முன்வைக்கப்பட்டது. நிதிப்பங்கீட்டில் மத்திய அரசு தொடர்ந்து கர்நாடகாவுக்கு அநீதி இழைத்து மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது என்று அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா கூறியதுடன், நாளை கர்நாடகம் அரசு சார்பில் டில்லியில் நடைபெறும் போராட்டத்தில் அமைச்சர் […]
Continue reading …
நடிகர் விஜய்க்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது புதிய அரசியல் கட்சியை அறிவித்து தனது அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதில், 2024ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் தான் தங்கள் இலக்கு என்று தெரிவித்திருந்தார். விஜய்யின் அரசியல் வருகை மற்றும் அவரது புதிய கட்சிக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும், சினிமாத் துறையினரும் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக தொலைக்காட்சி நடத்துவதே மக்களிடம் இருந்து உண்மைகளை மறைக்கத்தான்- என்று கூறியுள்ளார். மேலும் அவர் வரும் 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைந்த உடன் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று கூறியிருந்தார். இதற்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “ஒரு ஒப்பீட்டுக்கு– தமிழ்நாட்டில் இப்போதிருக்கும் அரசுப் பணிகள் எண்ணிக்கை மொத்தம் சுமார் 9.5 லட்சம்… ஙியிறி கூறுவது என்னவென்றால், சுமார் 7.6 கோடி மக்கள் உள்ள மாநிலத்தில் 2.397 […]
Continue reading …
பட்டாசு ஆலையில் எற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் பலியாகினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.- உயிரிழந்தோர் குடும்பத்திற்கு மத்திய பிரதேச அரசு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி அறிவித்துள்ளது. மத்திய பிரேதேசத்தில் முதலமைச்சர் மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ஹர்தா பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் பலத்த காயமடைந்த 100 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]
Continue reading …
திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவினர் மக்களவைத் தேர்தலையொட்டி வடசென்னை மற்றும் தென் சென்னை மாவட்ட நிர்வாகிகளுடன், ஆலோசனை நடத்தி வருகின்றனர். திமுக தலைமை ஜனவரி 24ம் தேதி முதல் பிப்ரவரி 5ம் தேதி வரை சென்னையில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி கிருஷ்ணகிரி, திருவள்ளூர், பொள்ளாச்சி, கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, சேலம், தருமபுரி, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, தேனி, […]
Continue reading …
நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 2000ம் ஆண்டு உலக அழகிப் பட்டத்தை வென்றவர். இவர் தமிழ் சினிமாவில் விஜய்க்கு ஜோடியாக “தமிழன்” திரைப்படம் மூலம் அறிமுகமானார். இவர் தற்போது உயிருக்கு பயந்து ரூ.160 கோடி மதிப்புள்ள வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார். பின்னர், பாலிவுட் சினிமாவில் கிரிஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் கடந்த 2018ம் ஆண்டு அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை திருமணம் செய்து கொண்டார். தற்போது, ஹாலிவுட் மற்றும் வெப் சிரீஸ் […]
Continue reading …
மர்ம நபர் ஒருவர் மும்பை நகரில் 6 முக்கிய இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்று மெசேஜ் மூலம் மிரட்டல் விடுத்துள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். மும்பையில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக வொர்லியில் உள்ள போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று நள்ளிரவு 12:30 மணிக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில், மும்பை நகரில் 6 முக்கிய இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என்ற மிரட்டலுடன் தகவல் வந்ததாக மும்பை போலீசார் கூறியுள்ளனர். இதையடுத்து, மும்பை மாநகர் முழுவதும் போலீசார் பாதுகாப்பு […]
Continue reading …
இன்று திருவான்மியூர் பகுதியில் 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த யோவான் ஆண்டவர் என்பவரை நீலாங்கரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை திருவான்மியூரில் சாக்லெட் தருவதாக அழைத்துச் சென்று 3 சிறுமிககள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவான்மியூர் பகுதியில் சாக்லேட் தருவதாகக் கூறி, 3 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முக்கிய குற்றாவாளி கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த அடையாறு பகுதியைச் சேர்ந்த […]
Continue reading …