
பாரதிய ஜனதாவுக்கு அயோத்தி கோயில் திறக்கப்பட்டதன் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் பெரும் செல்வாக்கு ஏற்பட்டுள்ளது. சோனியா காந்தி உத்தரபிரதேசத்தில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாகவும் அதுமட்டுமின்றி அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் ராஜ்யசபா எம்பி ஆக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. சோனியா காந்தி ஒருவர் மட்டுமே கடந்த 2019ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ரேபேலி என்ற தொகுதியில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தி கூட அமேதி தொகுதியில் தோல்வியடைந்தார். இம்முறை மீண்டும் சோனியா காந்தி […]
Continue reading …
கடந்த 1933 ஆம் ஆண்டு தாராபுரத்தில் உள்ள மொழிஞ்சிவாடியில் பிறந்தவர்தான் தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் நாகேஷ். ஆரம்ப காலத்தில் இந்திய ரயில்வே துறையில் வேலை செய்து வந்த நாகேஷ், நாடகத்துறையில் மீது உள்ள ஆர்வத்தால் நடிகரானார். அப்போது, பிரபல காமெடியனாக இருந்த சந்திரபாபுக்குப் போட்டியாகவும் அதேசமயம், தனது தனித்தன்மையுடன் படங்களில் நடித்துப் புகழ்பெற்றார். அவரது திறமைக்கேற்ப பிரபல பட அதிபர்கள் முன்னணி நடிகர்களான சிவாஜி, எம்.ஜி. ஆர் படங்களில் காமெடியனாக்கினர். 1000 படங்களுக்கு […]
Continue reading …
Paytm பேமெண்ட் வங்கி சேவைகளை இந்திய ரிசர்வ் வங்கி இன்று முதல் நிறுத்தியதாக அறிவித்துள்ளது. இனி Paytm செயலில் எந்தவொரு வாடிக்கையாளர் கணக்கு, ப்ரீபெய்டு கருவிகள், வாலட்கள் மற்றும் பாஸ்ட் டேக் போன்றவற்றில் டெபாசிட் அல்லது டாப்-அப்களை ஏற்க RBI தடை விதித்துள்ளது. இந்தத நடவடிக்கை Paytm நிறுவனத்திற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது. இந்தியாவில் மிகப்பெரிய பணம் செலுத்தும் நிறுவனங்களில் ஒன்றாக இருந்த Paytm நிறுவனம் 500 மில்லியன்க்கும் அதிகமான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தொடர்ந்து விதிமீறலில் ஈடுபட்டு […]
Continue reading …
மணிசங்கர் அய்யர் மகள் ராமர் கோயில் திறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்ததால் கடும் கண்டனம் எழுந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் மன்னிப்பு கேளுங்கள் அல்லது வீட்டை காலி செய்யுங்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மணிசங்கர் அய்யர் மகள் ராமர் கோவில் திறப்பு விழா அன்று தனது சமூக வலைத்தளத்தில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்று நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். இந்த உண்ணாவிரதம் மூலம் […]
Continue reading …
இன்று பாராளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அதில் பல்வேறு வரி சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பே செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சில பொருள்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. செல்போன் தயார்பில் பயன்படுத்தப்படும் பேட்டரி கவர், முன்பக்க, நடுப்பக்க, பின்பக்க கவர், லென்ஸ், ஸ்குரு, சிம் சாக்கெட் உள்ளிட்ட சில பொருள்களுக்கு 15 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில் […]
Continue reading …
இன்று முதல் தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது வகைகளின் விலை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் அரசுக்கு சொந்தமான இயங்கி வருகின்றன. இதில் பல்வேறு வகையான மதுபானங்கள் விற்கப்பட்டு வருகிறது. மதுப்பிரியர்களின் விருப்ப பானமான பிராந்தி குவார்ட்டர் ஒன்று ப்ராண்டை பொறுத்து குறைந்தது ரூ.180ல் இருந்து விற்பனையாகி வருகிறது. முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வைத்து டாஸ்மாக் ஊழியர்கள் விற்பனை செய்வதாக எழுந்த புகாரில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சமீப […]
Continue reading …
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தார். நேற்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு முதல் முறையாக வருகை தந்த குடியரசு தலைவர் முர்முவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், கடந்த 6 மாதங்களாக பொருளாதார வளர்ச்சி 7 […]
Continue reading …
சமீபத்தில் நடிகர் சாந்தனு நடிப்பில் வெளியான “ப்ளூ ஸ்டார்” திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தன் தந்தையுடன் அவர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ஒரு நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். அசோக் செல்வன் மற்றும் சாந்தனு உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவான படம் “ப்ளூ ஸ்டார்.” இத்திரைப்படத்தில் இவர்களுடன் இணைந்து, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள், குமரவேல் உள்ளிட்டவர்கள் முக்கிய வேடங்களில் நடித்தனர். ஜெயகுமார் இயக்கிய இப்படத்தை பா. ரஞ்சித் தயாரித்திருந்தார். இப்படம் கடந்த 25ம் தேதி வெளியானது. இப்படம் கிரிக்கெட் […]
Continue reading …
“குட்னைட்” திரைப்படம் கடந்தாண்டு மே மாதம் வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீசான இத்திரைப்படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இந்த படத்தில் “ஜெய்பீம்” புகழ் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். விறுவிறுப்பாக இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. படத்துக்கு “லவ்வர்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து படத்தின் […]
Continue reading …
பூண்டு வரத்து குறைந்துள்ளதால் பூண்டின் விலை உயர்ந்துள்ளது. பூண்டின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நாளுக்கு நாள் பூண்டின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ பூண்டு ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனையாகி வந்தது. தற்போது அதிரடியாக விலை வேகமாக உயர்ந்து கிலோ ரூ.400 வரை உச்சம் தொட்டுள்ளது. சென்னை மார்க்கெட்டிற்கு அதிக அளவிலான பூண்டு கொள்முதல் உத்தரபிரதேசத்தில் இருந்தே நடக்கிறது. […]
Continue reading …