
திமுக தலைமைக் கழகம் நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி திமுக சார்பில் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு, தேர்தல் அறிக்கையை தயாரிக்க குழு, கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு ஒன்றை அமைக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அதிமுக பாஜக இடையே பிளவு ஏற்பட்டுள்ளதால், வருகின்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில் ஒரு புதிய கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]
Continue reading …
முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்தார். இந்த பேட்டி குறித்து கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர் சந்திப்பு என்றால் என்ன என்பதை பாஜகவினரை பார்த்து உதயநிதி தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், “அந்த பத்திரிகையாளர் சந்திப்பு 40 நிமிடம் நடந்ததாகவும் அதில் 38 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அனைத்து கேள்விகளும் நட்பு முறையில் கேட்கப்பட்ட கேள்வி. ஒரு கேள்வி கூட தமிழகத்தின் […]
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகன்நாதன் மீதான வழக்கை விசாரணை செய்ய தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகன்நாதன் மீது சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கை தடை செய்ய வேண்டும் என துணைவேந்தர் ஜெகன்நாதன் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனு இன்று விசாரணைக்கு வந்த போது சேலம் பெரியார் பல்கலைகழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான வழக்கை விசாரிக்க தடை என வழக்கு விசாரணைக்கு […]
Continue reading …
வெளிமாநில மது பாட்டில்களை சீர்காழி அருகே திருமுல்லைவாசலில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவின் பேரில், சீர்காழி மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் செல்வி, தலைமையில் தனிப்படை உதவி காவல் ஆய்வாளர் மணிகண்டகணேஷ், ராஜேந்திரன் மற்றும் போலீசார் திருமுல்லைவாசல் பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனை நடைபெற்று வருவதாக வந்த புகாரின் பேரில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது திருமுல்லைவாசல் அம்பேத்கர் நகர் […]
Continue reading …
நான்கு நண்பர்கள் மொபைல் கேம் பாஸ்வேர்டு தராததால் ஒரு மாணவனை கொலை செய்த சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் பாப்பை தாஸ் என்ற 18 வயது மாணவன் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அவர் தனது சக நண்பர்களுக்கு மொபைல் பாஸ்வேர்டை கூறவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த நான்கு நண்பர்கள் பாப்பை தாஸ் என்ற மாணவனை கொலை செய்ததாக தெரிகிறது. இதையடுத்து நான்கு நண்பர்களையும் காவல்துறையினர் கைது செய்து […]
Continue reading …
சட்டப்பேரவை கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ளது. ஜனவரி 23ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இக்கூட்டத்திற்கு தலைமை வகிப்பார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 23ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் சட்டப்பேரவை கூட உள்ள நிலையில் அது குறித்து ஆலோசனை செய்யவும் சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரை சமூகமாக நடத்தவும் […]
Continue reading …
தனுஷ், நாகார்ஜுனா, சேகர் கம்முலா, ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி, அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இணையும்#DNS படத்தின் வழக்கமான படப்பிடிப்பு பூஜை தொடங்கப்பட்டது. சேகர் கம்முலாவால் இயக்கத்தில், நடிகர் தனுஷ் மற்றும் கிங் நாகார்ஜுனா அக்கினேனி இணைந்து பல்வேறு திரை நட்சத்திரங்களுடன் ஒரு கலகலப்பான திரைப்படமான #DNS படமாக்கப்பட உள்ளது. சுனில் நரங் மற்றும் புஸ்குர் ராம் மோகன் ராவ் ஆகியோரால், ஸ்ரீ நாராயண் தாஸ் கே நரங்கின் ஆசீர்வாதத்துடன், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி […]
Continue reading …
‘கூச முனிசாமி வீரப்பன்’ தொடர் வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களின் குரலையும், வீரப்பன் குரலையும் பதிவு செய்யும் விதமாக நக்கீரன் உருவாக்கத்தில் ஜி 5 தளத்தில் வெளியானது. இத்தொடர் வீரப்பன் உயிரோடு இருந்த போது அவரை நக்கீரன் குழுவினர் சந்தித்து எடுத்த வீடியோ பேட்டிகளை கொண்டு உருவாக்கபட்டு இருந்தது. இத்தொடரில் வொர்க்ஷாப்புகளில் மக்கள் எப்படி கொடுமையான துன்பங்களை அனுபவித்தார்கள் என்பது குறித்த மறு உருவாக்கப்பட்ட காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். அதுபோல நகைச்சுவை ததும்ப தனது […]
Continue reading …
வானதி சீனிவாசன் திமுகவினரின் போலி முகத்திரை கிழித்தெறியப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலை செய்து வந்த ரேகா என்ற இளம்பெண்ணை, ஆண்டோவும், அவரது மனைவியும் கொடுமைப்படுத்தி, அடித்து துன்புறுத்தியுள்ளனர். SC. ST வன்கொடுமை சட்டப்பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை, பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலை செய்து வந்த […]
Continue reading …
சென்னைக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கடந்த 2018ம் ஆண்டு முதல் மத்திய அரசு திட்டத்தின் கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்ட இந்த போட்டியானது, இந்தாண்டு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த […]
Continue reading …