
டிஆர்எஸ் கட்சியின் கவிதா தயாநிதி மாறனின் இந்தி மாநில மக்கள் குறித்த பேச்சு நாட்டை பிளவுபடுத்தும் பேச்சு என்று கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “அரசியல் தலைவர்கள் ஒரு சில பிரிவினரின் வாக்குகளை பெறுவதற்காக மலிவான கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். இது நாட்டை எப்படி எல்லாம் பிரிக்கும் என்பதை எங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை. இது ஒரு குறிப்பிட்ட கட்சியின் கருத்தாக நான் பார்க்கவில்லை, காங்கிரஸ் கட்சியால் வழி நடத்தப்படும் இந்தியா கூட்டணியின் ஒரு […]
Continue reading …
சட்டமன்ற தொகுதி நிதியில் கட்டப்பட்ட மைதானத்தின் திறப்பு விழா கோவை தெற்கு தொகுதி நெசவாளர் காலனியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது. தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார். பின் இறகு பந்து விளையாடினார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், “இறகு பந்தாட்டம் மைதானம் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்களின் ஆரோக்கியத்தை மையமாக வைத்து பணிகள் மேற்கொண்டு வருகிறோம். கால நிலை மாற்றத்தினால் புயல், வெள்ளம் போன்ற பாதிப்புகள் வருகிறது. […]
Continue reading …
உலக பாக்ஸ் ஆபீசில் சாதனை படைத்து, புதிய வரலாற்றை எழுதி வருகிறது ஹோம்பாலே பிலிம்ஸின் “சலார்” திரைப்படம். ‘கேஜிஎப்’ இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் வெளியான இத்திரைப்படம், வார இறுதியில் உலகளவில் மொத்தம் 402 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது. இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் புயலை கிளப்பி உள்ளது. படம் வெளியான வெள்ளிக்கிழமையன்று உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் 178.7 கோடி ரூபாயை வசூல் செய்து, இதற்கு முன்னரான பல பெரிய சாதனைகளின் சாதனையை முறியடித்தது. […]
Continue reading …
ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி “நீதிமன்றம் அதிமுக கட்சி கொடியையோ சின்னதையோ பயன்படுத்தக்கூடாது என ஓ.பன்னீர் செல்வத்திற்கு மட்டுமே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவரை தவிர்த்து நாங்கள் எல்லாம் கட்சி கொடியுடன் தான் பயணம் செய்வோம் கட்சி சின்னத்தை தான் பயன்படுத்துவோம். எவன் சொன்னாலும் கேட்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில் அவர், “நாளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கோவை வர உள்ளார். பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற ஜனவரி 28ம் தேதி வரை […]
Continue reading …
போலீசார் சென்னையில் கல்லூரி மாணவி குளிக்கும் போது ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த இளைஞரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். சென்னை ராயபுரம் பகுதியில் கல்லூரி மாணவி தனது வீட்டில் குளித்து கொண்டிருக்கும் போது ஜன்னல் வழியாக ஒரு இளைஞர் செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி மாணவி உடனடியாக தங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் கூற, அந்த நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனை அடுத்து போலீசாரிடம் அந்த நபர் ஒப்படைக்கப்பட்ட போது […]
Continue reading …
சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் மிக்ஜாம் புயல் மழையால் ஏற்பட்ட எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட 9,001 குடும்பங்களுக்கு ரூ.8.68 கோடி நிவாரணாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து அவரது உத்தரவில், “சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் கடந்த 5ம் தேதி ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்ற தமிழ்நாடு அரசு துரிதமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த எண்ணெய் கசிவால் மீன்பிடி தொழிலை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். கூடுதலாக எண்ணெய் […]
Continue reading …
கடந்த செப்டம்பர் மாதம் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் ஏவப்பட்டது. அந்த விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டு அவ்வப்போது புகைப்படம் எடுத்து அனுப்புகிறது. ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் சூரியனின் அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை படம் எடுத்து அனுப்பி உள்ளது. அந்த தரவுகள் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று இஸ்ரோ தெரிவித்திருந்தது. சூரியனை ஆய்வு செய்வதற்காக […]
Continue reading …
பாஜக மகளிர் அணி தலைவி “பிரதமரை எதிர்த்து நீங்களே போட்டியிடலாமே?” என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து கேள்வி எழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக மகளிர் அணி தலைவர் அக்னிமித்ர பால் “மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிட வேண்டும்” என தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை எதிர்த்து இந்தியா கூட்டணி வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறிய நிலையில் பாஜக […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வானிலை ஆய்வு மையம் துல்லியமாக கணித்து தகவல் கூறவில்லை என்ற கருத்தை வைத்துள்ள நிலையில் முன்னாள் வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் ரமணன் வானிலை ஆய்வில் துல்லியம் என்ற பேச்சுக்கு இடமில்லை என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, “வானிலை ஆய்வு பொருத்த வரை துல்லியம் என்ற பேச்சுக்கே இடமில்லை. ஏனெனில் வானிலை என்பது தினம் தினம் அல்ல, நொடிக்கு நொடி மாறக்கூடியது. சில தரவுகள் முன் அனுபவங்கள் மூலம் மட்டுமே கணிக்க […]
Continue reading …
உலக சுகாதார மையம் உலகம் முழுதும் ஒரே மாதத்தில் 52% கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக புதிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. கடந்த 28 நாட்களில் மட்டும் உலகம் முழுதும் புதிதாக 8.50 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் 3000க்கும் மேற்பட்டோர் […]
Continue reading …