
பாஜக நிர்வாகி உமா கார்கி சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்ததாக சமீபத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. பாஜக நிர்வாகி உமா கார்கி முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரை காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் காவல்துறையினர் அனுமதி கேட்டனர். நீதிமன்றம் ஒரு நாள் காவலில் விசாரிக்க சைபர் கிரைம் போலீசுக்கு அனுமதி அளித்துள்ளதாக தகவல் […]
Continue reading …
கல்வி நலத்திட்ட விழாவில் நடிகர் விஜய் பேசியதைத் தொடர்ந்து முதல் கட்டமாக தலைமை தொண்டரணியை சேர்ந்த ரசிகர்களுக்கு அம்பேத்கார் புத்தகங்களை வழங்க உள்ளதாக தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு மேல் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்களை வழங்கி வருகின்றனர். இன்று இரவு 11.59 வரை பிறக்கும் குழந்தைகளுக்கு மோதிரம் வழங்க உள்ளதாக தெரிவித்தனர். அதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தொகுதியில் விஜய் தலைமை […]
Continue reading …
“பிக்பாஸ்” ரியாலிட்டி நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளது. தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது. அனைத்து சீசன்களையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கினார். அவரின் ஸ்டைலுக்கு என்றே பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகியுள்ளனர். இம்முறை பிக்பாஸ் சீசன் ஜூலை மாதத்திலேயே தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இம்முறை கமல்ஹாசனுக்கு இதுவரை அவர் வாங்காத தொகை சம்பளமாக கொடுக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆறாவது சீசனை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு 70 கோடி ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. […]
Continue reading …
இன்று செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடந்தது. அவரது தரப்பில் என்.ஆர். இளங்கோ என்ற வழக்கறிஞரும் அமலாக்கத்துறை தரப்பிலும் வாதங்கள் செய்யப்பட்டன. இவ்வழக்கை ஜூன் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் வாதாடிய செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ கூறியதாவது, “2014&-15 நடந்த குற்றங்களுக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டது, திமுக ஆட்சிக்கு வந்த பின் அமலாக்கப் பிரிவு இந்த வழக்கை […]
Continue reading …
சிறுத்தை சிவா சூர்யாவின் 42வது படமான “கங்குவா” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இக்கதை நிகழ்காலம் மற்றும் அரச காலத்து கதை என இரு காலகட்டங்களில் நடக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் டைட்டில் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்தே ரசிகர்களிடையே படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். மற்ற கதாபாத்திரங்களில் யோகி பாபு மற்றும் கோவை சரளா உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்கின்றனர். […]
Continue reading …
கடந்த 2003ம் ஆண்டு வெளியான “ஜெயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார் ஜெயம் ரவி. அவரின் அண்ணன் இயக்கத்தில் அடுத்தடுத்து பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்த ஜெயம் ரவி “பேராண்மை,” “தனி ஒருவன்” ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்றது. சமீபத்தில் அவர் நடிப்பில் “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது ஜெயம் ரவி சினிமாவில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவரின் முதல் […]
Continue reading …
உள்துறைஅமைச்சர் அமித்ஷா மணிப்பூர் கலவரம் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுவதாக அறிவித்துள்ள நிலையில் பிரதமரே நாட்டில் இல்லாத போது எதற்காக அனைத்து கட்சி கூட்டம் என முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி கூறும் போது, “கடந்த 50 நாட்களாக மணிப்ப்பூர் எரிந்து கொண்டிருக்கிறது ஆனால் பிரதமர் அமைதி காக்கிறார் தற்போது பிரதமர் நாட்டிலேயே இல்லை இந்த நேரத்தில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …
வண்டலூர் பூங்காவில் 3டீ மற்றும் 7டீ திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது. சென்னை அருகிலுள்ள வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. இங்கே தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தந்து அங்குள்ள விலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர். அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 3டீ, 7டீ திரையரங்கம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வன விலங்குகளை அவற்றின் வாழ்விடங்களில் பாதுகாக்க வேண்டிய அவசியம், இயற்கை […]
Continue reading …
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி பீகார் மாநிலத்தில் நடைபெறவுள்ள எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார். அதுமட்டுமின்றி விவசாயிகள் போராட்டத்தின் போது பாஜகவை கடுமையாக எதிர்த்த சிரோமணி அகாலி தளம், எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது நிலைப்பாட்டை இப்போது வரை தெரிவிக்கவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி, சிரோமணி அகாலிதளம், பாரத் ராஷ்டிரிய சமிதி உள்ளிட்ட கட்சிகள் தங்களது நிலைப்பாட்டை இதுவரை வரை தெரிவிக்கவில்லை! இதுவரை ராகுல் காந்தி, மாயாவதி, மு.க.ஸ்டாலின் மற்றும் […]
Continue reading …
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோயிலுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 8ம் தேதி பட்டியலின இளைஞரை கோயிலுக்குள் அனுமதிக்காத விவகாரத்தில் கோயிலுக்கு சீல் வைக்கப்பட்டது. கலெக்டர் தலைமையில் நடந்த பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டுதை அடுத்து வைக்கப்பட்ட சீலை மாவட்ட ஆட்சியர் அகற்றினார். ஆனால் அதே நேரத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரௌபதி அம்மன் கோயிலை திறக்க சென்னை […]
Continue reading …