
நடிகர் பிரபாஸின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஆதிபுருஷ்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் 3 நாட்களில் உலகம் முழுதும் 340 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு தமிழகத்தில் பெரியளவில் வரவேற்பில்லை என்றாலும் ஆந்திரா தெலுங்கானா மற்றும் வட மாநிலங்களில் இந்த படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருவதாக கூறப்படுகிறது. படத்தின் வசனகர்த்தா மனோஜ் முண்டாசுர், தனது டுவிட்டர் பக்கத்தில், “சனாதன சேவைக்காகவே இத்திரைப்படத்தை உருவாக்கினோம். ராமாயணத்திலிருந்து ஒருவர் கற்றுக் கொள்ளக்கூடிய முதல் பாடம் […]
Continue reading …
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடைசி படமாக உருவாகி வருகிறது “மாமன்னன்” திரைப்படம். இத்திரைப்படத்தில் வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். மாரி செல்வராஜ் “கர்ணன்” திரைப்படத்துக்குப் பிறகு இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் மற்றும் டிரெயிலர் ரிலீஸ் நடந்தது. திரைப்படத்தின் சிறப்பான டிரெயிலர் சமூகவலைதளங்களில் ரசிகர்களைக் கவர்ந்து 10 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. ஜூன் 29ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு “மாமன்னன்” திரைப்படம் […]
Continue reading …
நடிகர் விமல் “களவாணி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களைக் கவர்ந்தவர். தொடர்ந்து கிராமத்துக் கதையம்சம் கொண்ட படங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதில் ஒரு சில படங்களை தவிர மற்ற படங்கள் தோல்வியடைந்ததால் கடந்த சில வருடங்களாக அவர் கைவசம் படங்கள் எதுவும் இல்லை. அவர் நடித்த “விலங்கு” வெப்சீரிஸ் ஜி 5 தளத்தில் வெளியாகி அவருக்கு ரி எண்ட்ரியாக அமைந்தது. இந்த வெப் சீரிஸை “புரூஸ் லி” படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி […]
Continue reading …
பாமக தலைவர் அன்புமணி மீண்டும் 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து இலங்கை கடற்படையினரின் அத்துமீறலுக்கு முடிவு எப்போது? என கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர், ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 9 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. அவர்கள் பயன்படுத்திய விசைப்படகையும் சிங்களப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறிச் சென்று மீன்பிடிக்கவில்லை. அவர்கள் பயணித்த விசைப்படகு பழுதடைந்து விட்டதால் காற்றின் வேகத்தில் நெடுந்தீவு பகுதிக்கு அடித்து செல்லப்பட்ட […]
Continue reading …
ஹாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ஆல்யா பட். தற்போது இவரும், பிரபல ஹாலிவுட் நடிகை கேல் கெடாட்டும் இணைந்து நடித்துள்ள Heart of Stone படத்தின் தமிழ் டிரெயிலர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. ஹாலிவுட்டில் “ஃபாஸ்ட் அண்ட் பியூரியஸ்,” “வொண்டர் வுமன்” உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை கேல் கெடாட். இவர் நடிப்பில் ஹாலிவுட் இயக்குனர் டாம் ஹார்ப்பர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் Heart of Stone. […]
Continue reading …
கடந்த 2012ல் மிஷ்கின் இயக்கத்தில் “முகமூடி” திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. ஆனால், அத்திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி தரவில்லை. இதனால் தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. அதன் பின் இந்தியில் ஸ்டார் நடிகரான ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக “மொகஞ்சதாரோ” திரைப்படத்தில் நடித்தார். பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் தோல்வியை தமிழுவியதால் ராசியில்லாத நடிகை என பாலிவுட்காரர்களால் ஓரம்கட்டப்பட்டார். தொடர்ந்து முயற்சியை கைவிடாமல் வாய்ப்புகள் கொடுத்த தெலுங்கு […]
Continue reading …
செந்தில்பாலாஜியின் மனைவி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு விவகாரத்தில் தனது தரப்பை கேட்ட பிறகே அமலாக்கத் துறையின் மேல்முறையீடு மனு மீது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவர் தனது கேவியட் மனுவில் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில்பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது என்பதும், அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், செந்தில்பாலாஜியின் மனைவி கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து மேடைக்கு மேடை பேசுகிறார். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் காலியாக உள்ள 25,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை இளைஞர்களைக் கொண்டு, நேர்மையான முறையில், வெளிப்படைத் தன்மையுடன் நிரந்தரமாக நிரப்பிட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைதளப்பக்கத்தில், “தமிழ்நாட்டில் உள்ள அரசுப் போக்குவத்துக் கழகங்களில் ஆயிரக்கணக்கான ஓட்டுநர், நடத்துநர், கம்மியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதன் காரணமாக, பேருந்துகள் இருந்தும் அவற்றை இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாத […]
Continue reading …
அமைச்சர் உதயநிதி ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிக்கு 7 வீரர்கள் தகுதி பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு- என்று கூறியுள்ளார். மேலும் விளையாட்டுத்துறையிலும் தமிழ்நாடு முதலிடத்தை நோக்கி வெற்றி நடைபோடுவதற்கு உதாரணமாகத் திகழும் நம் வீரர் வீராங்கணையருக்கு வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கடந்த 15-ம் தேதி முதல் 19 வரை நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர்கள் பதக்கங்கள் பெற்றுள்ளனர். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் “ஒடிசா […]
Continue reading …
மதுரையைச் சேர்ந்த திமுக நிர்வாகி தமிழக ஆளுநரை வரும் 27ம் தேதிக்குள் மாற்றாவிட்டால் தீக்குளிப்பேன் என மிரட்டல் விடுத்துள்ளார். திமுகவுக்கும் ஆளுநரான ஆர்.என்.ரவிக்கும் பொறுப்பேற்றதில் இருந்து இடையே பனிப்போர் நடந்து வருகிறது. மதுரையில் திமுக நிர்வாகி ஒருவர் மிரட்டல் போஸ்டரில், “தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்காக இரவு, பகல் பராமல் அயராது பாடுபட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வர அரும்பாடுபட்டு வருகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அரசுக்கு இடையூறாக செயல்பட்டு […]
Continue reading …