
கடந்த 2005ம் ஆண்டு வெளியான சூப்பர் ஸ்டாரின் நடிப்பில் வெளியான “சந்திரமுகி” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக்கத்தில் உள்ளது. லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார் மற்றும் கங்கனா ரனாவத் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மரகதமணி இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக மைசூர் உள்ளிட்ட பல இடங்களில் பல கட்டங்களாக நடந்து வந்தது. படத்தில் சந்திரமுகியாக யார் நடிக்கப்போவது என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த கதாபாத்திரத்துக்கு பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தைப் படக்குழு ஒப்பந்தம் செய்து […]
Continue reading …
கடந்த ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான “எஃப் ஐ ஆர்” திரைப்படம் ரிலீசாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இத்திரைப்படத்தின் இயக்குனர் மனு ஆனந்த், தற்போது “சர்தார்” உள்ளிட்ட படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்கவுள்ளார். படத்தில் கதாநாயகனாக ஆர்யா நடிக்க, இரண்டாவது கதாநாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். இந்த படத்துக்கு Mr.X. என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை […]
Continue reading …
ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா, “நண்பன்” மற்றும் “பீஸ்ட்” ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு “லியோ” திரைப்படத்தின் மூலம் விஜய்யுடன் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இத்திரைப்படத்துக்காக காஷ்மீரில் 60 நாட்கள் ஷூட் நடத்தி இப்போது சென்னையில் விறுவிறுப்பாக காட்சிகளை படமாக்கி வருகின்றனர் படக்குழுவினர். “லியோ” படம் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ள ஒரு படமாக உருவாகி வருகிறது. படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்கான KOMODO-X என்ற அதிநவீன கேமராவை வரவழைத்து சில காட்சிகளை படமாக்கியுள்ளாராம் மனோஜ் பரமஹம்சா. இந்த அதிநவீன […]
Continue reading …
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரிலீசான “ஆதிபுருஷ்” திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளும், அதே நேரத்தில் கேலிகளை எதிர்கொண்டது. வெளியானது முதல் நெகட்டிவ்வான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வட இந்தியாவிலும் பெரியளவில் ரசிகர்கள் கூட்டம் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனாலும் படத்துக்கு மிகப்பெரிய வசூல் இருப்பதாக படக்குழுவின் சார்பாக தினமும் செய்தி வெளியிடப்படுகிறது. 3 நாளில் 340 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. “சக்திமான்” சீரியல் மூலம் பிரபலமான முகேஷ் கண்ணா படத்தில் ராவணனாக […]
Continue reading …
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர்கள் அரசியல் வரும் சாபக்கேடு தமிழகத்தில் மட்டும்தான் என்று கூறியுள்ளார். எந்த மாநிலத்திலும் தமிழகத்தை போல நடிகர்கள் அரசியலுக்கு வருவதில்லை. தமிழகத்தை பொறுத்தவரை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ரஜினிகாந்த், கமலஹாசன், சரத்குமார், விஜயகாந்த், டி ராஜேந்தர், பாக்யராஜ் உள்ளிட்ட பலர் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர திட்டமிட்டனர். ரஜினி மட்டும் திடீரென கடைசி நேரத்தில் பின்வாங்கி விட்டார். இன்னும் விஜய், விஷால் உள்ளிட்ட பல நடிகர்கள் அரசியல் ஆசையுடன் உலா வருகின்றனர். […]
Continue reading …
உயர்கல்வித்துறை தமிழ்நாட்டிலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்து அறிவிப்பை தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து வந்தனர். இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கியது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை வரும் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ம் […]
Continue reading …
கடந்த சில மாதங்களாக நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதத்திற்குள் முழுமையாக முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் இடம்பெற்ற “நான் ரெடி” பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த பாடலை விஜய், அனிருத் மற்றும் அசல் கோலார் ஆகிய மூவரும் பாடியுள்ளனர். இன்று நள்ளிரவு 12 மணிக்கு “லியோ” படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் வெளியாக இருப்பதாக லோகேஷ் கனகராஜ் […]
Continue reading …
அமைச்சர் சி.வி.சண்முகம் “தைரியம் இருந்தால் கலால் துறையை உதயநிதியுடம் கொடுங்கள் பார்ப்போம்” என்று சவால் விட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அவர், “அமைச்சர் முத்துசாமி தற்போது மதுவிலக்கு மற்றும் கலால் துறையை கவனித்து வருகிறார். அவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உங்களையும் காவு கொடுத்து விடுவார்கள். முதலமைச்சரே உங்களுக்கு தைரியமிருந்தால் கலால் துறையை உங்கள் மகன் உதயநிதியிடம் கொடுங்கள். யாரோ ஒருவருக்கு கலால் துறையை கொடுப்பீர்கள், அவர் கொள்ளையடித்து உங்கள் குடும்பத்திற்கு […]
Continue reading …
தெலுங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்.பி. ‘தொகுதி மேம்பாட்டு நிதியில் சொந்த வீடு கட்டினேன்’ என்று வெளிப்படையாக பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நாடாளுமன்ற எம்.பிக்கள் தாங்கள் வென்ற தொகுதிகளில் உள்ள குறைகளை சரி செய்யவும், மேம்பாட்டு, வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் தொகுதி மேம்பாட்டு நிதியாக கணிசமான தொகையை வழங்கி வருகிறது. ஆனால் அதை அனைத்து எம்.பிக்களுமே நல்ல முறையில் பயன்படுத்துவது இல்லை என்ற புகார்களும் உள்ளன. தெலுங்கானா மாநிலம் […]
Continue reading …
காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தென்மேற்கு பருவ மழையை எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டதையடுத்து தமிழகம், கேரளா உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மிதமான மழை முதல் கன மழை பெய்து வருகிறது. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு இதுகுறித்து கூறும் போது, “தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கின்றோம். 500 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் 100 பேரை கொண்ட 5 குழுவினர் […]
Continue reading …