
அண்ணன் நடிகர் திரு. ஜோசப் விஜய் அவர்களே ( leo) லியோ என்ற திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறீர்கள். உங்களின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று ‘நான் ரெடி’ என்ற வரிகளை கொண்ட பாடலை லியோ பட குழுவினர் வெளியிடப் போவதாக அறிவிப்பினை சமூக வலைதளம் மூலமாக அறிவித்திருப்பதை அறிந்தேன். அவ்வாறு வெளியிடப்பட்ட அறிவிப்பு போட்டோவில் அண்ணன் நடிகர் திரு. ஜோசப் விஜய் அவர்களே நீங்கள் சிகரெட் புகைப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த […]
Continue reading …
இந்திய அணி நடந்து முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பரிதாபகரமாக தோற்றது. அதனால் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். அடுத்து வரும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் டெஸ்ட் போட்டிகளில் அவர் இருக்கமாட்டார் என்று கூறப்படுகிறது. இப்போது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கு ஓய்வு கிடைத்துள்ளது. அதனால் பலரும் தங்கள் குடும்பத்தினரோடு நேரத்தை செலவழித்து வருகின்றனர். அவ்வகையில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா குடும்பத்தோடு இப்போது சுற்றுலா […]
Continue reading …
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது பா.ஜ.க.வின் சவப்பெட்டியில் அறையப்படும் கடைசி ஆணியாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும், “அரசியல் நோக்கங்களுக்காக விசாரணை அமைப்புகளை அப்பட்டமாகத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் நன்றி! இன்று கோயம்புத்தூரில் நாம் வெளிப்படுத்திய ஒற்றுமையும் உறுதிப்பாடும் எங்கும் பரவி, பொய்க் கதைகளால் பா.ஜ.க. உருவாக்கி வைத்திருக்கும் தோற்கடிக்க முடியாத பிம்பத்தின் […]
Continue reading …
நடிகர் தனுஷ் “பவர் பாண்டி” திரைப்படத்தின் மூலமாக தன்னை இயக்குநராக நிரூபித்தார். அவர் அடுத்து இயக்கும் திரைப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கப் போவதாக அறிவித்தது. ஆனால் அப்படம் சில நாட்கள் ஷூட்டிங் நடந்த நிலையில் நிறுத்தப்பட்டது. இப்போது அவர் தன்னுடைய 50வது படத்தை தானே இயக்கி நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக தனுஷின் தம்பியாக விஷ்ணு விஷால் நடிக்கப் போவதாக […]
Continue reading …
சுந்தர் சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா நடிப்பில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த திரைப்படம் “சங்கமித்ரா.” 2017ம் ஆண்டு தயாரிக்க திட்டமிடப்பட்டு, 2018ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் நாயகிகளாக ஸ்ருதிஹாசன் மற்றும் ஹன்சிகா ஆகியோர் ஒப்பந்தமாகி இருந்தனர். ஆனால் பொருளாதார பிரச்சனையின் காரணமாக இப்படம் தொடங்கப்படவில்லை. இதையடுத்து இப்போது “பொன்னியின் செல்வன்” வெளியாகி ஹிட்டாகியுள்ளது. மீண்டும் இத்திரைப்படத்தை தொடங்க திட்டமிட்டுள்ளார் இயக்குனர் சுந்தர் […]
Continue reading …
குஜராத்தில் தென்கிழக்கு அரபிக்கடலில் தோன்றிய பிபர்ஜோய் புயல் கரையை கடந்ததால் அங்கு மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கியது. தற்போது அப்புயல் வலுவிழந்து ராஜஸ்தான் மாநிலத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தென்கிழக்கு அரபிக் கடலில் அதிதீவிர புயலாக மாறிய பிபர்ஜோய் புயல், குஜராத் மாநிலம் கட்ச் என்ற மாவட்டத்தில் கரையை கடந்தது. இப்புயலால் அங்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டதாகவும் இதையடுத்து 24 மணி நேரமும் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக சாய்ந்த மின்கம்பங்கள் […]
Continue reading …
நேற்று முன்தினம் மாலை குஜராத்தின் கட்ச் பகுதியில் ஜகாவு துறைமுகம் அருகே பிபர்ஜாய் புயல் அதிதீவிர புயலாக கரையைக் கடந்தது. இப்புயலால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. புயல் கரையைக் கடந்த 140 கிமீ வேகத்தில், குஜராத்தில் பல பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. இப்புயலின்போது, மொத்தம் 1171 கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டனர். இதில் 707 கர்ப்பிணிகள் குழந்தைகள் பெற்றெடுத்துள்ளனர். இதுபற்றி குஜராத் மாநில சுகாதாரத்துறை முன்பே கர்பிணிகள் பட்டியலை தயார் செய்து இதற்காக அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு, […]
Continue reading …
நடிகர் விஜய் தனது நடிப்பையும் தாண்டி விரைவில் அரசியலிலும் இறங்குவதற்குண்டான அடித்தளமாக இன்று 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவை நடத்தினார். இதற்கான விழாவில் தமிழகத்திலுள்ள 234 தொகுதிகளிலிருந்து முதல் 3 இடங்களை பெற்ற மாணவ மாணவிகள் சுமார் 1500 பேர் மற்றும் அவர்களுடன் பெற்றோர்கள் என மொத்தம் 6000 பேருக்கு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது பேசிய விஜய், ‘உன்கிட்ட காடு இருந்தா எடுத்துக்குவாங்க, […]
Continue reading …
திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தலைமையில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்காக அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் உலகத்தரத்திலான நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரத்தை அமைப்பதற்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டியுள்ளார். முதலமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நிதிச் சேவைகள் மற்றும் அது சார்ந்த செயல்பாடுகளுக்கு ஊக்கம் அளித்திடும் வகையில், சென்னையில் உலகத்தரத்திலான நிதிநுட்ப நகரம் மற்றும் நிதிநுட்ப கோபுரத்தை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினேன். பெரும் தொலைநோக்குடன் தலைவர் கலைஞர் அவர்கள் மிக முன்பாகவே தகவல் தொழில்நுட்பத்துறையின் […]
Continue reading …
இன்று நடைபெற்ற கல்வி விழாவில், “யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், யார் வரவேண்டும் யார் வர வேண்டாம் என்று கூற யாருக்கும் உரிமை இல்லை” என்று நடிகர் விஜய் பேசினார். இது குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் “விஜய் நல்லது தானே சொல்லி இருக்கிறார்” என தனது கருத்தை கூறியுள்ளார். நடிகர் விஜய் இன்று நடைபெற்ற கல்வி விழாவில் 10 நிமிடம் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக “வாக்குக்கு பணம் வாங்க வேண்டாம், உங்கள் […]
Continue reading …