
நாளை மறுநாள் தமிழக அமைச்சவை மாற்றம் செய்யப்படும் நிலையில், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தூக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக சமீபத்தில் ஒரு ஆடியோ இணையதளங்களில் வைரலானது. அந்த ஆடியோவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமானவர்கள் 30 ஆயிரம் கோடி சம்பாதித்ததாக கூறப்பட்டிருந்தது. நாளை மறுநாள் தமிழக அரசு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் துறை மாற்றப்படும் அல்லது அவர் அமைச்சரவையில் இருந்து தூக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை […]
Continue reading …
தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புவுக்கு தமிழக ஆளுநர் ரவியின் புகார் காரணமாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். R சமீபத்தில் ஆளுநர் ரவி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த போது சிதம்பரம் தீட்சிதர்களின் பெண் குழந்தைகள் துன்புறுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு கூறியது குறித்து கூறிய அவர் ’அது பொய் வழக்கு’ என்று தெரிவித்தார். சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக பொய் வழக்கு போடப்பட்டது என்றும் இந்த வழக்கில் 6, 7ம் வகுப்பு […]
Continue reading …
இளைஞர் ஒருவர் மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை காண சென்ற போது மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நள்ளிரவு மதுரையில் சித்திரை திருவிழாவின் உச்ச நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடந்தது. இந்த வைபவத்தை காண மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் மதுரையில் குவிந்திருந்தனர். அவ்வாறாக அழகர் வைபவத்தை காண வந்த எம்.கே.புரம் பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞர் சூர்யா ராமராயர் மண்டகபட்டி அருகே தலையில் […]
Continue reading …
இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரளாவின் முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சான்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கேரள முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சான்டி இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. மேலும், முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உம்மன் சாண்டியின் மகன் தன்பேஸ்புக் தளத்தில், இதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், விரைவில் உடல் நலம்பெற பிரார்த்தனை செய்யும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Continue reading …
அரசு கலை கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பம் வழங்கும் தேதி குறித்த அறிவிப்பை உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. உயர்கல்வித்துறை தமிழ்நாட்டிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை முதலாமாண்டு படிப்புகளுக்கு மே 8-ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளது. மேலும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு மாணவர்கள் ஷ்ஷ்ஷ்.tஸீரீணீsணீ.வீஸீ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க மே 19ம் தேதி கடைசி தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அரசு கலைக்கல்லூரிகளில் படிக்க […]
Continue reading …
மடோன் அஸ்வின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களாக திரைப்டத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வந்தது. இப்போது இறுதிகட்டத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் அடுத்த அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், சில நாட்களுக்கு முன் ரஜினியின் “ஜெயிலர்” திரைப்படம் வரும் சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 11ம்தேதி வெளியாகும் என்று சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனால், இதே தேதியில் […]
Continue reading …
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிதம்பரம் தீட்சதர் குறித்து ஆளுநர் சர்ச்சைக்குரிய கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஆளுநர் ரவி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும், சிதம்பரம் தீட்சிதர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஏன் கூறுகிறார். ஆளுநர் என்ன ஆண்டவரா? என்று கேள்வி எழுப்பினார். தீட்சதர்களுக்கு என ஏதும் தனி சட்டம் உள்ளதா? ஆளுநர் குறிப்பிடுவது போல சிறுமியர்களுக்கு இரட்டை விரல் கன்னித்தன்மை பரிசோதனை நடத்தப்பட்டது என்பதற்கு எந்த […]
Continue reading …
வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பிருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வானிலை ஆய்வு மையம் மே 7ம் தேதி வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுமென்று அது வலுப்பெற்று புயலாக மாறும் என்று தெரிவித்திருந்தது. நாளை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் தோன்றியிருப்பதை அடுத்து கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை அதாவது […]
Continue reading …
நீட் தேர்வு நாளை நடக்கவிருக்கிறது. மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வான இதற்கு இதோ சில ஆலோசனைகள்… இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் என்ற 3 பாடப்பிரிவுகளில் 180 கேள்விகள் நீட் தேர்வில் இருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு பதில் இருக்கும். அதில் ஒரு பதிலை தேர்வு செய்து எழுத வேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் உண்டு. ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் கழிக்கப்படும். நீட் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 720 என்ற நிலையில் மாணவர்கள் […]
Continue reading …
வரும் 10ம் தேதி கர்நாடக மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சி தலைவர்கள் கர்நாடக மாநிலத்தில் விறுவிறுப்பான தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக மணிப்பூரில் கலவரம் உச்ச கட்டத்தில் இருக்கும் நிலையில் கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த அமித்ஷா உடனடியாக பிரச்சாரத்தை ரத்து செய்துவிட்டு டில்லி சென்றுள்ளார். அவர் மணிப்பூர் மாநில முதலமைச்சர் மற்றும் […]
Continue reading …