Home » Posts tagged with » Netrikkan (Page 281)

அமைச்சர் துரைமுருகன் ஆளுநரை பார்க்க காரணம் என்ன?

Comments Off on அமைச்சர் துரைமுருகன் ஆளுநரை பார்க்க காரணம் என்ன?

இன்று அமைச்சர் துரைமுருகன் திடீரென ஆளுனர் ரவியை நேரில் பார்க்க செல்கிறார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆளுநர் ரவியை கடந்த சில மாதங்களாகவே திமுக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இன்று காலை அமைச்சர் துரைமுருகன் ஆளுநர் ரவி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்எல்ஏ ஆகி சட்டமன்றத்தில் விவாதம் செய்யட்டும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆளுநர் ரவியை சந்திக்க சென்னை கிண்டியிலுள்ள ராஜபவனுக்கு அமைச்சர் துரைமுருகன் இன்று செல்கிறார். தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட […]

Continue reading …

இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்காவில் பதவி!

Comments Off on இந்திய வம்சாவளி பெண்ணுக்கு அமெரிக்காவில் பதவி!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீராக தாண்டன் அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிபர் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவில் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது தலைமையிலான அமைச்சரவையில் மூத்த ஆலோசகராகவும், பணியாளர் செயலாரகவும் உள்ள நிலையில், தற்போது, உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நீரா தாண்டனை நியமித்து ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: “நம் நாட்டின் பொருளாதார இயக்கம், இன சமத்துவம், சுகாதாரம், குடியேற்றம், கல்வி ஆகிய […]

Continue reading …

2 பாடங்களில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை!

Comments Off on 2 பாடங்களில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை!

இன்று காலை வெளியான பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2 பாடங்களில் தோல்வியடைந்த மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று காலை வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு குவிந்து வருகிறது. அதேபோல், தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆவடி, கோவர்த்தனகிரி பகுதியில் வசிப்பவர் கனகராஜ். இவர் மகன் தேவா (17 வயது) தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை சரியாக […]

Continue reading …

டப்பிங் வேலைக்கு போன கிரிக்கெட் வீரர்?

Comments Off on டப்பிங் வேலைக்கு போன கிரிக்கெட் வீரர்?

“ஸ்பைடர்மேன்” திரைப்படத்திற்கு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான சுப்மன் கில் ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே டப்பிங் பேச சென்றது வைரலாகியுள்ளது. இளம் இந்திய கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக சுப்மன் கில் நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சுப்மன் கில் கடந்த போட்டியில் கிட்டத்தட்ட சதம் விளாச இருந்த நிலையில் ஓவர் முடிந்ததால் அவரது சாதனை மிஸ் ஆனது. ஆனாலும் தொடர்ந்து சுப்மன் கில்லின் அபார திறமை பேசப்பட்டு வருகிறது. கிரிக்கெட் […]

Continue reading …

ரஜினி ரசிகர் போஸ்டர் வைரல்!

Comments Off on ரஜினி ரசிகர் போஸ்டர் வைரல்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் “லால் சலாம்” திரைப்படத்தின் கேரக்டர் போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் தயாராகியுள்ள படம் “லால் சலாம்”. நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் ரஜினிகாந்த் தோன்றுகிறார். ரஜினிகாந்தின் கதாப்பாத்திரம் என்னவாக இருக்கும் என பலரும் பல்வேறு யூகங்களை வைத்த நிலையில் நேற்று ரஜினிகாந்தின் கேரக்டர் போஸ்டர் வெளியானது. படத்தில் மொய்தீன் பாய் […]

Continue reading …

நீட் தேர்வு சோதனை வன்முறை!

Comments Off on நீட் தேர்வு சோதனை வன்முறை!

பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ் மாணவியின் உள்ளாடையை அகற்றியது மிகப்பெரிய வன்முறை என்று கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற நீட் தேர்வு சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. நீட் தேர்வை எழுத வந்த மாணவி ஒருவருக்கு சோதனை என்ற பெயரில் உள்ளாடை அகற்றப்பட்டதாக செய்திகள் வெளியாகின. கலாச்சாரமும், பண்பாடும் போற்றி பாதுகாக்கப்படும் தமிழ்நாட்டில் இத்தகைய இழிவான செயல் நடந்திருப்பது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்வையொட்டி நடத்தப்பட்ட வழக்கமான சோதனையின் போது மாணவியின் உள்ளாடையிலிருந்து ஒலி வந்ததால் உள்ளாடையை […]

Continue reading …

தோல்வி பயத்தால் மாணவர் தற்கொலை!

Comments Off on தோல்வி பயத்தால் மாணவர் தற்கொலை!

பிளஸ் 2 ரிசல்ட் வெளியாகும் முன்பே மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிளஸ் டூ தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் 94 சதவீதத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சுமார் 47000 மாணவர்கள் இந்த தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். பொதுத்தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற பயத்தின் காரணமாக பிளஸ் 2 மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். திருவண்ணாமலையை சேர்ந்த ஹரி என்ற மாணவர் தனது வீட்டில் […]

Continue reading …

12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு?

Comments Off on 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வு?

இன்று வெளியான பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளில் 94.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து 5.97 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என்பதால் அவர்களுக்கான துணைத் தேர்வு தேதி குறித்த அறிவிப்பை பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி அடையாத 47,934 மாணவர்கள் துணைத் தேர்வில் கலந்துகொண்டு தேர்ச்சி பெற்று இந்த ஆண்டு கல்லூரிகளில் சேரலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் […]

Continue reading …

இந்திய அரசு போட்ட கண்டிஷன்!

Comments Off on இந்திய அரசு போட்ட கண்டிஷன்!

தற்போது வெளியாகி விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போன்களில் எஃப்.எம் வசதி இல்லாமல் இருக்கிறது. இந்திய அரசு வெளியிட்டுள்ள ஆணை ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது பல மாடல் ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன. கேமரா, இண்டெர்னெட், ஃபிங்கர் சென்சார், ஜிபிஎஸ் என பல அம்சங்களோடு வெளியாகும் இந்த ஸ்மார்ட்போன்களில் எஃப்.எம் ரேடியோ வசதியில்லாமல் வெளியாகி வருகிறது. தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போனில் ரேடியோ கேட்பவர்கள் எண்ணிக்கை குறைவு என்பதாலும், அப்படி கேட்பவர்களும் இணைய வசதி மூலமாக […]

Continue reading …

வரலாற்றுச் சாதனை படைத்த நந்தினி!

Comments Off on வரலாற்றுச் சாதனை படைத்த நந்தினி!

தமிழ் உள்ளிட்ட அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை பெற்று வரலாற்றுச் சானையை படைத்துள்ளார் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மாணவி நந்தினி. இன்று காலை 12ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி நந்தினி பிளஸ் 2 பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பாதிப்பெண் பெற்றுள்ளார். தமிழ், ஆங்கிலம், பொருளாதாரம், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் என அனைத்து பாடங்களிலும் 100 மதிப்பெண் பெற்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இவர் கூலி […]

Continue reading …