Home » Posts tagged with » Netrikkan (Page 294)

பாஜகவை அடக்கி வாசிக்க சொல்லும் முன்னாள் அமைச்சர்!

Comments Off on பாஜகவை அடக்கி வாசிக்க சொல்லும் முன்னாள் அமைச்சர்!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பாஜக அடக்கி வாசிப்பது நல்லது என்று கூறியிருப்பது கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும், அதிமுகவும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இரு கட்சியின் தலைவர்கள் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் அதிமுக கூட்டணியிலிருந்து பாஜக வெளியேற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் பாஜக மேலிடத்தில் உள்ளவர்கள் அதிமுகவுடன்தான் கூட்டணி என்று கூறியுள்ளனர், எடப்பாடி பழனிச்சாமி கூட அதிமுக கூட்டணியில்தான் பாஜக உள்ளது என்றும் கூறியுள்ளார். […]

Continue reading …

வெப்பம் அதிகரிக்கும் வெளியே வர வேண்டாம்!

Comments Off on வெப்பம் அதிகரிக்கும் வெளியே வர வேண்டாம்!

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இனி வரும் இரு தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. வரும் 20, 21, 22ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெளியே தலைகாட்ட முடியாத அளவிற்கு அனல் காற்று வீசி வருகிறது. பல ஊர்களில் வெப்பநிலை 40 டிகிரி […]

Continue reading …

சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை!

Comments Off on சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் தலைவர் சுட்டுக் கொலை!

ஐஎஸ் அமைப்பின் தலைவர் சிரியாவில் அமெரிக்க ஹெலிகாப்டர் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை சிரியா நாட்டின் வடக்கு பகுதியில் ஐஏஎஸ் அமைப்பின் முக்கிய நபராக கருதப்படும் அந்த அமைப்பின் தலைவர் அல் ஹாஜி அலி பதுங்கி இருந்ததாக ரகசிய தகவல் அமெரிக்காவுக்கு கிடைத்தது. இதையடுத்து அமெரிக்க படையினர் ஹெலிகாப்டர் மூலம் சென்று அப்பகுதியில் தாக்குதல் நடத்தியதில் அவர் சுட்டு கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அமைப்பின் தலைவர் அல் ஹாஜி அலி […]

Continue reading …

சமந்தாவை பாராட்டிய கீர்த்தி சுரேஷ்!

Comments Off on சமந்தாவை பாராட்டிய கீர்த்தி சுரேஷ்!

நடிகை சமந்தா நடித்து சமீபத்தில் வெளியாகி உள்ள “சகுந்தலா” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது. காளிதாசர் எழுதிய புராணத்தில் உள்ள ஷகுந்லை எனும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவான புராண திரைப்படத்தில் சமந்தா, சகுந்தலையாக நடித்துள்ளார். படத்தை குணசேகர் இயக்கியிருந்தார். கடந்த ஏப்ரல் 14ம் தேதி ரிலீசான திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. சமந்தாவின் நெருங்கிய தோழியும், சக நடிகையுமான கீர்த்தி சுரேஷ் சமந்தாவை “வலிமையான இதயம் கொண்டவர்” என பாராட்டியுள்ளார். ரசிகர் […]

Continue reading …

முரளிதரனின் பயோபிக் திரைப்படம் பர்ஸ்ட்லுக்!

Comments Off on முரளிதரனின் பயோபிக் திரைப்படம் பர்ஸ்ட்லுக்!

‘800’ என்ற பெயரில் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வீரரான முத்தையா முரளிதரனின் பயோபிக் உருவாகி வருகிறது. நடிகர் விஜய் சேதுபதி முதலில் இப்படத்தில் முரளிதரனாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் முரளிதரனின் இலங்கைப் போர் தொடர்பான தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக, இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என தமிழ் அமைப்புகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து விஜய் சேதுபதி, இப்படத்தில் இருந்து விலகினார். அதையடுத்து தற்போது படத்தில் வில்லனாக நடித்த மதுர் மிட்டல், […]

Continue reading …

சந்தா வசூலிக்க ஜியோ திட்டமா?

Comments Off on சந்தா வசூலிக்க ஜியோ திட்டமா?

தற்போது ஐபிஎல் போட்டிகளை ஜியோ சினிமா இலவசமாக ஒளிபரப்பு வருகிறது. இதனால் கோடிக்கணக்கான மக்கள் இலவசமாக ஐபிஎல் போட்டிகளை கண்டு களித்து வருகின்றனர். ஐபிஎல் சீசன் முடிந்தவுடன் பயனர்களிடமிருந்து சந்தா கட்டணத்தை வசூலிக்க ஜியோ சினிமா முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இலவசமாக தற்போது ஐபிஎல் போட்டிகள் உட்பட பல நிகழ்ச்சிகளை ஜியோ சினிமா தந்து கொண்டுள்ளது. விரைவில் சந்தா வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து மாறும் சந்தா கொடுத்து விபரம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. ஜியோ […]

Continue reading …

ராம்சரண் படத்தைத் தொடங்கும் ஷங்கர்!

Comments Off on ராம்சரண் படத்தைத் தொடங்கும் ஷங்கர்!

“இந்தியன் 2” திரைப்படத்தை கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கி தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை. படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். சமீபத்தில், படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது. இந்த ஷூட்டிங் முடிந்ததும் இந்தியா திரும்பும், ஷங்கர் வரும் 23ம் தேதி முதல் ஐதராபாத்தில் ராம்சரண் நடிக்கும் […]

Continue reading …

படிப்படியாக குறையும் கொரோனா!

Comments Off on படிப்படியாக குறையும் கொரோனா!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் 11,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது படிப்படியாக குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது பொதுமக்களுக்கு பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மத்திய சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி நாடு முழுவதும் 7633 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மொத்தம் 61233 என உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொரோனாவால் […]

Continue reading …

ஆன்லைன் செயலியில் கடனால் இளைஞர் தற்கொலை!

Comments Off on ஆன்லைன் செயலியில் கடனால் இளைஞர் தற்கொலை!

கடன் வாங்கியவர்களை மிரட்டுவதால் பலர் தற்கொலை செய்து கொள்கின்றனர். தற்போது ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கிய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன பெல்லாளம் பகுதியைச் சேர்ந்த 22 வயது வசந்த் ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கி உள்ளார். ஒரு லட்சம் பணத்தை திருப்பி கட்ட முடியவில்லை என்று அவர் மிரட்டப்பட்டதால் விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து அவரது உடலை […]

Continue reading …

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!

Comments Off on தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை..!

அரசு தேர்வு துறை இயக்ககம் தனியார் பள்ளி நிர்வாகம் தங்களது பள்ளி ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு அனுப்பாவிட்டால் அந்த பள்ளிகளின் முடிவுகள் வெளியிடப்படாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வுகள் முடிவடைந்துள்ளது. தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. இந்த விடைத்தாள்களை பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்களை திருத்தி வருகின்றனர். தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்துவதற்கு அனுப்பப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் அரசு தேர்வு இயக்ககம் […]

Continue reading …