Home » Posts tagged with » Netrikkan (Page 296)

அமைச்சரின் பேச்சுக்கு டிடிவியின் டுவிட்டர் பதில்!

Comments Off on அமைச்சரின் பேச்சுக்கு டிடிவியின் டுவிட்டர் பதில்!

டிடிவி தினகரன் டுவிட்டரில், “ஆணவத்துக்கு முடிவு ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. அம்மா அவர்கள் உயிரோடு இருக்கும்வரை திமுகவானது மக்களால் தொடர்ந்து தண்டிக்கப்பட்டது அவசர அமைச்சரும் அறிந்திருக்கக்கூடும்’’- என்று பதிலளித்துள்ளார். இன்று திமுக சட்டப்பிரிவு அணியினர் மத்தியில் பேசிய அமைச்சர் மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏ1 ஆகவும், அவருடைய நெருங்கிய தோழி சசிகலாவை ஏ2 ஆகவும் கம்பி எண்ண வைத்தது திமுகவின் சட்டத்துறை என்று தெரிவித்தார். இது, அதிமுகவினர் […]

Continue reading …

காரைக்குடி மாநகராட்சியாகிறதா?

Comments Off on காரைக்குடி மாநகராட்சியாகிறதா?

காரைக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மாநகராட்சி அந்தஸ்தை தற்போது காரைக்குடி பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1928ம் ஆண்டு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது காரைக்குடி நகராட்சியாக உயர்த்தப்பட்டது. சிவகங்கை மாவட்டமாக பிரிந்த பின் தேர்வுநிலை நகராட்சியாகவும் தற்போது சிறப்பு நிலை நகராட்சியாகவும் காரைக்குடி உயர்ந்துள்ளது. காரைக்குடி நகராட்சியில் 36 வார்டுகள் இருக்கும் நிலையில் அங்கு ஒன்றரை லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நகராட்சியின் ஆண்டு வருமானம் 50 கோடிக்கு மேல் உள்ளது. போக்குவரத்து கழகம் […]

Continue reading …

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்!

Comments Off on பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்!

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி பொது இடங்களில் பொதுமக்கள் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் தற்போது வெளியான தகவலின் படி சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக வருகிறது. இதையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி […]

Continue reading …

லண்டன் சொத்து குறித்து டி.டி.வி.தினகரன் பேட்டி!

Comments Off on லண்டன் சொத்து குறித்து டி.டி.வி.தினகரன் பேட்டி!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் லண்டனில் “எனக்கு சொத்து இருந்தால் அதை தாராளமாக அரசுடமையாக்கலாம், அல்லது நானே அரசுடைமையாக்கி தருகிறேன்” என்று தெரிவித்துள்ளார். திமுக பிரமுகர்கள் மற்றும் திமுக அமைச்சர்களின் சொத்து பட்டியல் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரனுக்கு லண்டனில் சொத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த டிடிவி தினகரன், ‘லண்டனில் எனக்கு சொத்து இருந்தால் அதை தாராளமாக அரசுடமையாக்கலாம், […]

Continue reading …

பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர்!

Comments Off on பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் முதலமைச்சர்!

முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டர் பாஜகவிலிருந்து விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் மே மாதம் கர்நாடக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியமைக்க பாஜக தீவிரமாக திட்டமிட்டு வருகிறது. முக்கிய பிரமுகர் கட்சியை விட்டு விலகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரான ஜெகதீஷ் ஷெட்டர் நடப்பு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏவாகவும் இருந்து வருகிறார். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக போட்டியிட தனக்கு […]

Continue reading …

மதுபான கொள்கை முறைகேடு; அரவிந்த் கெஜ்ரிவால் கைதா?

Comments Off on மதுபான கொள்கை முறைகேடு; அரவிந்த் கெஜ்ரிவால் கைதா?

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐ முன் ஆஜராகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஏற்கனவே டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாக டில்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஆஜராக வேண்டும் என டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதால், இன்று அவர் ஆஜராகவுள்ளார். சிபிஐ முன் இன்று ஆஜராக உள்ள […]

Continue reading …

அரசுப் பள்ளிகளில் மாணவர்களை அதிகரிக்க புதிய ப்ளான்!

Comments Off on அரசுப் பள்ளிகளில் மாணவர்களை அதிகரிக்க புதிய ப்ளான்!

பள்ளிக்கல்வித்துறை தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. சமீப காலமாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. கொரோனாவிற்கு பிறகான பொருளாதார நெருக்கடி காரணமாக பல மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆண்டு பொதுத்தேர்வுகள் நடந்து முடியவுள்ள நிலையில் விரைவில் பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நாளை முதல் அனைத்து […]

Continue reading …

நடிகர் சூர்யாவின் “கங்குவா” டீசர்!

Comments Off on நடிகர் சூர்யாவின் “கங்குவா” டீசர்!

நடிகர் சூர்யாவின் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “சிறுத்தை” சிவா இணையும் திரைப்படத்திற்கு “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. “சிறுத்தை” சிவா இயக்குகிறார் என்றதும் கிராமத்து கதையாகதான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அரச காலத்து கதை போன்ற மோஷன் டீசர் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தற்போது திரைப்படத்தின் டைட்டில் “கங்குவா” என பெயரிடப்பட்டுள்ளது. “சிறுத்தை” சிவா இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரபல இந்தி நடிகை திஷா பதானி நடிக்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். படம் தமிழ், […]

Continue reading …

சூடானில் ராணுவப்போர்!

Comments Off on சூடானில் ராணுவப்போர்!

ஒமார் அல் பஷீரின் கீழான ராணுவ ஆட்சி சூடான் நாட்டில் நடந்து வருகிறது. ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல் எழுந்துள்ளதால் இந்தியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். ராணுவத்தினரிடையே அங்கும் மோதல் நிகழ்ந்துள்ளது. ஆர்.எஸ்.எப் என்ற துணை ராணுவ படைகளை ராணுவத்துடன் இணைப்பது தொடர்பாக துணை ராணுவ கமாண்டர் முகமது ஹம்தான் தக்லா மற்றும் ராணுவ தளபதி அப்தல் பதா அல் பர்ஹான் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இம்மோதல் சம்பவம் போராக வெடித்துள்ளது. சூடான் துணை ராணுவ படையினரின் முகாமை […]

Continue reading …

மகனையே வெட்டிக் கொன்ற தந்தை!

Comments Off on மகனையே வெட்டிக் கொன்ற தந்தை!

வேறு சமூக பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் தன் சொந்த மகனை தந்தையே துள்ளத் துடிக்க கொன்ற சம்பவம் கிருஷ்ணகிரி அருகே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையிலுள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி மனைவி சுந்தரி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 25 வயதான மகன் சுபாஷ் தனது பாட்டி கண்ணம்மாள் வீட்டில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த அனுசுயா என்ற பெண்ணுக்கும் […]

Continue reading …