Home » Posts tagged with » Netrikkan (Page 297)

மாணவர்களுடன் உல்லாசம்: 6 பெண் ஆசிரியர்கள் கைது

Comments Off on மாணவர்களுடன் உல்லாசம்: 6 பெண் ஆசிரியர்கள் கைது

அமெரிக்காவில் பள்ளி வளாகத்திலேயே மாணவர்களுடன் உல்லாசமாக இருந்த ஆறு பெண் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவிலுள்ள டான்வில்லி பகுதியில் 38 வயதான பெண் ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. இவ்வழக்கில் அவர் கைது செய்யப்பட்டபோது 16 வயதுள்ள இரண்டு மாணவர்களுடன் அவர் மூன்று முறை உடலுறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதேபோல் 32 வயதான ஹீடர் கேர் என்ற பெண் ஆசிரியரும் டீன் ஏஜ் […]

Continue reading …

கே.எஸ்.அழகிரியின் கேள்வி!

Comments Off on கே.எஸ்.அழகிரியின் கேள்வி!

கே.எஸ்.அழகிரி அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். வீட்டு வாடகை உள்பட வீட்டு செலவுக்கு தனது நண்பர்கள் கொடுத்து உதவுகின்றனர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார். அண்ணாமலைக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்ற கேள்வியை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது “50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் இருமுறை எம்எல்ஏ, ஒருமுறை எம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருக்கும் […]

Continue reading …

இறந்தவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு!

Comments Off on இறந்தவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு!

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனாவால் இறந்ததாக அறிவிக்கப்பட்டவர் தற்போது மீண்டும் உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் பகுதியில் கொரோனா தொற்றால் கமலேஷ் 2021ம் ஆண்டு கமலேஷ் இறந்து விட்டதாக கூறி கொரோனா பாதுகாப்பு விதிகளை காரணம் காட்டி அவரது உடலை உறவினர்களிடம் மருத்துவர்கள் ஒப்படைக்கவில்லை. மேலும் மருத்துவமனை ஊழியர்களை அவரது உடலை இறுதி சடங்கு செய்து விட்டதாக கூறப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பின் தற்போது கமலேஷ் உயிருடன் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த […]

Continue reading …

ஷூட்டிங்கில் இயக்குனரும் ஹீரோவும் மோதல்!

Comments Off on ஷூட்டிங்கில் இயக்குனரும் ஹீரோவும் மோதல்!

சமீபத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிக்கும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இத்திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு “சிங்கப்பூர் சலூன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தை இயக்குனர் கோகுல் இயக்கி வருகிறார். ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். படத்தில் ஆர்.ஜே.பாலாஜி சலூன் கடை வைத்திருக்கும் நபராக நடித்து வருகிறார் என்பது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்து தெரிய வருகிறது. படத்தின் ஷூட்டிங்கின் போது இயக்குனர் கோகுலுக்கும், ஆர்.ஜே.பாலாஜிக்கும் கருத்து மோதல் எழுந்ததால் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Continue reading …

ஹரி பத்மன் ஜாமின் மனு நிராகரிப்பு!

Comments Off on ஹரி பத்மன் ஜாமின் மனு நிராகரிப்பு!

சிறையில் அடைக்கப்பட்டிருந்த கலாஷேத்ரா விகாரத்தில் உதவி பேராசிரியர் ஹரி பத்மன்னுக்கு ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன. ஹரி பத்மன் உள்பட நான்கு பேர் மீது சென்னையிலுள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற மாணவி ஒருவர் தனக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியதையடுத்து கைது செய்யப்பட்டனர். பேராசிரியர் ஹரி பத்மன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தார். நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. ஹரி பத்மனின் ஜாமின் மனுவை தள்ளுபடி […]

Continue reading …

ரஷியாவில் எரிமலை வெடிப்பு!

Comments Off on ரஷியாவில் எரிமலை வெடிப்பு!

இன்று ஷிவேலுச் என்ற எரிமலை ரஷ்யாவில் வெடித்து சிதறியதில் சுமார் 10 கி.மீட்டர் உயரத்திற்கு சாம்பல் எழும்பியுள்ளது. ரஷியாவில் அதிபர் புதின் உத்தரவின் படி உக்ரைன் நாட்டின் மீது போர் நடந்து வருகிறது. ரஷியாவின் கம்சாட்ஸ்க் என்ற தீபகற்பத்தில் உள்ள ஷிவேலுச் என்ற எரிமலை இன்று வெடித்துள்ளது. இதில், சுமார் 10 கிமீட்டர் உயரத்திற்குச் சாம்பல் புகை மேலே எழும்பியுள்ளது. அதிகாரிகள் 15 கி.மீட்டர் உயரத்திற்குச் சாம்பல் வெடிப்புகள் எந்நேரத்திலும் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த […]

Continue reading …

திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்குப் பின் உயிரிழப்பு!

Comments Off on திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்குப் பின் உயிரிழப்பு!

திருமணம் ஆகாத சிறுமி பிரசவத்திற்கு பின் உயிரிழந்ததால் மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த 17வயது சிறுமி திருமணமாகாத நிலையில், கர்ப்பமானதால் பெற்றோர் அதிர்ச்சசியடைந்துள்ளனர். அவரை அங்கேயுள்ள தனியார் மருத்துவமனையில் 7 மாத கர்ப்பிணி மகளை அனுமதித்தனர். கடந்த 7ம் தேதி சிறுமிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பின்னர், சிறுமியின் உடல் நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் […]

Continue reading …

சிறைத்துறையில் துணை ஜெயிலர் பணியிடங்கள்!

Comments Off on சிறைத்துறையில் துணை ஜெயிலர் பணியிடங்கள்!

துணை ஜெயிலர் பணியிடங்களை நிரப்புபவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு சிறைத்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சிறைத்துறையில் காவல் அதிகாரிகள், சமையாளாளர்கள், உதவியாளர்கள் என பல்வேறு பணிகளில் பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவ்வபோது சிறைத்துறையில் காலியாகும் பணியிடங்களுக்கு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் நிரப்பப்பட்டுகின்றன. அவ்வகையில் தற்போது தமிழ்நாடு முழுதும் சிறைச்சாலைகளில் 59 துணை ஜெயிலர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த துணை ஜெயிலர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி 59 துணை ஜெயிலர் […]

Continue reading …

பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது

Comments Off on பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது

பாஜக நிர்வாகி செல்வகுமார், செந்தில் பாலாஜி குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக நிர்வாகி செல்வகுமார் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் துறையில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தமிழக பாஜகவின் ஐடி விங் மாநில தலைவராக இருக்கும் செல்வகுமார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் […]

Continue reading …

ஏப்ரல் 20 சிறுகுறு நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டம்!

Comments Off on ஏப்ரல் 20 சிறுகுறு நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டம்!

சிறுகுறு நிறுவனங்கள் மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 20ம் தேதி சிறுகுறு நிறுவனங்கள் கதவடைப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. இன்று தமிழ்நாடு சிறு குறு தொழில் சங்கத்தின் துணைத்தலைவர் சுருளிவேல் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “எங்களது செயற்குழு கூட்டம் திருச்சியில் நடந்தது. மின்வெட்டால் தொழில் முனைவோர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏப்ரல் 20-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொழில் நிறுவனங்களை […]

Continue reading …