
டிஜிபி பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வரவிருப்பதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. பிரதமர் மோடி வரும் எட்டாம் தேதி தமிழகம் வருகிறார் என்பதும் அன்றைய தினம் அவர் சென்னை கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். பிரதமர் வருகைக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு செய்து கொண்டிருக்கிறது. பிரதமர் வருகையை ஒட்டி தலைமைச் செயலாளர், டிஜிபி, சென்னை கமிஷனர் ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் […]
Continue reading …
காலைக்கால் கலெக்டர் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் காரைக்காலைச் சேர்ந்த 35 வயது பெண் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்த மருத்துவர்கள், இணை நோய்கள் அவருக்கு இருந்ததால் உயிரிழப்பு ஏற்பட்டதாக மருத்துவமனை அதிகாரிகள் விளக்கமளித்தனர். காரைக்கால் மாவட்டத்தில், கடந்த 4 நாட்களில் 20க்கும் அதிகமானோர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காரைக்காலில் ஒன்றரை ஆண்டிற்குப் பின் கொரொனா […]
Continue reading …
மாதம் 1ம் தேதியானால் சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளியாவது வழக்கமாகி விட்டது. அவ்வகையில் இன்று ஏப்ரல் ஒன்றாம் தேதி சிலிண்டர் விலை குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டரின் விலை ரூபாய் 76 குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ.2,268 என விற்பனையாகி வந்த வணிக பயன்பாட்டு சிலிண்டர் இன்று முதல் 76 குறைந்து 2012 ரூபாய் என விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் வீட்டு பயன்களுக்கு உபயோகப்படுத்தப்படும் […]
Continue reading …
இன்று தமிழகத்தில் சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெறவேண்டுமென்று வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் 460 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, இன்று தமிழகம் முழுதும் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் 29 சுங்கச்சாவடிகள் உள்ளது. இதில், 15 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனவே மீதமுள்ள 14 சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் மாதம் முதல் கட்டண […]
Continue reading …
ரஷ்யா இந்தியாவும் சீனாவும் எங்கள் முக்கிய கூட்டு நாடுகள் என்று பகிரங்கமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் அமெரிக்கா உட்பட்ட நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து ஒரு ஆண்டுக்கு மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன. ஆனால் இந்தியா மற்றும் சீனா மட்டுமே ரஷ்யாவுக்கு ஆதரவளித்து, போரை நிறுத்த சமாதான பேச்சுவார்த்தை மட்டுமே நடத்தி வருகிறது. இந்தியா மற்றும் சீனா ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுடைய […]
Continue reading …
ஆணுக்குப் பெண் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் கோவை காந்திபுரத்தைச் சேர்ந்த ஷர்மிளாதான். இவர் பேருந்தை அனாயசமாக வளைத்து ஓட்டுவதில் வல்லவர். காந்திபுரம் பேருந்து நிலையத்தின் புதிய ஸ்டார் ஆகிவிட்ட ஷர்மிளாவுடன் செல்பி எடுக்கவும் கூட்டம் அலைமோதுகிறது. இதுபற்றி ஷர்மிளா கூறும்போது, “எனது தந்தை ஓட்டும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டிப்பார்த்ததேன். தந்தைக்கு துணையாகவும் ஆட்டோ ஓட்டியிருக்கேன். பேருந்து ஓட்டுநராக வேண்டும் என்பது என்னுடைய கனவு. கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான முறையான பயிற்சி […]
Continue reading …
விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவி திடீரென மாடியிலிருந்து விழுந்து மரணமடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தேனியை சேர்ந்த 24 வயது மாணவி மகேஸ்வரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்எட் இரண்டாமாண்டு படித்து வந்தார். இவர் பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தார். நேற்று திடீரென அவர் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். மாடியிலிருந்து அவர் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்தாரா? அல்லது வேறு யாரேனும் […]
Continue reading …
“தகரா” திரைப்படம் நானி நடிப்பில் ஆக்ஷன் மற்றும் மாஸ் கலந்த பொழுதுபோக்காக உருவாகி உள்ளது. அறிமுக இயக்குநர் ஸ்ரீகாந்த ஒதெலா இந்த படத்தை இயக்கியுள்ளார். படத்தின் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கும் “தசரா” திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக கடந்த மார்ச் 30ம் தேதி ரிலீசானது. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், படம் நல்ல வசூல் செய்து வருவதாகவும், முதல் நாளில் மட்டும் உலகம் […]
Continue reading …
மராட்டியத்தில், சிவசேனாவினின் (உத்தவ் அணி) எம்பி.சஞ்சய் ராவத்திற்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடந்து வருகிறது. இம்மாநிலத்தின் சிவசேனா( உத்தவ் தாக்கரே அணி) நாடாளுமன்ற மேலவை எம்பியாக சஞ்சய் ராவத் உள்ளார். இவருக்கு பாடகர் சித்து மூஸ்வாலாவை கொன்ற லாரன்ஸ் பிஸ்க்னோய் கும்பலிடமிருந்து கொலைமிரட்டல் வந்துள்ளது. இதுபற்றி அவர் போலீஸீல் புகாரளித்துள்ளார். அதில்,’டெல்லியில் வந்து என்னைச் சந்தித்துப் பார்..ஏகே.47 ரக துப்பாக்கியால் சுட்டுக் […]
Continue reading …
போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் முக்கிய சாலைகளான சென்னை ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் ஆகிய 2 சாலைகளையும் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து இணைக்கும் வகையில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை தெரிவித்துள்ளது. முதல் கட்டமாக ஓஎம்ஆர் ஈசிஆர் சாலைகளை நீலாங்கரையில் இணைக்கும் பணி ரூபாய் 18 கோடியில் முடிக்கப்பட்டு இருப்பதாகவும் பக்கிங்ஹாம் கால்வாயை கடந்து ஓஎம்ஆர் & இசிஆர் சாலையை இணைப்பதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மூலம் பக்கிங்காம் கால்வாய் […]
Continue reading …