
ஹால்மார்க் தர நிர்ணய அமைப்பு ஒவ்வொரு நகைக்கடைக்கும் ஆறு இலக்க தனி HUID எண் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. ஹால்மார்க்குடன் ஆறு இலக்க HUID எண்கள் உள்ள தங்க நகைகளை மட்டுமே ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் விற்பனை செய்ய அனுமதி என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து 6 இலக்க HUID எண்ணை பதிவிட்டு நகை விவரங்களை அறிந்து கொள்ளலாம் என இதற்கான பிரத்தியேக செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லேசர் கட்டிங் முறையில் ஹால்மார்க் விவரங்களை தங்க […]
Continue reading …
கோலா நடனம் ஆடிக் கொண்டிருந்த நடன கலைஞர் மாரடைப்பு ஏற்பட்டதால் மேடையிலேயே மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கன்னட சினிமாவில் சமீபத்தில் வெளியான “காந்தாரா” திரைப்படத்தில், கோலா நடனம் இடம்பெற்றது.இது, கன்னட பிரதேசத்தில் மக்களிடையே பிரபலம். கர்நாடக மாநிலத்தில், கடற்கரையோர கிராமங்களில் உள்ள கலைஞர்கள் பூத அராதனா செய்வார்கள். தக்ஷினா கன்னட மாவட்டத்தில், தெய்வீக கலை நிகழ்ச்சியில் பங்கேற்று ‘பூத கோலா ‘நடனம் ஆடிக் கொண்டிருந்த கந்து அஜிலா என்ற நடன கலைஞர் மாரடைப்பு […]
Continue reading …
பிரதமர் மோடியின் கல்வித்தகுதி குறித்து டில்லி யூனியனில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை மதுபான ஊழல் விவகாரத்தில் சிபிஐ போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதனால், ஆளும் கட்சியாக ஆம் ஆத்மி கட்சியினரிடையே இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி கட்சி ஆதவாளர்கள் சிலர் பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஓட்டிய நிலையில், இதற்குப் பதிலடியாக பாஜகவினரும் கெஜ்ரிவாலுக்கு எதிராக ‘கெஜ்ரிவாலை நீக்குங்கள், டெல்லியை காப்பாற்றுங்கள்’ என்று […]
Continue reading …
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ரூபாய் 12 கோடி செலவில் ஔவை பாட்டிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஔவை பாட்டிக்கு மணிமண்டபம் அமைப்பது தொடர்பான வரைபடம் தயார் செய்யப்பட்டு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இன்னும் சிறப்பாக டிசைன் செய்ய முதலமைச்சர் அறிவுறுத்தியதையடுத்து அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். ஔவையார் என்றாலே ஆத்திச்சூடி தான் அனைவருக்கும் ஞாபகம் வரும் நிலையில் சங்க கால தமிழ் புலவர்களில் […]
Continue reading …
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக கட்சிக்காரர்கள் கட்டுப்பாடின்றி அராஜகங்கள் செய்து வருவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தில் இப்ராஹிம் என்பவரை வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, இன்று சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “பழக்கடை நடத்தி வரும் ஞாசேகருக்கு சாந்தி என்ற மனைவியும், ராஜசேகார், வல்லரசு என்ற இரு மகன்கள் உள்ளனர். ஞானசேகருக்கு வேறொரு […]
Continue reading …
“விடுதலை” திரைப்படம் கடந்த ஆண்டே ரிலீசாக வேண்டிய நிலையில் மார்ச் இறுதியில் ரிலீசாகும் என சொல்லப்படுகிறது. திரைப்படத்தை முதலில் 4 கோடி ரூபாயில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் 40 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்கள் இதில் இணைந்தனர். ஷுட்டிங் முடிந்து தற்போது தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. படத்தின் டப்பிங் சமீபத்தில் நடந்து முடிந்தன. படத்தின் பாடல்கள் மற்றும் இசை […]
Continue reading …
போக்குவரத்துத் துறை அமைச்சர் தமிழக அரசின் விரைவு பேருந்துகளில் ஒரு மாதத்தில் 5 தடவைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு 50% சலுகை வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணிகளை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. தனியார் பேருந்துகள் சொகுசாக இருப்பதால் அரசு பேருந்துகளை நீண்ட தூரத்தில் பயணம் செய்யும் பயணிகள் தவிர்த்து வருகின்றனர். அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் ஒரு மாதத்திற்கு ஐந்து முறைக்கு மேல் […]
Continue reading …
சென்னையைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் கடுமையான உடற்பயிற்சி செய்ததன் காரணமாக ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை ஆவடி அருகே நெமிலிச்சேரி பகுதியைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் ஆகாஷ். 25 வயதான இவர், ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கடந்த சில நாட்களாக கடுமையாக உயர்ச்சி செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த 22ம் தேதி அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடீரென ரத்த […]
Continue reading …
திடீரென திருவண்ணாமலை மாவட்டத்தில் 3000 அரசு ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்து திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று 3000 அரசு ஊழியர்கள் அரசு அலுவலகங்களுக்கு செல்லவில்லை என்பதால் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த […]
Continue reading …
ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளுக்கு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பு குறித்து குழப்பங்கள் நிலவி வருகிறது. இதுகுறித்து பேடிஎம் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கூகுள் பே, போன் பெ, பேடிஎம் போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலமாக இந்தியா முழுவதும் பல்வேறு பணப்பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாக நடந்து வருகிறது. இந்த செயலிகள் மூலம் ரீசார்ஜ், டிக்கெட் புக்கிங் உள்ளிட்ட சேவைகளையும் வாடிக்கையாளர்கள் பெற்று வருகின்றனர். என்பிசிஐ வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் ஏப்ரல் 1 முதல் ரூ.2000க்கும் அதிகமான […]
Continue reading …