
இன்று சுப்ரீம் கோர்ட்டில் அதானி விவகாரம் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு ஒரு முக்கிய தகவலை தெரிவித்துள்ளது. அதானி குழும நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம் காட்டிய நிலையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் மோசமான சரிவை சந்தித்தன. இதனால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தை அடைந்துள்ளது. அதானி குழுமங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு பதிவு […]
Continue reading …
தேமுதிக தலைவரான விஜயகாந்த் பசியால் இனி ஒரு உயிர்கூடபோகாத நிலையை உருவாக்கவேண்டும்- என்று தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் வறுமையால் இரண்டு உயிர்கள் உயிரிழந்தனர். இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் உணவில்லாமல் உயிரிழந்த இருவரை புதைக்க பணம் இல்லாததால் 7 நாட்கள் பிணத்துடன் அவரது குடும்பத்தினர் இருந்துள்ள சம்பவத்தை கேட்டு எனது மனம் ரணமாகி போனது. தனி ஒருவனுக்கு உணவு உணவு இல்லையெனில் ஜெகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி. ஆனால் இன்றைய நிலையில் […]
Continue reading …
தேமுதிக பொருளாளர் பிரேமலா விஜயகாந்த் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவின் நடுக்கடலில் பேனா சிலை வைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மெரினா நடுக்கடலில் பேனா சிலை வைக்க சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவ்வகையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “எழுதாத பேனாவுக்கு நினைவுச் சின்னம் வைப்பது என்பது தேவையில்லாதது என்றும் அதுவும் கடலில் வைப்பது தேவையில்லாதது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தல் என்பது ஜனநாயகமா? அல்லது பணநாயகமா? அது […]
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றம் ஆர்.எஸ்.எஸ். பேரணி குறித்து முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் பேரணிக்கு தடை விதிக்க வேண்டும் என ஒரு சில அரசியல் கட்சிகள் கூறிய நிலையில் நான்கு சுவற்றுக்குள் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் அமைப்பு மேல் முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது யாரையும் சீண்டாமல் விதிகளை கடைபிடித்து பேரணியை நடத்த வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு சென்னை […]
Continue reading …
இந்தியாவில் முதன் முறையாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சலால் ஹைமானா என்ற பகுதியில் இந்தியாவில் முதல் முறையாக 5.9 மில்லியன் தான் லித்தியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மத்திய சுரங்க துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மொபைல் போன் பேட்டரிகள், எலக்ட்ரிக் வாகனங்கள் பேட்டரிகள் உள்ளிட்டவை தயாரிப்பதற்கு லித்தியம் மிகவும் முக்கியம் என்ற நிலையில் தற்போது இந்தியாவிலேயே 5.9 மில்லியன் டன் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. இதற்கு […]
Continue reading …
எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் டிரோனைசுட்டு வீழ்த்தியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நாட்டின் டிரோன் ஒன்று வருவதை எல்லை பாதுகாப்பு படையினர் பார்த்தனர். இதையடுத்து அந்த டிரோனை எல்லை பாதுகாப்பு வீரர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளனர். சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோனில் 3 கிலோ ஹெராயின் மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் தோட்டாக்கள் ஆகியவை இருந்ததாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி […]
Continue reading …
வருமானவரித்துறை ஆன்லைன் விளையாட்டு மூலம் பணம் வென்ற நபர்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்கள் பலரும் ஆன்லைன் விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ஆன்லைன் விளையாட்டுகள் அறிவுசார் விளையாட்டுகள் என அவ்விளையாட்டு நிறுவனங்கள் கூறி வந்தாலும், சூதாட்டங்கள் என புகார்களும் இருந்து வருகிறது. இந்தியாவில் இதுபோன்று ஆன்லைன் விளையாட்டுகள் மூலம் ரூ.10 ஆயிரத்திற்கும் மேல் வெற்றி பெறுபவர்களுக்கு வரி பிடித்தம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. வருமானவரி சட்டம் 1961 […]
Continue reading …
ஏற்கனவே இரண்டு முறை நடிகை சமந்தாவின் “சாகுந்தலம்” திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித்திர திரைப்படமான சமந்தா நடித்த “சாகுந்தலம்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்ட கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியாகுமென்றும் அதன் பின் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட […]
Continue reading …
நடிகர் கமலஹாசன் நடிப்பதோடு மட்டுமல்லாமல் அரசியல்வாதி என பல துறைகளிலும் செயலாற்றி வருகிறார். “விக்ரம்“ திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் கமல்ஹாசன் அடுத்தடுத்து வரிசையாக திரைப்படங்களில் நடிக்க முடிவெடுத்துள்ளார். மகேஷ் நாராயணனோடு ஒரு படம், “இந்தியன் 2,” மீண்டும் லோகேஷோடு ஒரு படம் என அடுத்தடுத்து கமிட்மெண்ட்களில் உள்ளார். இயக்குனர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோர் கமலுக்கு கதை சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இப்போது கமல்ஹாசன் இயக்குனர்கள் சந்தானபாரதி, பா.ரஞ்சித், வெற்றிமாறன் மற்றும் இயக்குனர் தரணி ஆகியோருடன் […]
Continue reading …
மொட்டை கடுதாசி மூலம் அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பதே வழக்கமாக வைத்துள்ளனர் கேரளாவைச் சேர்ந்த தாயும் மகனும். சமீபத்தில் கேரளாவில் கொல்லம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சமீபத்தில் கடுதாசி ஒன்று வந்துள்ளது. அதில் ஆட்சியர் அலுவகத்தில் வெடிகுண்டு இருப்பதாக செய்தி இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக கலெக்டர் அலுவலகம் முழுதும் வெடிகுண்டு சோதனை நடத்தினர். ஆனால் அப்படி ஏதும் வெடிகுண்டு அங்கில்லை. அதை தொடர்ந்து மொட்டை கடுதாசி அனுப்பியது யார் என போலீசார் விசாரணையை […]
Continue reading …