
ஓபிஎஸ் மகனான ஒபி ரவீந்திரநாத் எம்பிக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று டில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் அதிமுக மக்களவை எம்பி என்று குறிப்பிட்டு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அதிமுக எம்பி ஆக ரவீந்திரநாத்தை கருதக்கூடாது என […]
Continue reading …
இயக்குனர் மாரி செல்வராஜ் யோகி பாபுவை வைத்து நிச்சயம் படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார். நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் “பொம்மைநாயகி” திரைப்படத்தை பா ரஞ்சித் தயாரித்துள்ளார். இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றாக யோகி பாபு நடிக்கும் “பொம்மைநாயகி” படமும் உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மாரி […]
Continue reading …
நடிகர் விஜய்யின் மகனான சஞ்சய் இயக்கும் குறும்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி உள்ளது. நடிகர் விஜய் தற்போது விஜய்67 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். அவரது மகன் சஞ்சய் தற்போது குறும்படம் இயக்கி வரும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே விஜய்யின் “போக்கிரி” படத்தில் ஒரு பாடலுக்கு அறிமுகமான சஞ்சய், கனடாவில் உள்ள யுனிவர்ஷிட்டியில் சினிமா பற்றி படித்து வருகிறார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
Continue reading …
பாஜக தொண்டர்கள் தன்னை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் சர்ச்சைகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கடந்த சில காலமாகவே பாஜக தமிழக தலைவராக இருக்கும் அண்ணாமலை விஷயங்கள் தொடர்பான ஆடியோ உரையாடல் வெளியாகி சர்ச்சையானது. அதை தொடர்ந்து அண்ணாமலையை விமர்சித்த காய்த்ரி ரகுராம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் சமீபமாக பாஜக முன்னாள் பிரமுகர்கள், மாற்று கட்சியினரால் பாஜக தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. அதற்கு பாஜக தொண்டர்கள் பலரும் கமெண்ட் செய்வதால் […]
Continue reading …
இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர் கைலாஷ் கெர் மீது பாட்டில் வீசித் தாக்கப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது. இந்தி சினிமாவில் முன்னணி பாடகராக இருப்பவர் கைலாஷ் கேர். இவர் உத்தரபிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்தவர். கடந்த 2022ம் ஆண்டு வெளியான “வைசா பி ஹோதா ஹை பரர்ட் 2” என்ற படத்தில் இடம்பெற்ற “அல்லாஜ் கே பந்த்” என்ற பாடலின் மூலம் சினிமாவில் பின்னணி பாடகராக அறிமுகமானார். அதன்பின்னர், தமிழில் ஜிவி பிரகாஷ்குமார் இசையில், “வெயில்” […]
Continue reading …
பள்ளிகளைச் சுற்றி புகைப்பது அதிகரித்துள்ளதால் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கப்படுவதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். தர்மபுரி எம்பியும், பாமக தலைவருமான அன்புமணி ராமதஸ் தனது டுவிட்டரில், “சென்னையில் பள்ளிகளை சுற்றியுள்ள பொது இடங்களில் புகைப்பது அதிகரித்திருப்பதாகவும், அதனால் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகள் சிகரெட் புகையை சுவாசித்து பாதிப்புகளுக்கு உள்ளாவதாகவும் தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது. இது பெரும் கவலையளிக்கிறது! ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மற்றவர்கள் செய்யும் குற்றத்திற்காக தண்டிக்கப்படக்கூடாது. அதற்காகத்தான் நான் […]
Continue reading …
தனியார் பேருந்து ஒன்று அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்திலிருந்து துறையூர் நோக்கி சென்ற போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று காலை ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்திலிருந்து துறையூர் நோக்கி தனியார் பேருந்து ஒன்று புறப்பட்டது. செந்துறை அடுத்துள்ள ராயம்புரம் பகுதியில் சாலையிலிருந்த பள்ளத்தில் இறங்கி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் 20 வயது கல்லூரி மாணவர் கார்த்தி என்பவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். அவர்களை மீட்டு அரியலூர் மற்றும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் […]
Continue reading …
நாளை முதல் 144 அமலில் இருக்கும் என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவன் என்று தெரிவித்துள்ளார். புதுவையில் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் ஜி 20 மாநாடு தொடர்பான கூட்டம் நடக்கும் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் வல்லவன் தெரிவித்துள்ளார். நாளை காலை முதல் பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஜி 20 மாநாடு காரணமாக நாளை […]
Continue reading …
தனது 3 வயது குழந்தையை குழந்தையின் தந்தையே கொலை செய்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள சிட்டிசாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷோசந்திரகிர் லோதி. இவர் கடந்த புதன்கிழமை அன்று குடிபோதையில் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த சந்திரகிஷோர் தன் 3 வயது மகன் ராஜை கோடரியால் வெட்டிக் […]
Continue reading …
முக்கியமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்புப் படித்து வந்துள்ளார். சில நாட்களுக்கு முன் அவரைக் காணவில்லை என மாணவியின் தந்தை போலீஸில் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மாணவி பயன்படுத்தி வரும் செல்போன் சிக்னலை வைத்து தேடிய போலீசார், மாமல்லபுரம் பகுதியில் அப்பெண் இருப்பதைக் கண்டுபிடித்தனர். எனவே, […]
Continue reading …