Home » Posts tagged with » Netrikkan (Page 392)

மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் உண்டியல் வசூல்!

Comments Off on மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் உண்டியல் வசூல்!

தேவஸ்தான அதிகாரிகள் கோடிக்கணக்கில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் வசூலாகி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உண்டியல் திறக்கப்பட்டது. அதில் 1 கோடியே 4 இலட்சத்து 37ஆயிரத்து 557 ரூபாய் ரொக்க பணம் ரொக்கம் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 544 கிராம் தங்கம் 6 கிலோ 576 கிராம் வெள்ளியும் மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 465 காணப்பட்டுள்ளதாகவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவம்பர் மாத […]

Continue reading …

உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிதி!

Comments Off on உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு நிதி!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து, நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போர் பேரூராட்சிக்கு உட்பட்ட கன்னகப்பட்டு குளத்தில், மூழ்கிய முருகேஷ், உதயகுமார், விஜய் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், குளத்தில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் மற்றும் ஆறுதல்கள் கூறியதுடன் அவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் பொது […]

Continue reading …

கொடநாடு கொலை விசாரிக்க தனிப்படை அமைப்பு!

Comments Off on கொடநாடு கொலை விசாரிக்க தனிப்படை அமைப்பு!

கொடநாடு எஸ்டேட் பங்களாவில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்குகளை விசாரிக்க 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் என்பவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி கொடநாடு எஸ்டேட் பங்களாவில் இருந்த முக்கிய ஆவணங்கள் திருடு போனதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து ஏற்கனவே பலரிடம் விசாரணை செய்த காவல்துறையினர் மேலும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரிக்க […]

Continue reading …

“தாதா” திரைப்படம் குறித்து யோகிபாபு தகவல்!

Comments Off on “தாதா” திரைப்படம் குறித்து யோகிபாபு தகவல்!

டிசம்பர் 9ம் தேதி நடிகர் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்த “தாதா” திரைப்படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்தில் தான் ஹீரோ இல்லை என்றும் நான்கே நான்கு காட்சிகளில் மட்டும்தான் நடித்துள்ளேன் என்றும் யோகிபாபு கூறியுள்ளார். இன்று யோகி பாபு நடிப்பில் உருவான “தாதா” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெயிலர் வெளியாகும் என்றும், இப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். கின்னஸ் கிஷோர் என்பவர் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் யோகிபாபு […]

Continue reading …

மஞ்சிமா மோகன் – கௌதம் கார்த்திக் டும் டும் டும்!

Comments Off on மஞ்சிமா மோகன் – கௌதம் கார்த்திக் டும் டும் டும்!

இன்று சென்னையில் நடிகர்கள் மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இளம் நடிகர் கவுதம் கார்த்திக் மணிரத்னம் இயக்கிய “கடல்” திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர். அதன் பின், “இவன் தந்திரன்,” “தேவராட்டம்,” “இருட்டு அறையில் முரட்டுக் குத்து,” “ஆனந்தம் விளையாடும் வீடு” உட்பட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் “அச்சம் என்பது மடமையடா” படத்தில் நடித்த நடிகை மஞ்சிமா மோகனை காதலிப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் சமீபத்தில் இருவருமே அந்த தகவலை உறுதி செய்தனர். இன்று […]

Continue reading …

சிறைத்துறை டிஜிபி புதிய தகவல்!

Comments Off on சிறைத்துறை டிஜிபி புதிய தகவல்!

சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தமிழ்நாட்டு சிறையிலுள்ள கைதிகளை அவருடைய உறவினர்கள் சந்திப்பதில் நவீன முறை பயன்படுத்தப்படும் என என்பவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள மத்திய சிறையில் கைதிகளை குடும்பத்தினர் சந்திக்கும் போது பொருட்களை கொடுப்பதாகவும் அதனை தடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் மத்திய சிறைகளில் கைதிகள் குடும்பத்தினரை சந்திக்கும் இடத்தில் கம்பிகளுக்கு பதிலாக கண்ணாடித் தடுப்பு அமைக்கப்படும். கைதிகள் மற்றும் உறவினர்கள் போன்கள் மூலம் பேசிக் கொள்ள ஏற்பாடு செய்யப்படும். இதன் மூலம் கைதிகளுக்கு […]

Continue reading …

வாடகைதாரர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளிக்கும் மின்வாரியம்!

Comments Off on வாடகைதாரர்களின் சந்தேகத்திற்கு விளக்கமளிக்கும் மின்வாரியம்!

மின்வாரியம் ஆதார் எண்ணை இணைத்தால் மின் இணைப்பும் வாடகைதாரரின் பெயருக்கு மாறிவிடுமா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளது. வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை மின் இணைப்பில் இணைத்தால் அவரது பெயருக்கு மின்இணைப்பு மாறாது. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய முடியும். வீட்டின் உரிமையாளர் அனுமதி அளித்தால் மட்டுமே வாடகைவீட்டில் உள்ளவர்கள் மின் இணைப்பில் தங்களது ஆதார் பதிவு செய்து கொள்ள முடியும். வாடகைதாரர் மாறும் போது புதிதாக குடியிருக்க வருவோரின் […]

Continue reading …

அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய விளக்கம்!

Comments Off on அமைச்சர் செந்தில் பாலாஜி புதிய விளக்கம்!

அமைச்சர் செந்தில்பாலாஜி 100 யூனிட்டுக்கு குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுவதை குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “கைத்தறி, விசைத்தறி, 100 யூனிட் இலவச மின்சாரம் என அனைத்திலும் ஏற்கனவே உள்ள நடைமுறை தான் பின்பற்றப்படும். அவை நிறுத்தப்பட மாட்டாது. சிறப்பு முகாம்களில் பெயர் மாற்றங்களை மேற்கொள்ளலாம். மின் வாரிய அலுவலகங்களில் முதியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி வரிசை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரே ஆதார் எண்ணை எத்தனை மின் இணைப்புகளும் இணைத்துக் கொள்ளலாம். ஒருவர் ஐந்து இணைப்புகள் வைத்திருந்தாலும் […]

Continue reading …

இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரபலம்!

Comments Off on இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரபலம்!

“அமர்க்களம்” திரைப்படத்தின் மூலமாக அஜீத் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். திருமணமாகி 23 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அஜீத் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. அதுபோல எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இல்லை. இந்நிலையில் இப்போது ஷாலினி அஜீத் […]

Continue reading …

ஒலிம்பிக் சங்கத்தில் முதல் பெண்!

Comments Off on ஒலிம்பிக் சங்கத்தில் முதல் பெண்!

பி.டி.உஷா முதல் முதலாக இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் தேர்தல் டிசம்பர் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கெடு நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த 26ம் தேதி இந்த தேர்தலில் இந்தியாவின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் பி.டி.உஷா தனது விருப்பத்தை வெளியிட்டார். இதையடுத்து இத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். பி.டி.உஷாவை தவிர வேறு யாருமே இத்தேர்தலில் […]

Continue reading …