
மத்திய ஆப்பிரிக்காவில் இறுதிச் சடங்கின் போது நிலச்சரிவு போது 14 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் நடந்துள்ளது. மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கேமரூன் நாட்டில் வயதான ஒருவர் காலமானதையடுத்து அவரை மண்ணில் புதைக்க இறுதிச்சடங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு ஏற்பட்டு மண் சரிந்தது. இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட பலரும் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து மீட்புக் குழுவினர் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணியை மேற்கொண்டனர். தற்போது […]
Continue reading …
திடீரென தமிழக மற்றும் -கேரள எல்லையில் அரசு பேருந்துகள் உட்பட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக மற்றும் கேரள எல்லையிலுள்ள இடுக்கி மாவட்டத்தில் திடீரென வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அமல்படுத்துவதை கண்டித்து போராட்டம் நடத்துவதால் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இடுக்கி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக மத்திய வனத்துறை சமீபத்தில் அறிவித்தது. எனவே வனப்பகுதியின் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள […]
Continue reading …
டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு காங்கிரஸ் பாஜக மற்றும் ஆம் ஆத்மி ஆகிய மும்முனை போட்டி உள்ளது. மூன்று கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாக்குறுதிகளை தங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு முதுநிலை படிப்பு வரை இலவசக் கல்வி என்ற வாக்குறுதியை காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய […]
Continue reading …
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், வடிவேலு நடிப்பில், சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” திரைப்படத்தின் ஷூட்டிங் மொத்தமாக நிறைவு பெற்றுள்ளது. இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார் பிரபுதேவா. இப்பாடலுக்காக சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாம். இப்பாடல் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. இப்படத்தை நவம்பரிலேயே இத்திரைப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது. படத்தின் இறுதிப் பணிகள் முடிந்து படம் 2மணிநேரம் 20 […]
Continue reading …
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் குணச்சித்திர நடிகர் ஒய்.ஜி மகேந்திரனுக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் நாடகத்துறையில் முக்கிய பங்காற்றியுள்ளவர் ஒய்.ஜி மகேந்திரன். இவர், சுமார் 5000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்கள்ல் தோன்றி பல வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். இவர் நாடகத்தில் மட்டுமின்றி, கே.பாலச்சந்திரன் நவக்கிரகம் படத்தில் அறிமுகமாகி, பரீட்சைக்கு நேரமாச்சு, நூற்றுக்கு நூறு, மீண்டும் ஒரு காதல் கதை, ஸ்ரீ ராகவேந்தர், இளைஞன், தெய்வ திருமகள், ராமராஜன், […]
Continue reading …
கடந்த சில நாட்களாக சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை அமைக்கப்படும் பணி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதைகளின் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த பாதை நாளை அதாவது நவம்பர் 27ம் தேதி திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி சிறப்பு பாதையை நாளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா போலவே விரைவில் பெசன்ட் நகர் கடற்கரையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு […]
Continue reading …
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி மக்களைக் காக்க வேண்டிய பொறுப்பு ? ஒன்றிய அரசுக்கு இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2018-2019ம் ஆண்டு கேரள வெள்ளத்தின்போது அம்மா நிலத்திற்கு வழங்கப்பட்ட 89 டன் அரிசிக்கான தொகை ரூ.205.81 கோடியை தரவேண்டுமென மத்திய அரசு கேட்டுள்ளது. அத்தொகையை தராவிட்டால், இவ்வாண்டிற்காக மாநில பேரிடர் மேலாண்மை துறையின் ஒதுக்கீட்டில் ஈடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது. இத்தொகையை வழங்க முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து, காங்கிரஸ் […]
Continue reading …
இன்று முதல் தமிழக அரசின் போக்குவரத்து துறை பேருந்துகளில் பயணம் செய்யும் போது அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயர்களை ஒலிபரப்பும் திட்டத்தை அமல்படுத்தப் போவதாக தெரிவித்துள்ளது. சென்னை மாநகர பேருந்துகளில் முதல்கட்டமாக இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் சென்னை மாநகர பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் அடுத்த பேருந்து நிறுத்தங்களில் பெயரை ஒலிபெருக்கி மூலம் இனி கேட்கலாம் என்றும் இத்திட்டம் இன்று அதாவது நவம்பர் 26 முதல் தொடங்கப்படுவதாகவும் அறிவித்துள்ளது. பேருந்து நிறுத்தங்கள் அடைவதற்கு 300 மீட்டர் தூரத்திலேயே […]
Continue reading …
ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து தலைவி என்ற திரைப்படமும், குயின் என்ற இணையத்தளத் தொடரும் வெளியானது. “தலைவி” திரைப்படத்தை விட “குயின்” இணையத்தள தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை இயக்குனர்கள் கௌதம் மேனனும், பிரசாத் முருகேசனும் இயக்கி இருந்தார்கள். இத்தொடர் பரவலான வரவேற்பைப் பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் இதை உறுதிப்படுத்தும் வகையில் ரம்யா கிருஷ்ணன் […]
Continue reading …