
திமுக நிர்வாகி இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துக் கொண்ட சம்பவம் சேலத்தில் நிகழ்ந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. மத்திய அரசு ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையில் ஆர்வம் காட்டி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அமித்ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு தன் 11வது அறிக்கையை […]
Continue reading …
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் “ரஜினி முருகன் 2” திரைப்படத்துக்கான திரைக்கதை வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘வருத்தபடாத வாலிபர் சங்கம்’ திரைப்படம் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அந்த படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த இயக்குனர் பொன்ராம், அடுத்து அதே கூட்டணியில் உருவாக்கிய “ரஜினி முருகன்” திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. இவர்கள் கூட்டணியில் மூன்றாவதாக உருவான “சீமராஜா” திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து இந்த கூட்டணி பிரிந்தது. இப்போது இயக்குனர் பொன்ராம் “ரஜினி முருகன் […]
Continue reading …
இந்தியாவின் சார்பில் அமெரிக்காவின் ஆஸ்கர் விருது விழாவுக்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்ட ‘லாஸ்ட் பிலிம் ஷோ’ திரைப்படம் பிரபல ஓடிடியில் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு யாரும் எதிர்பாராத விதமாக குஜராத்தி திரைப்படமான “செல்லோ ஷோ” என்ற திரைப்படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்படவுள்ளது. விருதுக்கான இந்தியாவின் பரிந்துரை படங்களின் பட்டியலில் “ஆர்.ஆர்.ஆர்” திரைப்படமும் இடம்பெற்றிருந்தது. ஆனால் இந்திய அரசின் சார்பில் “செல்லோ ஷோ ” என்ற குஜராத்தி படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது. குஜராத்தி படமான […]
Continue reading …
இந்த ஆண்டு அஜீத் நடித்துள்ள “துணிவு” திரைப்படம்மும் மற்றும் விஜய் நடித்த “வாரிசு” திரைப்படமும் பொங்கல் பண்டிகையொட்டி ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் “துணிவு” திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜீத் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இப்போது “துணிவு” திரைப்படத்தை வாங்கியுள்ள ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம், தியேட்டர்களை ஒப்பந்தம் செய்யும் பணிகளை ஆரம்பித்துள்ளது. புறநகர் பகுதிகளில் கூட பல திரையரங்குகள் பொங்கலுக்கு தங்கள் தியேட்டரில் “துணிவு” ரிலீசாவதை உறுதி செய்துள்ளனர். […]
Continue reading …
2022ம் ஆண்டு வெளியான முக்கிய திரைப்படங்கள் அனைத்தையுமே உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்து வருகிறது. பிரபுசாலமன் இயக்கத்தில் அஸ்வின் நடிப்பில் உருவான “செம்பி” என்ற திரைப்படத்தையும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் டிசம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிவாஸ் பிரசன்னா இசையில் உருவாகி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இப்படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. […]
Continue reading …
எஸ்.பி. வேலுமணி எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வரும் 2ம் தேதி கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் தொடர்பான ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, “திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திமுக அரசை கண்டித்து டிசம்பர் 2ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி […]
Continue reading …
கார்த்திகை மாதம் தொடங்கியது முதல் ஐயப்ப பக்தர்கள் நோன்பிருக்க ஆரம்பித்து ஐயப்பன் கோவிலுக்கு போவது வழக்கம். இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் பாதுகாப்பு பணிக்காக நியமனம் செய்யப்பட்டிருந்த 5 போலீசாருக்கு சின்னம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உலகப் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து கொண்டிருக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு முற்றிலும் நீங்கி விட்டபடியால் இந்த ஆண்டு எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. இந்நிலையில் […]
Continue reading …
அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதார் இணைக்காவிட்டால் மின் கட்டணம் செலுத்த முடியுமா? என்ற கேள்விக்கு விளக்கமளித்துள்ளார். ஆதார் கார்டில் உள்ள எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் மின் அட்டையுடன் ஆதார் அட்டை இணைத்தால் மட்டுமே மின்கட்டணம் செலுத்த முடியும் என்றும் செய்திகள் பரவி உள்ளது. இதையடுத்து பலர் மின்சார அலுவலகம் சென்று மின் அட்டை எண்ணுடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்து வருகின்றனர். இந்நிலையில் ஆதார் எண் இணைக்காவிட்டாலும் மின் கட்டணம் செலுத்தலாம் […]
Continue reading …
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பிராட்வே பகுதியில் உள்ள உரிமம் புதுப்பிக்காத 70 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர். நீண்ட நாட்களாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வரி வாடகை செலுத்தாததால், கடை மற்றும் தொழில் செய்வோர், முறைப்படி, உரிமம் பெற்றும் வாடகை மற்றும் வரியினைச் செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இன்று சென்னையில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தொழில் வரி, நீண்டகால வாடகை நிலுவை மற்றும் தொழில் உரிமம் பெறாமல் இயங்கி வந்த 86 கடைகளுக்குச் சீல் வைத்து அதிரடி […]
Continue reading …
அமைச்சர் ஜெயக்குமார் ஓபிஎஸ் திமுகவின் ஊதுகுழலாக செயல்படுகிறார்- என்று விமர்சித்துள்ளார். அதிமுகவில் சசிகலா அணி, ஓபிஎஸ் அணி, இபிஎஸ் அணி மூன்று அணிகளாக பிரிந்துள்ளது. இந்நிலையில், மூன்று தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியில், அதிமுக எதிக்கட்சித் தலைவர், எடப்பாடி அணியைச் சேர்ந்த ஜெயக்குமார், “கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்? அதிமுக அலுவலகத்தை ரவுடிகளுடன் வந்து, இடித்து, புத்தகங்களை எடுத்துச் சென்றால் எப்படி […]
Continue reading …