
இளையதலைமுறை நடிகர்களில் ஒருவரான ஹிப்ஹாப் தமிழா நடிக்கும் அடுத்த திரைப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. நடிகரும், இசையமைப்பாளருமான ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் அடுத்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹிப் ஹாப் தமிழா ஆதி இத்திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதுடன் இசையமைக்கவுள்ளார். “நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு” என்ற படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் படத்தை இயக்கவுள்ளார். […]
Continue reading …
நடிகர் கார்த்தி “பொன்னியின் செல்வன்” மற்றும் “சர்தார்” வெற்றிக்கு பிறகு தற்போது இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகிவரும் “ஜப்பான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. இன்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அட்டகாசமான கலர்புல் இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, சுனில் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகிவரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து உள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் […]
Continue reading …
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட 7 பேர் விடுதலையை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு காரணமாக விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் 7 பேர் விடுதலைக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் […]
Continue reading …
சுப்ரீம் கோர்ட் கட்டாய மதமாற்றம் என்பது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொண்டது என்று தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இன்று மத்திய மாநில அரசுகள் கட்டாய மத மாற்றங்களை தடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததையடுத்து இம்மனு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து இன்றைய விசாரணையில் கட்டாய மதமாற்ற விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் நவம்பர் 22ம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் பிரமாண பத்திரத்தை […]
Continue reading …
சென்னையிலிருந்து மைசூருக்கு செல்லும் வந்தே பாரத் ரயிலின் பயண கட்டணத்தால் மக்களுக்கு தலைசுற்றல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிக அதி விரைவு ரயில் வந்தே பாரத் ரயில்கள் சமீபகாலமாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த ரயிலின் 5வது சேவை சென்னை டூ பெங்களூரு டூ மைசூரு வழித்தடத்தில் இன்று தொடங்கப்பட்டது. ரயில் சென்னையில் அதிகாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.30 மணிக்கு மைசூர் வந்தடைகிறது. அதே போல் மைசூரிலிருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு […]
Continue reading …
10 சதவீதம் உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தரும் மசோதா செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை எதிர்ப்பு தமிழக அரசியல் கட்சிகள் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளனர். அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தலைமை தாங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது, “மாதம் ரூ.66,660 மற்றும் தினமும் ரூபாய் 2222 சம்பாதிப்பவர்கள் ஏழைகளா? ஈராயிரம் ஆண்டுகளாக கல்வி வேலை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகத்தை தூக்கி விடுவது தான் சமூக நீதியே தவிர இது வறுமை ஒழிப்பு திட்டம் […]
Continue reading …
சென்னை வானிலை ஆய்வு மையம் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத மிக கனமழையின் அளவு சீர்காழியில் பதிவகாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. நேற்று சீர்காழியில் ஒரே நாளில் மட்டும் 44 சென்டிமீட்டர் மழை பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வளவு பெரிய மழை மேக வெடிப்பு காரணமல்ல என்றும் பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு காரணமாகவே இந்த மழை பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சீர்காழியில் பெய்த கனமழை காரணமாக அங்கு […]
Continue reading …
இன்று பாஜக அலுவலகமான சென்னையிலுள்ள கமலாலயத்திற்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னையிலுள்ள பிரபல இந்தியா சிமெண்ட் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று சென்னை வந்துள்ளார். அவரை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் வரவேற்றனர். தற்போது, பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இதில், தற்போதைய அரசியல் நிலவரம் […]
Continue reading …
லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவின் 75வது திரைப்படத்தின் ஷூட்டிங் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது. நயன்தாரா திருமணத்திற்கு பிறகு கொஞ்ச காலம் ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் பிஸியாக நடிக்க தொடங்கியுள்ளார். நயன்தாராவின் 75வது திரைப்படம் என்ற பெருமையுடன் சமையல் பற்றிய ஒரு படம் பற்றிய அப்டேட் சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இப்படத்தில் ஜெய் உள்ளிட்டவர்கள் நடிக்கிறார்கள். ஜி ஸ்டூடியோஸ் பைனான்ஸில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இப்படம் தற்போது ஷூட்டிங் தொடங்கவுள்ளது. […]
Continue reading …
ஹோம்பலே பிலிம்ஸ் என்ற நிறுவனம் நடிகர் யாஷ் நடித்த “கேஜிஎப்” மற்றும் “கேஜிஎப் 2” ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் திரைப்படங்களை இயக்கியது. இந்நிறுவனம் சுதா கொங்காரே இயக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது . இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க வாய்ப்பில்லை. ஏனெனில், சுதா கொங்கரா இப்போது இந்தியில் “சூரரைப் போற்று” ரீமேக்கை இயக்கி வருகிறார். இந்நிலையில் சுதா கொங்கரா இயக்கும் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் ஹோம்பலே […]
Continue reading …