
கடந்த இரண்டு நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வருவதால் சென்னை விமான நிலையத்திலிருந்து கிளம்பும் விமானங்கள் தாமதமாக கிளம்புவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக நேற்றிரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மீனம்பாக்கம் பகுதியில் கனமழை பெய்ததன் காரணமாக விமான ஊழியர்கள் வேலைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னையிலிருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டிற்கு செல்ல வேண்டிய விமானங்கள் தாமதமாக கிளம்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக […]
Continue reading …
தமிழகத்திற்கு வந்துள்ள பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி திண்டுக்கல் வந்தடைந்தார். திண்டுக்கல்லில் பிரதமரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு பிரதமர் மோடி காந்திகிராமம் செல்லும் வழியில் உள்ள பாஜக தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திப்பு கையசைத்தார். பிரதமர் மோடியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவேற்றார். இந்நிலையில் பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி மற்றும் […]
Continue reading …
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 சதவீத இட ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இக்கூட்டத்தை அதிமுக புறக்கணிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு குறித்த தீர்ப்பு சமீபத்தில் வெளிவந்தது. இத்தீர்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. […]
Continue reading …
மதுரைக்கு பிரதமர் மோடி வரவிருப்பதையடுத்து மதுரை மற்றும் திண்டுக்கல் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி திண்டுக்கல் காந்திகிராம பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். நவம்பர் 11ம் தேதி நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். பெங்களூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி அங்கிருந்து விமானத்தில் மதுரை வரவிருப்பதாகவும், விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் காந்திகிராம பல்கலைகழகத்திற்கு அவர் வர […]
Continue reading …
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நாளை அரசு முறை நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார். நாளை பல்வேறு அரசு நிகழ்ச்சிகளுக்காக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. இதற்காக நிகழ்ச்சி ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றது. நாளை திண்டுக்கலில் காந்தி கிராமத்திலுள்ள காந்தி கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மாணவர்களுக்கு பட்டமளிக்கும் பிரதமர் மோடி அந்த நிகழ்வில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கவுள்ளார். […]
Continue reading …
சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக கண்டுபிடித்துள்ளதாக செய்தி வெளிவந்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கார் வெடிகுண்டு வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வரும் நிலையில் இச்சம்பவத்துடன் ஐஎஸ்ஐஎஸ் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி சென்னையிலுள்ள 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகம் முழுதும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில் சென்னையில் ஐஎஸ்ஐஎஸ் தொடர்புடைய 18 பேரின் இருக்கும் […]
Continue reading …
பேருந்தின் கண்ணாடியை தலையால் முட்டி உடைத்த நபரால் கேரள மாநிலம் மலப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மலப்புரம் மாவட்டம் பெருங்கல் மன்னார் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்த பேருந்தை நோக்கி ஓடி வந்த நபர் பேருந்தின் கண்ணாடியை தலையால் முட்டினார். இதில், முன்பக்க சில்லு சில்லாக கண்ணாடி உடைந்து நொறுங்கி, அவர் சாலையில் தூக்கி வீசப்பட்டார். அதன்பின்னர், அவர், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து எழுந்திருக்க மறுத்தார். இதுகுறித்து விசாரணையில், அவர் பிரேசில் நாட்டைச் சேர்ந்த நெய்மரின் தீவிர […]
Continue reading …
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்தை அமல்படுத்தியுள்ளதை எதிர்த்து மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையாக இருந்த நிலையில் இதுகுறித்து விசாரணை ஆணையம் அமைத்து, அதன் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கான தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளது தமிழக அரசு. தற்போது மும்பையை சேர்ந்த ஆல் இந்தியா கேமிங் பெடரேஷன் என்ற அமைப்பின் பேரில் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய […]
Continue reading …
“துணிவு” திரைப்படத்தின் மூலம் அஜீத் தனது 61வது படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் முடிவதற்கு முன்பாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கும் 62வது படத்தின் அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துக்குள் முடித்து தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறத. இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே […]
Continue reading …
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. நாளை முதல் தமிழகத்திலுள்ள ஒரு சில மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக மழை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக நவம்பர் 11-ம் தேதி அன்று கனமழை எச்சரிக்கை […]
Continue reading …