Home » Posts tagged with » Netrikkan (Page 405)

இந்தியன் ரெயில்வேயின் திட்டம்!

Comments Off on இந்தியன் ரெயில்வேயின் திட்டம்!

இந்தியன் ரயில்வே சீன எல்லை வரை வடகிழக்கு மாநிலங்களில் ரயில் பாதை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியன் ரயில்வே அருணாச்சலபிரதேசம் உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் சீன எல்லை வரை ரயில் பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே அண்டை நாடான பூடான் வரை ரயில் பாதைகளை அமைக்கும் பணியில் இந்தியன் ரயில்வே ஈடுபட்டு வரும் நிலையில் வடகிழக்கு எல்லையான அருணாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் புதிய ரயில் பாதைகளை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீன எல்லையை […]

Continue reading …

“வாத்தி” சிங்கிள் பாடல் ரிலீஸ்!

Comments Off on “வாத்தி” சிங்கிள் பாடல் ரிலீஸ்!

வெங்கி அட்லுரி இயக்கத்தில், தனுஷ் நடிப்பில், ஜீவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள “வாத்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் ரிலீசாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் சிங்கிள் பாடல் இன்று வெளியாகியுள்ளது. தனுஷ் எழுதிய இப்பாடலை ஸ்வேதா மேனன் பாடியுள்ளார். இப்பாடலை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் கம்போஸ் செய்துள்ளார். இப்பாடல் யூ டியூபில் வெளியாகி வைரலாகி வருகிறது. மெலடி பாடலாக அமைந்திருக்கும் இப்பாடலை இசை ரசிகர்கள் ரசித்து […]

Continue reading …

பாலியல் தொல்லைக்கு 610 ஆண்டுகள் சிறை தண்டனை!

Comments Off on பாலியல் தொல்லைக்கு 610 ஆண்டுகள் சிறை தண்டனை!

நீதிமன்றம் 4 வயது குழந்தையை பாலியல் தொல்லை செய்ததாக ஒருவருக்கு 610 ஆண்டுகள் சிறை தண்டனையை விதித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள தெற்கு கலிபோர்னியா என்ற மாகாணத்தைச் சேர்ந்த 37 வயது மார்ட்டின் என்பவர் 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 2019ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு 3 ஆண்டுகளாக நடந்து வந்தது. தற்போது இவ்வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகி உள்ளது. இத்தீர்ப்பில் 4 வயது குழந்தையை ஆபாச படங்கள் தயாரிக்க மார்ட்டின் […]

Continue reading …

இந்தியா -இங்கிலாந்து போட்டி குறித்து சசிதரூர்

Comments Off on இந்தியா -இங்கிலாந்து போட்டி குறித்து சசிதரூர்

காங்கிரஸ் பிரமுகர் சசி தரூர், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததை கூட நான் பொருட்படுத்தவில்லை, ஆனால் வெற்றிக்கு முயற்சி கூட செய்யவில்லை என்பதை தான் நான் பொருட்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார். உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான போட்டி நடந்தது. இப்போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 168 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 169 என்ற இலக்கை வெகு எளிதாக விக்கெட் இழப்பின்றி 16 […]

Continue reading …

14வது மாடியிலிருந்து கீழே குதித்த மாணவன்!

Comments Off on 14வது மாடியிலிருந்து கீழே குதித்த மாணவன்!

ஆசிரியர் திட்டியதால் கர்நாடக மாநிலத்தில் 14வது மாடியிலிருந்து மாணவன் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூர் நகரில் வசித்து வரும் மோஹின் அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சமீபத்தில் நடந்த தேர்வில் அவர் பிட் அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆசிரியரிடம் பிடிப்பட்ட அவரை ஆசிரியர் கடுமையாகத் திட்டி தண்டனை கொடுத்துள்ளார். அன்று வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அவர், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் 14வது மாடிக்குச் சென்று, அங்கிருந்து கீழே குதித்து, […]

Continue reading …

மேட்டாவிலிருந்து 13 சதவீதம் ஊழியர்கள் பணி நீக்கம்!

Comments Off on மேட்டாவிலிருந்து 13 சதவீதம் ஊழியர்கள் பணி நீக்கம்!

13% ஊழியர்களை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிலிருந்து பணி நீக்கம் செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் உலக நாடுகளில் சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ளது. உலகில் பல நாடுகளிலிருந்து பல கோடி மக்கள் நட்பாகிக் கொள்ளும் வசதி பேஸ்புக்கில் உள்ளது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் முதற்கொண்டு சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்களின் கருத்துகள் பதிவிடும் தளமாக இது பார்க்கப்படுகிறது. சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் டுவிட்டர் சி.இ.ஓ, நிதி […]

Continue reading …

சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம்; அறங்காவலர் உட்பட 3 பேர் கைது!

Comments Off on சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம்; அறங்காவலர் உட்பட 3 பேர் கைது!

சமீபத்தில் திருப்பூர் அருகே 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் விடுதி நிர்வாக அறங்காவலர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் ஆதரவற்ற குழந்தைகள் விடுதியாகச் செயல்பட்டு வரும் விவேகானந்தா சேவாலய விடுதியில் காலை உணவைச் சாப்பிட்ட 3 சிறுவர்கள், ஒவ்வாமை ஏற்பட்டு, உயிரிழ்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, சமூக நலத்துறை அமைச்சர், கீதா ஜீவன், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் மற்றும் அதிகாரிகள் சமீபத்தில், அந்த விடுதியில் […]

Continue reading …

தியேட்டர்கள் ஒதுக்குவது குறித்து உதயநிதி ஸ்டாலின் தகவல்!

Comments Off on தியேட்டர்கள் ஒதுக்குவது குறித்து உதயநிதி ஸ்டாலின் தகவல்!

பொங்கல் பண்டிகையையொட்டி அஜீத் நடித்த “துணிவு” திரைப்படமும், விஜய் நடித்த “வாரிசு” திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் “துணிவு” திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் ஒதுக்க வேண்டும் என அஜீத் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த “துணிவு” படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற உதயநிதி ஸ்டாலின், “அஜித் நடித்த “துணிவு” திரைப்படத்திற்கு அதிக தியேட்டர்களை ஒதுக்க முடியாது. அஜீத் நடித்த “துணிவு” மற்றும் விஜய் நடித்த “வாரிசு” ஆகிய […]

Continue reading …

சினிமா பாணியில் நடந்த காதல் சம்பவம்!

Comments Off on சினிமா பாணியில் நடந்த காதல் சம்பவம்!

சினிமா பாணியில் சென்னையில் ஒரு பெண்ணை மூன்று நண்பர்கள் காதலித்து வந்த நிலையில் அவர்களுக்கு ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் கைதாகியுள்ளனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த 17 வயது இளைஞர் கூடுவாஞ்சேரியில் வயர் கம்பெனியில் பணிபுரிந்துள்ளார். அங்கேயே ரூம் எடுத்து அவர் தங்கியிருந்த நிலையில் அவருடன் கதிர், யுவராஜ் என இரண்டு இளைஞர்களும் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 20 வயது இளம்பெண் ஒருவரை அந்த 17 வயது சிறுவன் காதலித்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை இளைஞரின் […]

Continue reading …

பஞ்சாபில் பாகிஸ்தான் டிரோன் பறந்ததால் பரபரப்பு!

Comments Off on பஞ்சாபில் பாகிஸ்தான் டிரோன் பறந்ததால் பரபரப்பு!

பாகிஸ்தான் டிரோன் ஒன்று பஞ்சாப் மாநிலத்தில் ஊடுருவியதையடுத்து அந்த டிரோன் பிஎஸ்எப் வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் அவ்வபோது ஊடுருவுவதும் அவர்களை இந்திய வீரர்கள் வேட்டையாடி நடவடிக்கை எடுத்து வருவதுமான செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தில் இன்று பாகிஸ்தானின் டிரோன் ஒன்று திடீரென ஊடுருவியதாகவும் இந்திய எல்லையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த பிஎஸ்எப் வீரர்கள் பாகிஸ்தானின் டிரோனை சுட்டு வீழ்த்தி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையடுத்து அந்த […]

Continue reading …