
மனைவியை தோளில் சுமந்து கொண்டு திருப்பதி மலையில் ஏறிச் சென்ற கணவனது செயல் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கனியபுலங்கா பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியர்க்கு குழந்தை பிறந்ததையடுத்து, வேண்டுதலை நிறைவேற்ற, இன்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்றனர். அப்போது, வேகமாகப் படியில் ஏறிய தன் கணவன் சத்திய நாராயணனிடம் தன்னை தூக்கிக் கொண்டு படியில் ஏறும்படி சவால் விடுத்தார். மனைவி லாவண்யாவின் சவாலை ஏற்று அவரை […]
Continue reading …
இயக்குனர் ராம் மற்றும் நிவின் பாலி இணைந்து உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படத்தின் தலைப்பு பற்றிய அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற ஆவல் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இவர்களது திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இப்படத்தில் சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னையை சுற்றியுள்ள பகுதி மற்றும் ராமேஸ்வரத்தில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இப்படத்தில் விலங்குகள் அதிகளவில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. படம் முழுவதும் விலங்குகள் ஒரு கதாபாத்திரம் போலவே வரும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். […]
Continue reading …
உத்தரபிரதேசத்தில் பள்ளியில் மது அருந்திக் கொண்டே பாடம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அந்த ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியிலுள்ள தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றிய சைலேந்திர சிங் கவுதம் என்பவர் வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போதே பீர் பாட்டிலை குடித்துக் கொண்டிருக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து ஆசிரியர் மீது உத்தரபிரதேச காவல்துறை நடவடிக்கை […]
Continue reading …
2022ம் ஆண்டிற்கான மருத்துவத்திற்கான நோபல் பரிசு சுவீடன் நாட்டைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபேவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உலகில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு. இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறையில் சாதனை செய்தவர்களுக்கு இவ்விருதை நோபல் கமிட்டி குழு தேர்வு செய்து ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. அவ்வகையில், இவ்வாண்டிற்கான முதல் அறிவிப்பாக மருத்துவத்துறையில் அழிந்துபோன ஹோமின்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் பற்றிய அவரது சிறந்த கண்டுபிடிப்பதற்காக சுவீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே […]
Continue reading …
“லெஜண்ட்”, “இரவின் நிழல்” ஆகிய படங்களின் ஓடிடியில் ரிலீசாவது எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் ஒரு அறிமுக நடிகருக்கு இவ்வளவு அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்ட திரைப்படமா என வியக்க வைக்கும் அளவுக்கு வெளியானது ‘தி லெஜண்ட்’ திரைப்படம். அதிக விளம்பரங்களோடு ரிலீஸான இத்திரைப்படம் பெரிய வெற்றி பெறவில்லை. ஆனாலும் இப்படத்தை இன்னும் ஓடிடியில் ரிலீஸ் ஆகவில்லை. இந்த படத்துக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதே போல பார்த்திபன் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான சிங்கிள் ஷாட் […]
Continue reading …
ஓடிடியில் “பேட்டைக்காளி” வெப் தொடர் பிரபலமான ஓடிடிக்காக வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இது ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் வெற்றிமாறன் ஜல்லிக்கட்டு சம்மந்தமாக “வாடிவாசல்” திரைப்படத்தை விரைவில் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்போது ஜல்லிக்கட்டை மையமாக வைத்து “பேட்டைக்காளி” என்ற வெப் தொடரை ஆஹா ஓடிடிக்காக தயாரிக்கவுள்ளார். இத்தொடரை ராஜ்குமார் இயக்க, கிஷோர் மற்றும் கலையரசன் ஆகியோர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த வெப் தொடர் உருவாக உள்ளது.
Continue reading …
கேஸ் சிலிண்டர் வர்த்தக பயன்பாட்டிற்கான விலை அதிகரித்த நிலையில் கடந்த மாதம் போல இம்மாதமும் குறைந்துள்ளது. பெட்ரோலிய நிறுவனங்கள் இந்தியா முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையை மாதம்தோறும் நிர்ணயித்து வருகின்றன. அதன்படி உணவகங்கள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்படும் வர்த்த கேஸ் சிலிண்டரின் விலை சில மாதங்களுக்கு முன்பாக விலை உயர்ந்தது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த மாதம் முதலாக வர்த்தக கேஸ் சிலிண்டரின் விலை குறைந்து வருகிறது. இந்நிலையில் இந்த மாதமும் வர்த்தக பயன்பாட்டிற்கான கேஸ் […]
Continue reading …
அமைச்சர் மெய்யநாதன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் சிதம்பரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு கடந்த சில மணி நேரங்களாக மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமைச்சர் மெய்யநாதன் சென்னைக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தனி கார் மூலம் மருத்துவ குழுவினர் உதவியுடன் சென்னைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது. அமைச்சர் மெய்யநாதன் சென்னை வந்தவுடன் அவருக்கு சிகிச்சையளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு […]
Continue reading …
யூடியூபர் டிடிஎப் வாசன் பெங்களூருக்கு தப்பிச் செல்ல முயன்ற போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யூடியூபர் டிடிஎப் வாசன் வாகனத்தை வேகமாக ஓட்டுவது, கையைவிட்டு, ஓட்டுவது, விபத்து ஏற்படும்படி வாகனங்களை இயக்குவதாக சமீபத்தில் இவர் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, சமீபத்தில், மதுரை ஜிபி முத்துவை தன் வாகனத்தில் அமரவைத்து, அதிவேகமாக சென்றும், கைகளைவிட்டுவிட்டு, 150கிமீ வேகத்தில் பைக்கை இயக்கியுள்ள வீடியோவை வெளியிட்டிருந்தார். இது வைரலானது. தவறான முன்னுதாரணமாக இந்த வீடியோவை வெளியிட்ட டிடிஎப் வாசன் மீது […]
Continue reading …
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த தமிழக அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதை பாராட்டியுள்ளார். காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதியன்று தமிழகம் முழுதும் பேரணி நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் பொது அமைதிக்கு இடையூறு விளையும் என இந்த பேரணிக்கு அனுமதி வழங்கக்கூடாது என வழக்கு தொடரப்பட்டது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு பல்வேறு மாவட்டங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து, […]
Continue reading …