Home » Posts tagged with » Netrikkan (Page 434)

“வணங்கான்” திரைப்படத்தின் நிலை என்ன?

Comments Off on “வணங்கான்” திரைப்படத்தின் நிலை என்ன?

இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் “வணங்கான்” திரைப்படத்தின் ஷூட்டிங் சில நாட்களே நடைபெற்றது. தற்போது இத்திரைப்படத்தின் நிலை என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. “நாச்சியார்” படத்துக்குப் பின்னர் இயக்குனர் பாலாவின் அடுத்த படத்தில் சூர்யா நடித்து அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 34 நாட்கள் கன்னியாகுமரியில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில் “வணங்கான்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாக […]

Continue reading …

சோழர்கள் யுனிவர்ஸ்; டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

Comments Off on சோழர்கள் யுனிவர்ஸ்; டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!
சோழர்கள் யுனிவர்ஸ்; டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்!

இயக்குனர் மணிரத்தினத்தின் “பொன்னியின் செல்வன்” வெற்றியை தொடர்ந்து சோழர்கள் யுனிவர்ஸ் தொடங்குவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது. இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு திரைப்படமான “பொன்னியின் செல்வன்” படத்தை காண பலரும் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வெளியாகி முதல் மூன்று நாட்களுக்குள் 200 கோடி வசூல் செய்துள்ளது. 1000 கோடி கிளப்பில் “பொன்னியின் செல்வன்” இணையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களை வைத்து தனித்தனியாகவே படம் எடுக்கும் அளவுக்கு கதை உள்ளது […]

Continue reading …

ஜியோவின் அடுத்த அறிவிப்பு!

Comments Off on ஜியோவின் அடுத்த அறிவிப்பு!

ஜியோ இந்தியாவின் தொலைதொடர்பு சேவையில் முன்னணியில் உள்ளது. ஆனால் தற்போது பட்ஜெட் விலையில் லேப்டாப்பை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் 4ஜி சேவையோடு நுழைந்த ஜியோ நிறுவனம் அந்த சமயம் பிரத்யேக 4ஜி ஸ்மார்ட்போன்களை அன்லிமிடட் டேட்டா வசதியுடன் வழங்கியது. தற்போது இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ள நிலையில் வரும் தீபாவளிக்கே 5ஜி சேவையை தொடங்க உள்ள ஜியோ அதற்கான விலை பட்டியல் குறித்தும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த கட்டமாக அனைவருக்கும் பயன்படும் வகையில் […]

Continue reading …

ஜப்பான் விடுத்த எச்சரிக்கையால் மக்களிடம் பரபரப்பு!

Comments Off on ஜப்பான் விடுத்த எச்சரிக்கையால் மக்களிடம் பரபரப்பு!

மக்களுக்கு ஜப்பான் கொடுத்த எச்சரிக்கையால் மக்களிடம் பரபரப்பபு ஏற்பட்டுள்ளது. ஜப்பான் மீது வடகொரியா போர் தொடரும் ஆபத்து உள்ளதாக நாட்டு மக்களை ஜப்பான் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடகொரியா முன்பு இல்லாத வகையில் தற்போது ஏவுகணை சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. சமீபத்தில் 30க்கும் அதிகமான ஏவுகணை சோதனையை நடத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா உட்பட்ட உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வரும் வடகொரியா கடந்த 10 நாட்களுக்குள் 5 முறை […]

Continue reading …

80 தொகுதிகளிலும் பாஜக இலக்கு!

Comments Off on 80 தொகுதிகளிலும் பாஜக இலக்கு!

உத்தரப் பிரதேச மாநிலத்திலுள்ள வரும் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் 80 தொகுதிகளிலும், பாஜக வெற்றிபெற இலக்கு நிர்ணயித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம் இருக்கும் நிலையில் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒட்டுமொத்த 80 தொகுதிகளிலும் வெற்றி பெற பாஜக இலக்கு நிர்ணயித்து உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் பூபிந்தர் சிங் தெரிவித்துள்ளார். பாஜகவுக்கு எதிராக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அணிவகுக்க திட்டமிட்டுள்ள நிலையில் பாஜக தலைவர் இவ்வாறு கூறியிருப்பது பெரும் […]

Continue reading …

செயல்பாட்டை நிறுத்தியது மங்கள்யான்!

Comments Off on செயல்பாட்டை நிறுத்தியது மங்கள்யான்!

மங்கள்யான் விண்கலம் செயலிழந்து விட்டதாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ கடந்த 2013ம் ஆண்டில் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக மங்கள்யான் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. செப்டம்பர் 2014ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தின் சுற்று பாதையில் நிலைநிறுத்தப்பட்ட மங்கள்யான் இஸ்ரோவின், இந்தியாவின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. பல நாடுகள் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக பல பில்லியன்களை செலவு செய்து வரும் நிலையில் இஸ்ரோ ரூ.450 கோடியில் இந்த மங்கள்யான் திட்டத்தை […]

Continue reading …

சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்!

Comments Off on சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்!
சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்!

உளுந்தூர்பேட்டையில் உள்ள சுங்கச்சாவடியில் செல்லும் வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் செல்வதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஊழியர்களாக பணியாற்றிய 26 பேர் பணி ஒப்பந்தம் முடிந்து விட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த சுங்கச் சாவடியில் உள்ள மற்ற ஊழியர்கள் கடந்த இரண்டு நாட்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்தாமல் சென்று வருகின்றன. கடந்த […]

Continue reading …

காரின் விலை 11 லட்சம், ரிப்பேர் 22 லட்மா?

Comments Off on காரின் விலை 11 லட்சம், ரிப்பேர் 22 லட்மா?
காரின் விலை 11 லட்சம், ரிப்பேர் 22 லட்மா?

பெங்களூருவில் ஏற்பட்ட கனமழையால் பலரது இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பழுதடைந்தது. அதில் ஒருவரது காரின் விலை ரூ.11 லட்சம், ஆனால் காரை ரிப்பேர் செய்வதற்கு ரூ.22 லட்சம் ஆகும் என கார் நிறுவனம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அனிருத் என்பவர் தனது தனது காரை ரிப்பேர் செய்ய கார் நிறுவனத்திற்கு அனுப்பி இருக்கிறார். கார் ரிப்பேர் செய்ய எவ்வளவு கட்டணம் என்று கேட்டதற்கு கார் நிறுவனம் 22 லட்சம் ரூபாய் செலவாகும் என்று […]

Continue reading …

வாகன விழிப்புணர் பிரசாரமே தண்டனை!

Comments Off on வாகன விழிப்புணர் பிரசாரமே தண்டனை!

எந்த இடத்தில் பைக் சாகசம் நிகழ்வு நடந்ததோ அந்த இடத்திலேயே விழிப்புணர்வில் ஈடுபட்டார் யூடிபர் கோட்லா பினோய். தமிழகம் மட்டுமல்லாது மற்ற மாநிலங்களில் கூட இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பைக் ரேசிலும், ஸ்டண்ட் எனப்படும் சாகசத்தில் ஈடுபடும் செயல்கள் அதிகரித்துள்ளது. இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் பல முறை எச்சரிக்கை விடுத்தும் ஒரு சிலர் மக்களுக்கு இடையுறு மற்றும் அச்சம் விளைவிக்கும் வகையில் செயல்படுகின்றனர். அவ்வகையில், சமீபத்தில் சென்னை, அண்ணாசலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட ஐதராபாத்தைச் சேர்ந்த பிரபல […]

Continue reading …

மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு அவகாசம்!

Comments Off on மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு அவகாசம்!

மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கைக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று அதாவது அக்டோபர் 3ம் தேதி கடைசி நாள் என மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்திருந்தது. இன்னும் பல மாணவர்கள் விண்ணப்பம் செய்யாத நிலையில் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த மருத்துவ கல்வி இயக்குனரகம் தற்போது எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் […]

Continue reading …