Home » Posts tagged with » Netrikkan (Page 99)

மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

Comments Off on மீண்டும் தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

இலங்கை கடற்படை அவ்வப்போது தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கைது செய்து வருகிறது. இந்த தொடர் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என மீனவர் சங்கங்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வருகின்றன. மத்திய மாநில அரசுகளும் இதுகுறித்து நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் இலங்கை கடற்படையின் அட்டூழியம் நிற்கவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 15 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெடுந்தீவு அருகே தமிழக மீனவர்கள் […]

Continue reading …

லாட்டரி மார்ட்டினிடமிருந்து கோடிக்கணக்கில் நன்கொடை! தேர்தல் பத்திரத்தில் அம்பேல்!

Comments Off on லாட்டரி மார்ட்டினிடமிருந்து கோடிக்கணக்கில் நன்கொடை! தேர்தல் பத்திரத்தில் அம்பேல்!

லாட்டரி அதிபர் மார்ட்டினின் நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக கோடிக்கணக்கில் வழங்கிய நிறுவனங்களில் அதிகளவில் நிதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை வழங்கும் முறையை சமீபத்தில் உச்சநீதிமன்றம் தடை செய்ததுடன், இதுவரை தேர்தல் பத்திரம் மூலம் நிதி அளித்த விவரங்களை சமர்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அவ்வகையில் எஸ்பிஐ அளித்த விவரங்கள் தேர்தல் ஆணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன. அதில் அதிகளவில் தேர்தல் நன்கொடை பெற்ற […]

Continue reading …

முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு!

Comments Off on முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு!

சிறுமியை வன்கொடுமை செய்ததாக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவை சேர்ந்த எடியூரப்பா கர்நாடகாவின் முன்னாள் முதல்வராக பதவி வகித்தவர். இவரது வீட்டிற்கு கடந்த 2ம் தேதி பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் கல்வி தொடர்பான உதவி கேட்டு சென்றுள்ளார். அப்போது எடியூரப்பா சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியே சொல்லாமல் இருந்தால் […]

Continue reading …

அண்ணாசலையில் ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

Comments Off on அண்ணாசலையில் ஓர் ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரயில் பணிகள் சென்னையில் இரண்டாம் கட்ட விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஒரு சில இடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இன்று முதல் ஒரு ஆண்டுக்கு சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி “சென்னை ஆயிரம் விளக்கு ஒயிட்ஸ் சாலை பகுதியில் இன்று முதல் ஓராண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. பட்டுலாஸ் சாலை ஒயிட்ஸ் சாலை சந்திப்பிலிருந்து ஒயிட்ஸ் சாலை திரு.வி.க சந்திப்பு வரை […]

Continue reading …

தூய்மை பணியாளர்களுக்கு தங்க நாணையம் வழங்கிய ஆரி அர்ஜுனன்

Comments Off on தூய்மை பணியாளர்களுக்கு தங்க நாணையம் வழங்கிய ஆரி அர்ஜுனன்

நடிகர் ஆரி அர்ஜுனன், தனது அம்மாவின் நினைவை போற்றும் வகையில் மறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை மூலமாக, எளிய வர்க்கத்தின் பின்னணியிலிருந்து பணியாற்றும் பெண்கள் 10 பேரை சந்தித்து வாழ்த்துக்கூறியதுடன், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக தங்க நாணயம் பரிசளித்தார். நடிகர் ஆரி அர்ஜுனன் இயற்கை சார்ந்த விவசாயம், இயற்கை உணவுகள், சமூகத்திற்கான உதவிகள் என தொடர்ந்து, சமூக அக்கறையுடன் பணியாற்றி வருகிறார். தன் அன்னையின் நினைவாக மகளிரை கொண்டாடும் வகையில் அவர்களுக்கு பரிசளித்திருப்பதை, மக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். […]

Continue reading …

விஜய் படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவிலா?

Comments Off on விஜய் படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவிலா?

வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய், தற்போது The Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவரோடு பிரசாந்த், பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சென்னையில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் இத்திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது நடந்து வருகிறது. அங்கு விஜய் நடிக்கும் […]

Continue reading …

முதலமைச்சருக்கு- வானதி சீனிவாசன் கண்டனம்!

Comments Off on முதலமைச்சருக்கு- வானதி சீனிவாசன் கண்டனம்!

தேசிய பாஜக மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புலியகுளம் பகுதியில் சுத்திகரிக்கப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தொடங்கி வைத்தார். செய்தியாளர்களிடம் அவர், “ஒரு அரசாங்க நிகழ்ச்சிக்கு மரியாதை கொடுத்து பொதுமக்களின் நிகழ்ச்சி என்று நாங்கள் செல்லும் பொழுது அவர் இன்று பொள்ளாச்சியில் அரசு மேடையை அரசியல் மேடையாக மாற்றி அநாகரீகமாக பேசி இருக்கிறார். அரசாங்கத்தின் விழாவில் பாரத பிரதமரை பற்றி குறை கூறியது பாரதிய ஜனதா […]

Continue reading …

கோயில்களில் இலவச நீர்மோர் திட்டம்!

Comments Off on கோயில்களில் இலவச நீர்மோர் திட்டம்!

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோடை காலம் தொடங்க உள்ளதையடுத்து தமிழக கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு இலவச நீர் மோர் கொடுக்கும் திட்டம் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். அமைச்சர் சேகர்பாபு “நாளை முதல் தமிழ்நாட்டிலுள்ள 48 முதல் நிலை கோவில்களில் பக்தர்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கப்படும். இந்த நீர்மோர் வழங்கும் திட்டத்தை சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நாளை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கவுள்ளார். கோவிலில் உள்ள கருங்கல் பதிக்கப்பட்ட தரை உள்ள இடங்களில் தரை […]

Continue reading …

வீடியோ எடுக்க வந்தவருடன் ஓடிப்போன மணமகள்!

Comments Off on வீடியோ எடுக்க வந்தவருடன் ஓடிப்போன மணமகள்!

திருமணத்திற்கு வீடியோ எடுக்க வந்தவருடன் திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகள் ஓடிப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் பகுதியில் லட்சுமண ராய் தனது மகளுக்கு வரன் பார்த்து திருமண ஏற்பாடுகள் செய்திருந்தார். இத்திருமணத்திற்கு வீடியோ எடுக்க தனது ஊரைச் சேர்ந்த கோலு குமார் என்பவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அடிக்கடி அவர் வீட்டுக்கு வந்து சென்றுள்ளதாக தெரிகிறது. திடீரென அந்த வீட்டின் மணமகளுடன் வீடியோகிராபருக்கு பழக்கம் ஏற்பட்டதை அடுத்து திருமணத்திற்கு […]

Continue reading …

குட்னைட் இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன்?

Comments Off on குட்னைட் இயக்குனரின் படத்தில் சிவகார்த்திகேயன்?

“குட்னைட்” திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது, பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீசான இத்திரைப்படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இப்படத்தில் “ஜெய்பீம்” புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கியிருந்தார். இப்படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் இயக்குனரானார் விநாயக் சந்திரசேகர். இவர் இப்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அவர் தன்னுடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. […]

Continue reading …