ஆளுநர் மாளிகையில் மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு – தனிமைப்படுத்திக் கொண்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்!

Filed under: தமிழகம் |

தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் 38 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் மூன்று பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தானே ஏழு நாட்கள் தனிமைப்படுத்தி கொண்டார்.

இதை மருத்துவர்களின் அறிவுரை படி ஆளுநர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.