உலக ஜெயிண்ட்ஸ் அணியோடு மோதும் மகாராஜாஸ் அணி

Filed under: விளையாட்டு |

தற்போதைய பிசிசிஐ தலைவர் கங்குலி தலைமையில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கான போட்டி நடக்க உள்ளது.

இந்திய அணியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்றவர் சவுரவ் கங்குலி. கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாடியவர். கடந்த 2008ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இதையடுத்து தற்போது பிசிசிஐ தலைவராக கடந்த 3 ஆண்டுகள் செயல்படுகிறார். இந்நிலையில் இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் தலைமையில் இந்திய வீரர்கள் விளையாடும் போட்டி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியன் மகாராஜாஸ் என்ற அவரது அணிக்கும் உலக ஜெயண்ட்ஸ் அணிக்கும் வரும் செப்டம்பர் 16ம் தேதி கொல்கத்தாவில் போட்டி நடக்கவுள்ளது.