எதிர்காலத்திலும் நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது! -மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

Filed under: Uncategory |

005சென்னை: மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்து அவசர சட்டம் பிறப்பித்ததற்கு நன்றி. எதிர்காலத்திலும் நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது என்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள கடிதத்தில், ”நடப்பாண்டு மருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்தி வைத்ததற்கு நன்றி. அவசர சட்டத்தால் இட ஒதுக்கீட்டின் பயனை மாணவர்கள் இந்த ஆண்டு அனுபவிப்பார்கள்.

நுழைவுத் தேர்வு ஒத்திவைப்பால், லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர்களும், மனஅழுத்தத்தில் இருந்து விடுபட்டுள்ளனர். எதிர்காலத்திலும் மருத்துவ நுழைவுத் தேர்வை எழுத நிர்பந்திக்க கூடாது” என்று கூறி உள்ளார்.