சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்த எலான் மஸ்க்!

Filed under: உலகம் |

40 சதவீதம் மக்கள் தொகையை சீனா ஒவ்வொரு தலைமுறையிலும் இழக்கும் என எலான் மஸ்க் கூறியுள்ளார்.

உலக பணக்காரர்களின் முக்கியமான எலான் மஸ்க் வெளியிடும் பல அறிக்கைகள் விவகாரமாகவே அமைகிறது. அவ்வகையில் மக்கள் தொகை பற்றிய அவரது கூறிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் மக்கள் தொகை வேகமாக அதிகரித்து வருவகிறது. அதை கட்டுப்படுத்த பலரும் பேசி வரும் நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த முயல்வது மக்கள்தொகை வீழ்ச்சியோடு நாகரிகத்திற்கு அச்சுறுத்தலாக அமையும். உலகம் தற்போது உள்ள மக்கள் தொகையை விட அதிகமான மக்கள் தொகையை தாங்கும் வலிமை கொண்டுள்ளதாகவும், மக்கள் தொகை அதிகரித்தாலும் சுற்றுசூழல் பாதிக்கப்படாது. சீனாவில் இன்னமும் ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற கொள்கை உள்ளதாக நாம் நினைக்கிறோம். ஆனால் 6 ஆண்டுகளுக்கு முன்பாகவே மூன்று குழந்தைகள் பெற்றுக் கொள்ள சீனாவில் அனுமதி அளிக்கப்பட்டு விட்டது. ஆனாலும் அங்கு குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இந்நிலை தொடர்ந்தால் ஒவ்வொரு தலைமுறையிலும் சீனா தனது மக்கள் தொகையிலிருந்து 40 சதவீதம் பேரை இழக்கும்” என்று அவர் கூறிய கருத்துக்கள் விவாதமாக மாறியுள்ளது.