சுகாதாரத்துறை அமைச்சரின் புதிய அறிவிப்பு!

Filed under: தமிழகம் |

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் இனி எலி பேஸ்ட், சாண பவுடர் ஆகியவற்றை விற்பனை செய்வதற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக தற்கொலை செய்து கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இதில் பலர் எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் பயன்படுத்தி தற்கொலை செய்து கொள்வதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் தற்கொலை சம்பவங்களை தடுக்க எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடர் விற்பனையை தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். எலி பேஸ்ட் சாப்பிட்டால், அந்த பேஸ்ட் குடலில் ஒட்டிக்கொண்டு, ரத்தத்தில் கலப்பதால், கல்லீரல் முழுவதுமாக செயலிழந்து, ரத்தம் உறையும் தன்மை இல்லாமலேயே போய்விடுகிறது. ரத்தம் உறையாமை நிலை ஏற்படுவதால், மூளை மற்றும் நுரையீரலில், உள்ளுக்குள்ளேயே ரத்தம் கசிய ஆரம்பித்து இறந்து விடுகின்றனர்.