பல்லாங்குழி ஆடிய பூட்டான் வீராங்கனைகள்!

Filed under: விளையாட்டு |

பூட்டான் வீராங்கனைகள் செஸ் போட்டியில் கலந்து கொள்ள வந்த இடத்தில் பல்லாங்குழி விளையாடியது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையில் கடந்த சில நாட்களாக நடைபெறுகிறது. இப்போட்டியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்த செஸ் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். செஸ் விளையாட வந்த பூட்டான் நாட்டின் வீராங்கனைகள் ஓய்வு நேரத்தில் பல்லாங்குழி விளையாடி மகிழ்ந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தமிழ் இனத்தின் பாரம்பரிய விளையாட்டான பல்லாங்குழி விளையாட்டை பூட்டான் வீராங்கனைகள் விரும்பி விளையாடினர். “பொழுதுபோக்கிற்காக தமிழ்நாட்டில் விளையாடும் இந்த விளையாட்டை நாங்கள் விளையாடி மகிழ்ந்தோம். இந்த விளையாட்டு விளையாடுவது மிகவும் சுவராசியமாக இருந்தது” என்று பூட்டான் நாட்டு செஸ் வீராங்கனைகள் கூறினர். தமிழர்களின் பொழுதுபோக்கு விளையாட்டு பல்லாங்குழி பூட்டான் நாட்டின் வீராங்கனைகளால் தற்போது உலகளவில் பிரபலமாகி உள்ளது.