இந்த முறை பா.ஜ.க.வுக்கு வாக்களித்து பாருங்கள், 5 ஆண்டுகளுக்குள் மேற்குவங்க மாநிலத்தை ஜொலிக்க வைப்போம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த பத்தாண்டுகளாக மம்தா பானர்ஜியின் ஆட்சியில் மக்களின் நம்பிக்கைகள் பொய்த்து விட்டதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.
கடந்த ஓராண்டில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் அரசியல் வன்முறை காரணமாக கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டிய அமித்ஷா,அதற்கு இதுவரை மம்தா அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று கேள்வியெழுப்பினார்.
வெள்ள நிவாரணப்பணியிலும் பெரும் ஊழல் செய்த மம்தா பானர்ஜி தனது உறவினர்களை ஆட்சியில் அமர வைக்க முயற்சித்து வருவதாகவும் அமித் ஷா விமர்சித்தார்.
Related posts:
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் அதிகமானோர் ஆண்கள் தான் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவ...
சட்டவிரோத கடன் வழங்கும் செயலிகள் கண்டுபிடிப்பு!
வேட்பாளர் மாற்றம்: உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்துக்கு எதிராக பாலுவை களமிறக்கியது பாமக !
டெலிவரி சேவையில் ‘டிரோன்’: சென்னை நிறுவனத்துடன் கைகோர்த்த ‘ஸ்விக்கி’



