மின்னல் தாக்கி 2 பேர் பலி!

Filed under: இந்தியா |

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது ஏற்பட்ட மின்னல் தாக்குதலில் 2 பேர் பரிதாபமா பலியாகினர். மேலும் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று ஒரிசா மாநிலத்தில் உள்ளூர் அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை ஏராளமான பார்வையாளர்கள் பார்க்க வந்தனர். அப்போது திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மின்னல் தாக்கியது. இந்த மின்னல் காரணமாக கால்பந்தாட்ட வீரர்கள் இருவர் பலியானதாகவும் 21 பேர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.