சரணாலயத்திலுள்ள நாய்கள் குறித்து- திரிஷா கவலை

Filed under: சினிமா,சென்னை |

நடிகை திரிஷா மிக்ஜாம் புயலால் தங்கள் சரணாலயத்திலுள்ள நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

ஒட்டுமொத்த சென்னையும் மிக்ஜாம் புயலால் பாதிப்பு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மிக்ஜாம் புயலால் தங்கள் சரணாலயத்தில் உள்ள நாய்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக நடிகை திரிஷா கூறியுள்ளார். மேலும், பாதிப்புகளை சரிசெய்ய நிதி தேவைப்படுவதாகவும், புளூ கிராஸ் இந்தியா அமைப்பு பதிவிட்ட வீடியோவை தன் இன்ஸ்டா ஸ்டோரியாவில் பகிர்ந்து நடிகை திரிஷா வேதனை தெரிவித்துள்ளார். நடிகை திரிஷா, விஜய்யுடன் இணைந்து நடித்த “லியோ” சமீபத்தில் ரிலீசாகி வசூல் சாதனை படைத்தது. அடுத்து, நடிகர் அஜீத்துடன் இணைந்து “விடாமுயற்சி” படத்தில் நடித்து வருகிறார்.