1 கோடி கொடிகள் தபால் நிலையங்களில் விற்பனை!

Filed under: இந்தியா |

ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் விற்பனையாகி உள்ளது.

இந்தியர்கள் தங்கள் வீட்டின் முன் 75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடி வருவதை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். இந்த கோரிக்கையை அடுத்து பலர் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் 10 நாட்களில் ஒன்றரை லட்சம் தபால் நிலையங்களில் ஒரு கோடிக்கும் அதிகமான தேசியக்கொடிகள் விற்பனையாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பொதுமக்களுக்கு தேசிய கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் பணியில் 4 லட்சத்து 20 ஆயிரம் தபால் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.