தமிழ்நாடு காவலர்கள் 6 பேருக்கு சிறந்த புலனாய்வுக்கான விருது – மத்திய உள்துறை அமைச்சகம்!

Filed under: இந்தியா |

2020ஆம் ஆண்டின் சிறந்த விசாரணைக்கான மத்திய உள்துறை அமைச்சரின் விருதைப் பெறுவதற்கு தமிழ்நாட்டை சேர்ந்த ஆறு காவலர்கள் தேர்வாகியுள்ளனர்.

தமிழக காவலர்கள் 6 பேர் உள்பட இந்திய அளவில் 121 காவலர்கள் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர். இந்த விருதை பெறும் ஆறு காவலர்கள் காவல் துறை ஆய்வாளர்கள், ஜி. ஜான்சி ராணி, எம்.கவிதா, ஏ.பொன்னம்மாள், சி.சந்திரகலா, ஏ.கலா மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் டி.வினோத் குமார் ஆகிய ஆறு பெரும் விருதை பெறுகின்றனர். பின்னர் புதுச்சேரியைச் சேர்ந்த காவல்துறை ஆய்வாளர் ஏ. கண்ணனும் விருதை பெறுகிறார்.

இதில் ஐந்து காவலர்கள் தேர்வாகியுள்ளார். மேலும், இவர்கள் ஐந்து பேர் உள்பட இந்தியா அளவில் 21 பெண் காவல் அதிகாரிகள் விருதுக்கு தேர்வாகியுள்ளனார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த விருது, குற்றப் புலனாய்வில் சிறந்த செயல்திறனை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு, 2018ஆம் வருடத்தில் இருந்து பிரதமர் மோடி அரசால் நிறுவப்பட்டது. சிறப்பாக விசாரணையை செய்யும் அதிகாரிகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

மேலும், மத்தியப் புலனாய்வு நிறுவனத்தைச் (சிபிஐ) சேர்ந்த 15 அலுவலர்களுக்கும், மத்தியப்பிரதேசத்தில் 10 பேரும், மகாராஷ்டிரவில் 10 பேரும், உத்தரப்பிரதேத்தில் 8 பேரும், கேரளாவில் 7 பேரும், மேற்கு வங்காளத்தில் 7 பேரும் மற்றும் பிற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை சேர்ந்த காவலர்களும் இந்த விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.