ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்!

Filed under: இந்தியா |

உணவு மற்றும் வேளாண் அமைப்பான எப்ஏஓ நிறுவப்பட்டு 75 ஆவது வருடத்தை உணர்த்தும் அடிப்படையிலும் மற்றும் இந்த அமைப்பின் நீண்டகால தொடர்பை உணர்த்தும் அடிப்படையிலும் பிரதமர் மோடி இன்று 75 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

பின்னர், சமீபத்தில் உருவாக்கப்பட்ட உயிரி செறிவூட்டிய எட்டு பயிர்களின் 17 ரகங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

மேலும், இந்தியாவில் உள்ள அங்கன்வாடிகள், வேளாண் அறிவியல் மையங்கள், இயற்கை விவசாயம் மற்றும் தோட்டக்கலை இயக்கங்களை சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Image

பின்பு மத்திய வேளாண் அமைச்சர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.