சென்னை, ஜூன் 1 தமிழ்நாட்டிலுள்ள மாநில பல்கலைக்கழகங்களில் இட ஒதுக்கீட்டு முறையை சிதைப்பதற்கான ஒத்திகை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக அரசால் எந்த கொள்கை முடிவும் எடுக்கப்படாத நிலையில், ஆசிரியர்கள் நியமனத்திற்கான இட ஒதுக்கீட்டு முறை, அதிகாரிகள் கூட்டணியால், பாரதிதாசன் பல்கலை.யில் தலைகீழாக மாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 28 துறைகளில் காலியாக உள்ள 14 பேராசிரியர்கள், 14 இணைப் பேராசிரியர்கள், 26 உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை 2019 ஜூலை […]
Continue reading …நாகை மாவட்டம் நாகூர் ஆஸ்பத்திரி ரோடு மாப்பிள்ளை தெருவை சேர்ந்த பக்கிரிசாமி என்ற இளைஞர் மது பிரியர். நேற்று அதிக மது அருந்தியுள்ளார், குடிபோதையில் “குவார்ட்டர் “பாட்டிலை தன் ஆசனவாய் வழியாக உள்ளே விட்டுள்ளார். பாட்டில் முழுமையாக சென்றமையால் வயிறு பகுதி வீக்கம் அடைந்து வலியால் துடிதுடித்துள்ளார். உடன் நாகை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பிரிவில் சேர்த்து ஸ்கேன் செய்து பார்த்த போது முழு பாட்டில் உள்ளே இருப்பது தெரிய வந்து டாக்டர்கள் அதர்ச்சி அடைந்து பக்கிரிசாமிக்கு […]
Continue reading …புது டெல்லி, மே 29 பயணிகளுக்கு ரயில்வே அமைச்சகம் விடுத்துள்ள வேண்டுகோள்: புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்வதை உறுதி செய்ய, நாடு முழுவதும், ஷ்ரமிக் சிறப்பு ரயில்களை ரயில்வேத்துறை தினந்தோறும் இயக்கி கொண்டிருக்கிறது. இந்த சேவையைப் பெறும் சிலர், ஏற்கனவே உடல்நல பாதிப்புகளுடன் இருப்பதும், இது கோவிட்-19 தொற்று சமயத்தில் அவர்கள் சந்திக்கும் அபாயத்தை அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த உடல்நல பாதிப்புடன் பயணம் செய்த சிலர், ரயில் பயணத்தின் போது […]
Continue reading …சென்னை, மே 29 கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக நடைமுறைப்படுத்தப் பட்டு வரும் ஊரடங்கிலிருந்து வெளிவருவதற்கு உலகின் பல நாடுகள் ஆயத்தமாகி வருகின்றன. ஊரடங்கால் உருக்குலைந்து போயிருக்கும் உலகப் பொருளாதாரத்தை சீரமைப்பது தான் உலக நாடுகளின் முதன்மை பணியாக இருக்கும் நிலையில், அதற்கான நடவடிக்கைகள் வருங்காலங்களில் கொரோனாவை விட மோசமான பேரழிவுகளை ஏற்படுத்திவிடக் கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. 2019-ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் […]
Continue reading …நாகப்பட்டினம், மே 27 நாகப்பட்டினம் கால்நடை துறையின் இணை இயக்குனர் அலுவலகத்தில் உதவி இயக்குனராக கணேசன் வேலை பார்த்து வருகிறார். வேதாரண்யம் அருகே உள்ள கத்தரி புலம் கால்நடை மருத்துவர் ராஜா என்பவர் உதவி இயக்குனரிடம் கடந்த 20/05/2020 அன்று தனக்கு வேலையின் ஊதிய சான்றிதழ் கேட்டுள்ளார், இரண்டு நாட்கள் கழித்து தருவதாக கூறினாராம். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடைபெறும் போது அங்கு வேலை பார்க்கும் கிளார்க் செல்வராஜ் இருவரையும் சமாதானம் செய்யும்போது ராஜா […]
Continue reading …சென்னை, மே 27 இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக் குறைவால் 26.5.2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் பல ஆண்டுகளாக இலங்கை அமைச்சராக திறம்பட பணியாற்றியவர். இவர் இந்திய வம்சாவளி சமூகத்தின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்தவர் மட்டுமின்றி, இலங்கை தமிழ் மக்களின் நலனுக்காக பணியாற்றியவர் என்ற பெருமைக்குரியவர். ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மறைவு இலங்கை மக்களுக்கும், […]
Continue reading …சென்னை, மே 24 திருக்குரான் வழங்கப்பட்ட மாதத்தின் நிறைவாக இரமலான் திருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிக்கை ‘‘நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்; தேவையற்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்; யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் ‘நான் நோன்பாளி!’ என்று இருமுறை கூறட்டும்; என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ […]
Continue reading …பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நவாசுதின் சித்திக். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் “சிங்காரம்” என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைத்தார். கோலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே அடித்து தூள் கிளப்பிவிட்டார். 46 வயதாகும் நடிகர் நவாசுதின் சித்திக்கிற்கு ஆலியா என்ற மனைவியும், மகன், மகள் என இரண்டு குழந்தைகள் இருந்து வரும் நிலையில், இந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ஆனால், […]
Continue reading …புது டெல்லி,மே 21 உம்பன் புயல் பாதிப்புக் காட்சிகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில், இயல்பு நிலை விரைவில் திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டர் பதிவுகளில் கூறியதாவது: ”உம்பன் புயல் பாதிப்புகளை துணிவுடன் எதிர்கொண்டதால், எனது எண்ணங்கள் ஒடிசா மக்கள் பற்றியே உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முடிந்த அளவு அனைத்து உதவிகளும் கிடைப்பதை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உறுதி செய்வர். இங்கு நிலைமை […]
Continue reading …சென்னை, மே 21 தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ((FEFSI) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) சார்பில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,சின்னத் திரையினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, கீழ்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார்கள், சுற்றுச்சுவர் […]
Continue reading …