
விருத்தாச்சலம்,மே 19 புற்றுநோயாளிக்கு ரூபாய் 100, விளம்பர செலவு ரூபாய் 5000 திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் எகத்தாளம். திமுக தலைமையின் ஒன்றிணைவோம் வா என்ற ஆப் மூலம், விருத்தாச்சலம் முல்லை நகரை சேர்ந்த ஒரு பெண் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன், மருந்து செலவுக்கு எனக்கு உதவுங்கள் என்று தொலைபேசியில் திமுக தலைவர் மு க ஸ்டாலினிடம் கூறியுள்ளார். உடனே திமுக தலைமை விருத்தாச்சலம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசனிடம் அந்தப் பெண்ணுக்கு உதவ சொல்லியுள்ளது. அதன்படி […]
Continue reading …
சென்னை,மே 18 தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மாநிலம் விட்டு மாநிலம் வந்து பணியாற்றும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உடனடி நிவாரணமாக ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் ஒன் லிட்டர் கொள்ளவு கொண்ட பாக்கேட் ஆயில் வழங்கிட ஏதுவாக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.8,51,85,000/ தொழிலாளர் ஆணையர் பெயரில் அரசாணை எண்.82 நாள்.03.04.2020 மூலம் ஒதுக்கப்பட்டது. தமிழகத்தில் கிட்டதட்ட […]
Continue reading …
சென்னை,மே 18 தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (18.5.2020) தலைமைச் செயலகத்தில், திருப்பூர் மாவட்டம், நல்லூர் கிராமத்தில் 336 கோடியே 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா வழியில் செயல்படும் தமிழ்நாடுஅரசு, மருத்துவக் கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக் கல்லூரிகளை எற்படுத்தி வருகிறது. அந்த வகையில், கடந்த மூன்று ஆண்டுகளில் 2017-18 ஆம் கல்வியாண்டில் புதுக்கோட்டையில் 150 மாணவர்கள் […]
Continue reading …
சென்னை,மே 17 இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதைக் கருத்தில் கொண்டு, கடன் தவணைகளை செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி 3 மாத கால அவகாசம் வழங்கியுள்ள நிலையில், அதை மதிக்காமல் வாகனக் கடன் தவணைகளை உடனடியாக செலுத்தும்படி கடன்தாரர்களுக்கு தனியார் வங்கிகளும், நிதி நிறுவனங்களும் நெருக்கடி கொடுத்து வருகின்றன. சில நிதி நிறுவனங்கள் வழக்க்கம் போலவே வாடிக்கையாளர்களுக்கு மிரட்டல் விடுத்து வருவது கண்டிக்கத்தக்கது ஆகும். கொரோனா வைரஸ் பரவல் அச்சம் மற்றும் ஊரடங்கு […]
Continue reading …
புது டெல்லி,மே 16 இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம், கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு, கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும், வழக்கமான ஜூன் 1-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு சற்று தாமதமாகத் தொடங்கக்கூடும். கேரளாவில் இந்த ஆண்டு 4 நாட்கள் தாமதமாக, ஜூன் மாதம் 5-ஆம் தேதி பருவமழை தொடங்கக்கூடும். இந்தியப் பருவமழை மண்டலத்தில், முதல்கட்டப் பருவமழை தெற்கு அந்தமான் கடல் பகுதியில் […]
Continue reading …
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் ட்ரம்ப்புக்கு எதிராக முன்னாள் அதிபர் ஒபாமா பிரச்சாரம் செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. முக்கியமாக அமெரிக்கா கொரோனாவால் அதிகமான பாதிப்புகளை சந்துத்துள்ளது, சுமார் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தாக்கி அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர், பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அமெரிக்காவில் மேற்கொள்ள வேண்டிய மருத்துவ நடவடிக்கைகளை காட்டிலும் சீனா மீது பழி சுமத்துவதிலேயே குறியாக […]
Continue reading …
புது டெல்லி,மே 13 பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கடலோர காவல்படையின் கப்பல் ”சாஷே” மற்றும் இரண்டு இடைமறிக்கும் படகுகள் சி -450 மற்றும் சி -451 ஆகியவற்றை கோவாவில் இருந்து இன்று காணொலி காட்சி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஐசிஜிஎஸ் சாஷே கப்பலானது கடற்கரையில் இருந்து கடலில் தொலைதூரத்திற்கு கண்காணிப்பு வேலையை மேற்கொள்ளும் கப்பல்களின் வரிசையில் முதலாவது கப்பல் ஆகும். முழுவதும் உள்நாட்டிலேயே அதாவது கோவா ஷிப்யார்ட் லிமிடெட்டில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்தக் கப்பலில் உலகத் […]
Continue reading …
சென்னை,மே 15 தமிழ் நாட்டில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு -3 காலகட்டத்தில் 33% பணியாளர்களைக் கொண்டு அரசுப் பணிகள் நடைபெற்று வருகிறது. சமூக விலகலை கடைப்பிடிப்பதற்காகவும் பொதுப் போக்குவரத்தில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், சனிக்கிழமைகளிலும் அரசுப் பணிகள் மேற்கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்தி 18.05.2020 அன்றிலிருந்து அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் வாரத்தில் ஆறு நாட்கள் வேலை நாட்களாக அறிவித்து அரசு முடிவெடுத்துள்ளது. மேலும் 18.05.2020 அன்றிலிருந்து தொகுதி-‘அ’ (Group-A) அலுவலர்கள் மற்றும் அந்த ஊதிய விகிதம் […]
Continue reading …
சென்னை,மே 15 தமிழகத்தில் கடந்த 51 நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தமிழக ஆளுநர், தமிழக முதல்வர் மற்றும் தலைமைச்செயலாளர் உட்பட அனைவரும் கொரோனா தொற்று நோய் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் முககவசம் அணிந்து அரசு பணிகள் செய்து வரும் இத்தருவாயில், எந்த சட்டத்தையும் மதிக்காமல் தான்தோன்றிதனமாக தன் இஷ்டத்திற்கு இந்நாள் வரை தொழிலாளர் துறையை சிரழித்து கொண்டியிருக்கும் ஆணையர் நந்தகோபால், பொதுமக்கள் பலரும் வந்து செல்ல கூடிய தனது அலுவலகத்தில் எந்தவித விழிப்புணர்வு இல்லாமல், முககவசம் அணியாமல் […]
Continue reading …
சென்னை,மே 15 ஏர் இந்தியாவுக்கு சொந்தமான AI 1244 விமானம் டாக்காவிலிருந்து வந்து, வியாழனன்று சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் சுமுகமாக வெளியேற சென்னை சுங்கத்துறை ஏற்பாடு செய்தது. 157 பயணிகளுடன் வந்த இந்த விமானம் மதியம் ஒரு மணிக்குத் தரையிறங்கியது. வந்தே பாரத் மிஷன் மூலம் சென்னைக்கு வந்தடைந்த ஏழாவது மீட்பு விமானமாகும் இது. இந்த மீட்பு விமானத்தில் மூலம் வந்த 157 பயணிகளில் 121 பேர் ஆண்கள் 36 பேர் பெண்கள். கோவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றி அனைத்து பயணிகளும் சுமுகமாக வெளியேற சென்னை விமான […]
Continue reading …