
பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நவாசுதின் சித்திக். இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் “சிங்காரம்” என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை மிரளவைத்தார். கோலிவுட்டில் அறிமுகமான முதல் படத்திலேயே அடித்து தூள் கிளப்பிவிட்டார். 46 வயதாகும் நடிகர் நவாசுதின் சித்திக்கிற்கு ஆலியா என்ற மனைவியும், மகன், மகள் என இரண்டு குழந்தைகள் இருந்து வரும் நிலையில், இந்த தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். ஆனால், […]
Continue reading …
புது டெல்லி,மே 21 உம்பன் புயல் பாதிப்புக் காட்சிகளை பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில், இயல்பு நிலை விரைவில் திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டிவிட்டர் பதிவுகளில் கூறியதாவது: ”உம்பன் புயல் பாதிப்புகளை துணிவுடன் எதிர்கொண்டதால், எனது எண்ணங்கள் ஒடிசா மக்கள் பற்றியே உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முடிந்த அளவு அனைத்து உதவிகளும் கிடைப்பதை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் உறுதி செய்வர். இங்கு நிலைமை […]
Continue reading …
சென்னை, மே 21 தமிழகத்தில் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் ((FEFSI) மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் (STEPS) சார்பில், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் சின்னத்திரை படப்பிடிப்பை மீண்டும் துவங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,சின்னத் திரையினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து, கீழ்காணும் நிபந்தனைகளுடன் படப்பிடிப்புகளை நடத்தலாம் என்று அனுமதி அளித்துள்ளார்கள், சுற்றுச்சுவர் […]
Continue reading …
டார்ச் லைட்டை மட்டுமே உடையாகக் கொண்டு பிரபல நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகை பூனம் பாண்டே அவ்வப்போது தனது சமூக வலைதளத்திலும் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் ஊரடங்கு உத்தரவை மீறியதாக கைது செய்யப்பட்டதாக ஒரு வதந்தி கிளம்பியது என்பதும், இதனை அடுத்து அவர் இந்த வதந்திக்கு மறுப்பு […]
Continue reading …
சிதம்பரம்,மே 20 அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, பிற அரசுத் துறைகளுக்கு பணி நிரவல் செய்யப்பட்ட 2 ஆயிரத்திற்கும் கூடுதலான பணியாளர்களை ஒப்பந்தக் காலம் முடிவடைந்த பிறகும், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடங்களில் பணியமர்த்த அண்ணாமலை பல்கலைக்கழகம் மறுத்து வருகிறது. செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை அண்ணாமலை பல்கலைக்கழகம் மீறுவது நியாயமற்ற செயலாகும். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டதைத் தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டில் அப்பல்கலைக்கழகத்தை தமிழக அரசே எடுத்துக் கொண்டது. பல்கலைக் கழகத்தில் அளவுக்கு […]
Continue reading …
கோவை ,மே 20 எங்கள் சமூகத்தை பொது இடத்தில் இழிவுபடுத்தி அவமரியாதை செய்து பிற சமூக மக்களிடம் பகை, வெறுப்பு உணர்வை தூண்டும் வகையில் பேசிய தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்பு திருத்த சட்டம் 2018 பிரிவு 3 (1) u இன் படி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம் இன்று 20/5/2020 ஆதிதமிழர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோவை மாவட்ட கழக செயலாளர் […]
Continue reading …
வில்லங்கமான கதைகளை, விசித்திரமாக எடுப்பதில் பெயர் பெற்ற இயக்குனர் மிஷ்கின், தற்போது கொரோனா ஊரடங்கில், 11 கதைகளை தயார் செய்து வைத்துள்ளாராம். விஷாலை வைத்து இயக்கிய, துப்பறிவாளன் – 2 படம் கைநழுவிப் போன நிலையில், தற்போது, சிம்புவை வைத்து படம் இயக்கும் முடிவில் மிஷ்கின் இறங்கியுள்ளார். அருண் விஜய்யும் கதை ஓகே சொன்னதாக சொல்லியிருக்கிறார், மிஷ்கின்.
Continue reading …
வண்டலூர் பூங்காவில் சுமார் 2,700 விலங்குகள் உள்ளன. இப்பூங்காவில் உள்ள விலங்குகளோடு ஒரு சிறந்த பந்தத்தை அமைக்கும் விதமாக ‘விலங்குதத்தெடுப்பு’ திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் ‘அனு’ என்னும் வெள்ளைப் புலியை மே முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 4 மாதங்களுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் தத்து எடுத்துள்ளார். 2018-ம் ஆண்டு முதல் இப்புலியை தொடர்ந்து தத்தெடுத்து வருகிறார். இப் பூங்காவில் ‘அனு’ புலியுடன் சேர்த்து மொத்தம் 14 வெள்ளைப்புலிகள் உள்ளன.
Continue reading …
ஒரு காலத்தில் சினிமாவில் கொடிகட்டி பறந்து, பின்னாளில் காணாமல் போன எத்தனையோ நடிகர்கள் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் 74 பிளாப் படங்களை கொடுத்து ஆடம்பர வாழ்க்கை வாழும் ஒரு நடிகர் இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை ரஜினிகாந்த். தென்னிந்தியா மட்டுமின்றி இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். இன்னும் சொல்லப் போனால், உலகளவிலும் பிரபலமடைந்தவர் தான் ரஜினி. ரஜினி படம் என்ற காரணத்திற்காகவே ரூ.100 கோடி வசூலை நிச்சயம் கடந்துவிடும் என்ற […]
Continue reading …
இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று காலை 11.00 மணிக்கு, விடுத்துள்ள புயல் எச்சரிக்கை, மேற்குவங்க கடலில் மையம் கொண்டள்ள உம்-பன் கடும் சூறாவளிப் புயலானது, கடந்த 6 மணி நேரத்தில், வடக்கு – வடகிழக்கு திசையில், மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வங்காள விரிகுடாவின் மேற்கு மத்தியப் பகுதியில், தெற்கு பாரதீப் (ஒடிசா) வுக்கு 480 கீ.மீ தொலைவிலும், தெற்கு – தென்மேற்கு திகா-வுக்கு (மேற்குவங்கம்) 630 கி.மீ தொலைவிலும் மற்றும் தெற்கு மற்றும் தென் – மேற்கு கேபுபாரா (வங்கதேசம்) 750 கி.மீ தொலைவிலும் இன்று […]
Continue reading …